UNLEASH THE UNTOLD

Tag: women

அவனது அந்தரங்கம் – அண்ணாமலையின் ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

வாழ்க்கையின் யதார்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய வயதில் இருக்கிறீர்கள். உங்கள் நண்பருக்குத் திருமணமாகி ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது. அவரது மகிழ்ச்சியைத் தள்ளி நின்று வாழ்த்துங்கள். ஒரு வீட்டுக்கு வாழப் போய்விட்ட அவருக்கு இனி மனைவியையும் மாமனார், மாமியாரையும் வீட்டையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்புகள்தாம் அதிகம் இருக்கும். அதை நீங்கள்தான் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை எனும் ஆதங்கத்தில்தான் இப்படி நண்பரைப் போட்டுப் பிடுங்குகிறீர்கள்.

அடிக்கிற கை அணைக்குமா?

உலகின் எண்பது நாடுகளில் உள்ள இருபத்தைந்து சதவீத மக்கள் ஆண் பெண்ணை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஐநா சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பாதிப்பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்றும், இது இயல்பான ஒன்று என்கிற மனநிலையிலும்தான் இன்னும் இருக்கின்றனர். முதல் முறை ஆண் கை ஓங்கும் போதே பெண் தனது ஆட்சேபத்தை வன்மையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இதுவே வாடிக்கையாகிவிடும். கல்வி, வேலை, பொருளாதாரம் என்று எதுவும் ஆணுக்கு பெண்ணை அடிப்பது தவறென்று போதிக்காதது பெரிய ஆச்சரியம்தான். கணவன் என்றாலே அடிக்கும் உரிமையும் தன்னாலே வந்துவிடுவதாகப் பெரும்பாலான ஆண்களும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலேயே ஊறிக் கிடந்த பெண்களும் எண்ணிக்கொள்வது தவறென்று உணர்த்த வேண்டும்.

டூர் அவ்வளவுதானா?

அருண் தவியாகத் தவித்தபடி இருந்தான். ட்ரெயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் ஸ்டேஷனுக்குப் போய் ட்ரெய்னைப் பிடிக்க வேண்டுமானால் இப்போது கிளம்பினால்தான் முடியும். ஏற்கெனவே இரண்டு கேப் கேன்சல் செய்துவிட்டுக் கிளம்பி விட்டார்கள்.

“அகிலா… டைம் ஆகுது…”

அகிலா திரும்பி முறைத்தாள். அப்பாவுடன் பேசும் போது யாரும் குறுக்கிடக் கூடாது. ‘வரேன் போ’ என்று சமிக்ஞையை ஆறாவது முறையாகச் செய்தாள்.

பெண்களுக்கென்று ஒரு ராஜ்ஜியம்!

மோசுவோ கலாச்சாரத்தில் உறவுகள் அனைத்தும் பரஸ்பர பாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. அது மங்கும்போது, அவரவர் பாதையில் முன்னெடுக்கிறார்கள். அவர்கள் மொழியில் கணவன் அல்லது தந்தை என்கிற வார்த்தையே இல்லை. மோசோ பெண்களால் குழந்தைகளைப் பெற முடியாவிட்டால், அல்லது ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொண்டால் என்ன செய்வது என்று யோசிக்கலாம். அவர்கள் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. முறைப்படி அவர்களின் தாய்வழி உறவினர் ஒருவரிடமிருந்தோ தொடர்பில்லாத மோசோ குடும்பத்திலிருந்தோ ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பார்கள். சீனர்கள் மோசோ பழங்குடியை ‘பெண்களின் ராஜ்ஜியம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பெண்களே இப்படித்தான்...

