UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

ஒரு தேசம்... ஒரு மொழி... ஒத்து வருமா?

பேச்சு மொழி ஓடும் நதி போன்றது. எழுத்து மொழியோ அந்த நதியில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பது அறிஞர் கூற்று. குளிரால் நதிநீர் உறைந்து பனிக்கட்டியானது போல் அடுத்த கட்டத்துக்கு மொழி நகர்ந்த போது பேச்சு மொழி இறுகி எழுத்து வடிவம் உண்டானது. இலக்கணங்களும் இலக்கியங்களும் தோன்றின. இப்படித்தான் ஒவ்வோர் இனக்குழுவுக்கும் ஒரு மொழி உண்டானது. அது வெறும் மொழியல்ல. அந்தக் குழுவினரின் வாழ்வியல் முறை, அவர்களின் உணவுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அன்றாடச் செயல்கள், அவர்கள் உபயோகித்த பொருள்கள், அவற்றின் குணங்கள் என்று நீண்டுகொண்டே போகும்.

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாதது ஏன்?

10% எண்ணிக்கையுள்ளவை தான் ஊடகங்களின் வழியாக வெளியே வருகின்றன. 90% வன்முறைகள் வெளியே தெரியாமலேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது மறக்கப்படுகின்றன.

நாங்கள் ஏன் அகதிகளானோம்?

“எப்படியாவது தப்பித்தால் போதும் எனக் கிடைத்த விசாவில் உலகின் எந்த மூலைக்கும் போக சனம் துடிப்பதைக் கண்முன்னால் கண்டேன் ரமா, குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு எதோ ஒரு நாட்டுக்கு விசா கிடைத்தால், அவர் மட்டுமாவது தப்பிக்கட்டும் என்று மொத்தக் குடும்பமும் வழியனுப்ப, இனி குடும்பத்தைக் காண்போமா, வாழ்க்கையில் ஒன்று சேர்வோமா என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல், கதறித் துடிக்கிறார்கள்.”

மனமே கோயில்

வாழ்வில் கஷ்டங்கள் நிறைந்தவர்கள் அல்லது கஷ்டங்கள் இருப்பதாகக் கற்பிதம் செய்துகொண்டவர்கள் இத்தகைய மாய வலைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் இருப்பவர்களும் இந்தப் போலிச் சாமியார்களிடம் சிக்கிக்கொண்டு வாழ்வைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.    

அரசியல் உரையாடலைப் வளரிளம் பருவத்தில் தொடங்குவோம்!

அரசியலுக்கும் அரசியல் கட்சி சார்ந்து பேசறதுக்குமான வித்தியாசத்தை அனைவரும் முதலில் உணரணும். பதின்ம வயதுல இந்த உலகத்துல நடக்கிற விசயங்களைக் கேள்வி எழுப்பும், கூடவே தனக்கான ரோல் மாடலைத் தேர்வு செய்து தனக்கான அடையாளத்தைக் கண்டடையத் தொடங்கும் தருணம் அது.

ஆவே ஆவே மரியா வாழ்க வாழ்க மரியா!

தேவாலயப் பகுதியைக் கைப்பற்றிய ராணுவத்தினர் பெரும் ராணுவ வெற்றியாக அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்துவந்த மடு இலங்கை ராணுவத்தினர் வசம் வந்தது. மடு தேவாலய நுழைவாயில் அருகில் ராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.

எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் உயர் கல்வியைச் சாத்தியப்படுத்துங்கள்!

பெண்கல்வியைப் பள்ளிக் கல்வியில் 100% சேர்க்கை என்று உறுதி செய்தாலும் உயர்கல்வியில் சேர்க்கை பாதியைக்கூட எட்ட முடியாத வகையிலேயே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியக் காரணம், பொருளாதாரப் பிரச்சனைதான்.

எரியும் நினைவுகள்

வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிக்கத் தவறுகின்ற போது மீண்டும் மீண்டும் அந்தத் தவறான வரலாறு மீட்டப்படும் என்பதற்கு இந்தத் தேசத்தின் வரலாறு சான்றாக இருக்கிறது. எந்த மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி தாங்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்களோ, அந்த மக்களே இன்று அவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாறியுள்ளனர்.

இந்தியாவில் பெண்களின் நிலை என்ன?

ஒவ்வோர் இந்திய வீட்டிலும் மனுஸ்மிருதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாய்மொழியாகவும் வாழ்வியல் வழியாகவும் சமூக உரையாடல்கள் வழியாகவும் இன்றும் மனுஸ்மிருதி புழக்கத்தில்தான் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் சனாதன தர்மத்தில் உள்ள ‘வர்ணாஷ்ரம தர்ம’ சாதி அமைப்பால் ஒடுக்கப்படுகிறார்கள்.

ஒற்றை ரோஜாக்கள்

நிறைய உடன்பிறப்புகளோடு இருந்தாலும் ஒற்றையாக இருந்தாலும் பெற்றோரின் வளர்ப்பு முறையே அவர்களின் குணாதிசயங்களைத் தீர்மானிக்கும்.