UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

தினமும் என்னைக் கவனி...

நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார்.

அடையாள அரசியல் – சாதகமா, பாதகமா?

அவரவர் பிரச்னைகளை அவரவரே போராடித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று இருந்தால் சமூக மற்றம் நிகழவே நிகழாது. சுரண்டல் இல்லாத சமுதாயத்தைப் படைக்க அனைவரும் அவரவர் அடையாளங்கள் மத்தியில் கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அனைத்து மக்களும் சமம்தான் என்கிற எண்ணத்தோடும் தோழமை உணர்வோடும் ஒன்று சேர்ந்து போராடுவதே தீர்வாகும். மனிதனாக ஒன்றிணைவோம் வாரீர்.

மல்லிகா

“சாதி கெட்ட நாய்களுக்கு எங்க சாதியில் பொண்ணு கேட்குதோ? ஒண்ணுந்தெரியாத எம்மவளை மயக்கி இழுத்துட்டுப் போகச் சொல்லிட்டு இப்ப குடும்பமா சேர்ந்து நாடகமாடறீகளோ..? வயிறெரிஞ்சி சொல்றேன்…குடும்பத்தோட நாசமாப் போயிடுவீங்க”, என சாபமிட்டு அழுதுகொண்டே போய்விட்டாள்.

சோலையம்மாள்

ஒருநாள் அவன் எண்ணிலிருந்து இவளுக்கு வாட்சப்பில் செய்தி வர ஆர்வமாய் திறந்து பார்த்தவளின் உடல்  குலுங்கியது. அன்றொருநாள் அம்மாவின் போனில் பார்த்ததுபோலவே ஆபாசமான படங்கள். ஆனால் அன்றைய அருவருப்பு இப்போது இல்லை. வாய் தன்னிச்சையாக “ச்சீய்…” என்றாலும், அந்த வயதிற்கேயுரிய ஆர்வத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்தாள். இதழ்களில் அவளையுமறியாமல் புன்னகை வழிந்தது. ஒரு ஹார்ட்டின் மட்டும் அனுப்பினாள். 

நம் குழந்தைகளைச் சரியாக வளர்க்கிறோமா?  

பெற்றோர் தங்களுக்குள் ஒரு சுய அலசல் செய்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சர்வாதிகாரம் செய்யும் பெற்றோரா?, நடுநிலையுடன் நடந்து கொள்ளும் பெற்றோரா?, நட்புடன் பழகும் பெற்றோரா?, எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற பெற்றோரா? இதில் நாம் எந்த வகை என்று எந்தவித சமரசமும் இன்றி ஒப்புக் கொள்ள வேண்டும்.

"பெண்களுக்குத் தொழில்நுட்பம் தெரியாது..."

மேனல் மற்றும் மேன்ஃபரன்ஸ் போன்றவற்றால், பெண் விஞ்ஞானிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. அவர்களது சாதனைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இதனால் துறைசார் முன்னோடிகள் என்கிற இடத்திலும், துறையின் முக்கியப் பங்களிப்பைத் தந்தவர்கள் என்கிற பட்டியலிலும் பெண்களின் பெயர்கள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. காலப்போக்கில் பெண்களின் பங்களிப்பு மறைந்தே போகிறது.

நளினி

“அதுசரி… படிக்கச்சொல்ல வேண்டிய டீச்சரே இப்படிச்சொன்னா வெளங்கிப்போயிடும், கோலமும் அலங்காரமும் தான் நாளைக்கு அவளுக்கு சோறு போடப்போகுதா என்ன?”



காளீஸ்வரி

When I was a baby You would hold me in your arms என்று தொடங்கிய அந்த ஆங்கிலப் பாடலை சாரதா டீச்சர் விவரித்துக் கொண்டிருக்க, கண்ணிசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காளீஸ்வரி. காளீஸ்வரிக்கு…

புலம்பெயர் தமிழர்களின் அடையாளச் சிக்கல்கள்

இந்தத் தனிமைதான் நாம் இந்தச் சமூகத்தில் யார் என்கிற கேள்வியை உருவாக்கும். அடுத்து இந்த அந்நிய சமூகத்தில் நமக்கு என்ன அங்கீகாரம் என்று கேள்வி கேட்கவைக்கும். இந்தக் கேள்வி அடுத்ததாக எந்த அடையாளம் மூலம் நாம் அங்கீகாரம் பெற முடியும் என்று யோசிக்க வைக்கும். அப்போது நாம் எது நமக்குப் பெருமை தரும் அடையாளம் என்று நம்புகிறோமோ அந்த அடையாளத்தை முன்நிறுத்தி பேசுவோம். பெரும்பாலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்பவர்கள் மொழி வழியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர். குறிப்பாக, உலகின் பழமையான மொழி என்கிற பெருமையைக் கொண்டுள்ள தமிழர்கள் மொழிப் பற்றின் அடிப்படையில் தங்களை முன்னிருத்திக்கொள்வர்.படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ

அர்த்தமுள்ளதா இந்த மதங்கள்?

பெண்கள் அதிகளவில் சாமியார் மடங்களிலும், கோயில்களிலும் குவியக் காரணம் என்னவென்றால் மூச்சுமுட்ட வைக்கும் வீட்டுச் சிறையில் இருந்து கொஞ்ச நேரமேனும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான். சக பெண்களைப் பார்க்கவும், கொஞ்சம் வெளிக் காற்றைச் சுவாசிக்கவும், சிறிது நேரமேனும் தனிமையில் இருக்கவுமே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அது புரியாமல் இந்தச் சாமி சமாச்சாரங்களை எல்லாம் பெண்களின் தலையில் ஆண்கள் கட்டக் காரணம் என்னவென்றால் பெண்கள்தாம் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்த தலைமுறைக்கு எளிதில் கடத்துகிறார்கள் என்பதால் தான்.