முதலில் உங்கள் சகோதரர் சிவாவுடனான உறவை முறித்துக் கொள்ளுங்கள். அவர் பேச்சில் உண்மை இருக்கிறதென்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் போய் காயத்ரியிடம் கேட்டால் என்ன நடக்கும்? வீண் சலசலப்பு உண்டாகும். கோபப்பட்டு அவர் திருமணத்தை நிறுத்தி விட்டால் உங்கள் வாழ்க்கையே வீணாகிவிடும். உங்கள் பெற்றோர் செய்த திருமணச் செலவெல்லாம் பாழாகிவிடும். முக்கியமாக உங்கள் குடும்ப கௌரவமே குலைந்துவிடும்.

அவள் என்ன செய்யப் போகிறாள்?

ஆரம்பத்திலிருந்து எல்லா விஷயங்களையும் அறிந்திருந்த தோழி அழுத்தந்திருத்தமாக, “வேண்டாம்னு சொல்லிருடி… நீ பட்ட கஷடமெல்லாம் போதாதா? இந்த சைக்கோ குடும்பத்துல உன் மகளையும் சிக்க வெச்சுறாதே” என்றாள். இந்தப் பெண் மறுக்கவே மீண்டும் பாராமுகமாகச் சென்று விட்டனர் கணவன் வீட்டார். அந்தக் குழந்தைக்கு சிறு செலவுகூடச் செய்யவில்லை அவர். இதனிடையே அந்தப் பெண்ணின் அம்மாவும் காலமானார். இவர்கள் இருவர் மட்டும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அதுவும் நெடுநாள் நீடிக்கவில்லை. அந்தக் குழந்தை கல்லூரிப் படிப்பை முடித்த உடனே மீண்டும் புகுந்த வீட்டார் படையெடுப்பு. அவரது சகோதரி மகனும் படிப்பை முடித்துவிட்டு வேலையில் அமர்ந்திருந்தான். அதைக் காரணம் காட்டி மீண்டும் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. மாமியார் இந்த முறை இந்தப் பெண்ணின் காலிலேயே விழுந்துவிட்டார்.

அந்த நாலு பேருக்கு நன்றி

அந்த நாலு பேர் இல்லாத சமூகம் இல்லை. ஏனெனில் அந்த நாலு பேர் யாரோவும் அல்ல. நாம்கூட யாரோ ஒருவர் வாழ்வில் அந்த நாலு பேரில் ஒருவராக இருக்கலாம். நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவும் நால்வரில் ஒருவராக இருப்போம். வலிகள் நிறைந்த ஒருவருக்கு அன்பும் ஆறுதலும் செலுத்தும் நால்வரில் ஒருவராக இருப்போம். ஒருவருக்கு நம்பிக்கையூட்டும் நால்வரில் ஒருவராக இருப்போம். நான்கு விதமாகச் சொல்லும் அந்த நாலு பேரில் நல்ல விதமாகச் சொல்லும் ஒருவராக நாம் இருக்க முயற்சிப்போம்.

வீட்டில் என்ன விசேஷம்?

தாமதமாக இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதின் பிண்ணனியில் இருப்பது அறியாமையும் அலட்சியமும். ஆனால், இதை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. உடலளவில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை உணர்வதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதன் பிறகு மருத்துவ ஆலோசனை, உடல் பரிசோதனை என்று மேலும் தாமதமாகி விடுகிறது. கடைசியாக ஐவிஎஃப் தவிர வேறு வழி இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, சிகிச்சைப் பெறுவதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. அதற்குள் வயது ஓடிவிடுகிறது. காலம் யாருக்காகவும் நிற்காது என்பதற்கு இதுவே சான்று.

எது தீட்டு?

அவள் சிறுவயதில் சில நேரத்தில் அவள் அம்மா மாதவிடாய்க்குச் ‘சுத்தமில்லை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, அதுதான் பெண்களுக்கு சுத்தம். அது நடந்தால் தான் உடம்புக்கு நல்லது என்று அவள் சொல்லி இருக்கிறாள்.

வெண்பாவும் பிரசன்னாவும்

மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே பெஞ்சில் அமர்ந்து சாப்பிடலாம். நான் – மீட்டேரியன்ஸ் தரையில் தான் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது பள்ளியின் விதி.