இப்படியும் அப்படியும் பேசும் ஊர்வாய்கள்...
மேற்படிப்புக்குத் தயாராக மருத்துவமனையை மூடிய போது, அது திறக்க எதிர்ப்பு தெரிவித்த அதே வாய்கள்தாம், ஏன் வருமானம் வரும் மருத்துவமனையைப் பொறுப்பில்லாமல் மூடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டன.
மேற்படிப்புக்குத் தயாராக மருத்துவமனையை மூடிய போது, அது திறக்க எதிர்ப்பு தெரிவித்த அதே வாய்கள்தாம், ஏன் வருமானம் வரும் மருத்துவமனையைப் பொறுப்பில்லாமல் மூடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டன.
ஒரு பெண்ணின் பொதுவான மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை. அப்போது ஹார்மோன்கள் பலவிதமான மாற்றங்களுக்கு உட்படும். அதிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாதவிடாய் முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். மூன்றாவது வாரத்தில் உச்சத்திற்குப் போகும், பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பிக்கும். நான்காவது வாரத்தில் படிப்படியாக அதல பாதாளத்துக்குச் சரியும் போதுதான் இந்த ‘மூட் ஸ்விங்’ மெல்ல எட்டிப் பார்க்கும். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுவலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி, மார்பகங்கள் இரண்டும் கல் போல கனப்பது போன்றவையும் தோன்றலாம்.
பெண்கள் வேலைக்குப் போவது குறிப்பாக ஆசிய நாடுகளில்தாம் குறைவாக இருக்கிறது. குடும்பம், கலாச்சாரம், மதம், சமய நம்பிக்கைகள் காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால் பெண்களேகூட என் குழந்தையை, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் எனக்கென்ன சிரமம், என் கடமை, பெருமை என்றெல்லாம் பேசுவதுண்டு. 16 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா வேலைக்குப் போய் சம்பாதிப்பவராக இருந்தாலும்கூட கணவரும் மகளும் மதிக்காமல் இருப்பது போல காட்சிகள் இருக்கும். பல குடும்பத்தில் நடக்கும் உண்மை நிகழ்வு இது. பெண்களை சமூக ஊடகங்களிலும் வீடுகளிலும் மட்டம் தட்டிப் பேசுவதை ஆண்கள் நகைச்சுவை என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் வீட்டு வேலை மட்டுமே செய்யும் ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ்வது என்பது ஆண்கள், பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ளது என்று ஒப்புக்கொள்வதைப் போல குறைவான சாத்தியமுள்ள விஷயம்.
1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். அந்த உரிமையைப் பெற்ற மிகச்சில பெண்களுக்கான நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக 2017ஆம் ஆண்டு, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல்’ மற்றும் ‘குறிப்பிடத்தக்க’ பெண்களுக்கான கண்காட்சியாக இது உள்ளது. இங்கு பெண்கள் வாக்குரிமை பெற்றதற்கான நீண்ட வரலாறு குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வருண் மனைவி தன்னை அழைத்துப் போக வந்ததை எண்ணி உள்ளூரப் பெருமையுடன் மூட்டைகளைக் கட்டத் தொடங்கினான். அடுத்த வீட்டு அண்ணன் சேகர் வந்து உதவி செய்து கொண்டிருந்தான்; நிறைய புத்திமதிகளுடன்.
புது ஆண் ஒருவனைத் தன் பழகிய அறைக்குள் எதிர்பார்த்திருந்தாள் லதா. தள்ளியிருத்தலே பெருமதிப்பு என்றும் முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் தன் உடல் அப்படிச் சொல்லுமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்தது. மணப்பந்தலில் அவன் வாசம் அவளைத் துளைத்தபடியே இருந்தது. உடல் ஒரு போக்காகவும் அவள் ஒரு போக்காகவும் போய்க்கொண்டிருந்தார்கள்.
தீர்ப்பின்படி, சொத்து கணவனின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும், அது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உழைத்து வாங்கியது என்றே கருதப்படும். இல்லத்தரசி நேரம் பார்க்காமல் பல பணிகளைச் செய்கிறார். அவர்களுக்கு நிர்வாகம் செய்யும் பண்பு, சமைக்கும் திறன், பொருளாதாரம், கணித அறிவு எல்லாம் அவசியமாகிறது. வீட்டைப் பார்த்துக்கொள்ளுதல் என்பதில் அடிப்படை மருத்துவமும் அடங்கி இருக்கிறது. அதனால் மனைவியின் இந்தப் பங்கை ஒன்றுமில்லாதது எனக் கூற முடியாது. கணவன் சம்பாதித்த சொத்தில் சம உரிமை மனைவிக்கு உள்ளது. மனைவி இல்லாமல் அதை அவர் சம்பாதித்து இருக்க முடியாது. பெண்கள் குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும்போது இறுதியில் அவர்களுக்கு எதுவும் இல்லை எனக் கூற முடியாது. நீதிமன்றங்களும் பெண்கள் தன் தியாகத்துக்குச் சரியான பரிசு பெறுகிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.
நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.
“இல்லம்மா, காலம் கெட்டுக் கிடக்கு. சோஷியல் மீடியா ரொம்ப மோசமா இருக்கு. பொண்ணுங்களுக்கென்ன எப்படி வேணா இருப்பீங்க. வீட்டு ஆம்பளைங்க மேல ஒரு சொல்லு யாராவது சொல்லிட்டா குடும்ப கௌரவம் கெட்டுப் போயிடும்மா. அதுக்குதான் சொல்றேன். கொஞ்சம் கண்டிச்சு வையி.”
2021ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரப்படி தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்கள் 72.5சதவீதம், பெண்களோ 27.5 சதவீதம். ஆனால், அறிவியலுக்குச் சம்மந்தமே இல்லாத நம் மதங்கள் என்ன சொல்கின்றன? முதலில் படைக்கப்பட்டது ஆண்தான் என்றும் அவனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தான் என்றும் பெண்ணைப் பாதுகாப்பதே ஆணின் தலையாய கடமை என்பது போலவுமான உருட்டுகளை உருட்ட, உண்மைக்குத் தொடர்பே இல்லாத கற்பிதங்களை மனிதர்கள் கடைப்பிடிப்பது இன்றும் தொடர்கிறது.