UNLEASH THE UNTOLD

Top Featured

'பாஸிட்டிவ்' கௌசல்யா

கௌசல்யாவுக்குத் திருமணம் முடிந்த 20 நாட்களில் காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் போனதும், பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவைக் கண்ட மருத்துவர், கெளசல்யாவின் கணவரை அழைத்து வரச் சொன்னார். அவருக்கும் பரிசோதனை செய்து பார்த்ததில், இருவருக்கும் எச்ஐவி இருப்பது தெரியவந்தது. கௌசல்யாவின் கணவருக்குத் திருமணத்திற்கு முன்பே எச்ஐவி இருந்திருக்கிறது. அதனை மறைத்து அவருக்குத் திருமணம் முடித்துவிட்டார்கள்.

நகரத்தைத் தகர்க்கலாம்; கருத்துகளைத் தகர்க்க முடியாது!

முதல் உலகப்போரில் ராணுவ வீரர்கள் எப்படிப் பதுங்கு குழியில் இருந்து வாசித்தனர் என்பதை அஹ்மத் தெல்ஃபியிடம் கூறுவது அத்தனை உணர்ச்சிப்பூர்வமானது. கேப்டன்களாகப் பணிபுரியும் தங்கள் கணவருக்கு மனைவிகள் எவ்வாறு புத்தகத்தை அனுப்பினர் என்பதும், அதனைப் பதுங்குக்குழியில் இருந்து வாசித்த முறையும், பிரபலமான ஃபிராங்களின் சொசைட்டி 350 நூலகங்களைப் பாசறையில் தொடங்கியது யுத்தமுனையில் வீரர்கள் மனப்பிறழ்ச்சி அடையாமல் காத்தது என்றால் மிகையல்ல. அந்த வாசிப்புதான் தப்பியதற்கும் நிலை தடுமாறாதிருக்கவும் உயிர் வாழ்வதற்கும் தேவையாயிருந்தது.

குட்டிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம்...

‘பாவம் அம்மா. நம்ம நல்லதுக்கு தான் எதுனாலும் பண்ணுவாங்க. நான் வருத்தப்படக்கூடாதுனு தான் சொல்லாம இருந்திருக்கும்.’ இப்போது குட்டிக்கு அம்மாவை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

ஈஸ்ட்ரோஜன் என்ன செய்யும்?

ஈஸ்ட்ரோஜன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் ஹார்மோன். அது இனப்பெருக்க வயதில் பெண்களுக்கு மிக அதிகமாகச் சுரக்கும். பெண்களின் மார்பு வளர்ச்சி, பருவம் அடைதல், பருவம் அடையும்போது உருவாகும் முடி, பெண் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.

பெண்கள் பேய்களைப் பிடித்துக்கொண்ட கதை

அமைதி, மென்மை, கற்பு என்றெல்லாம் அடக்கியாளப்பட்ட பெண்கள் பேய் பிடித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டவுடன் அவற்றிலிருந்து விடுதலையடைகின்றனர். அதுவரையிலும் வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைத்திருந்த கோபங்களையும் கொண்டாட்டங்களையும் ஆற்றலையும் பேயினூடனாக வெளிப்படுத்துகின்றனர் என்பதே உண்மை.

நான் எனும் பேரதிசயம்!

ஜோசப் மர்ஃபி என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ என்ற நூலில் மனதை, ‘எண்ணமும் உணர்வும் சக்தியும் ஒளியும் அன்பும் அழகும் நிறைந்த உள் உலகு’ எனக் குறிப்பிடுவார். மேலும் ‘அது கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தது. எந்த ஒரு பிரச்னைக்கான தீர்வையும் எந்த ஒரு விளைவுக்கான காரணத்தையும் உங்கள் ஆழ்மனதில் கண்டறியலாம்’ எனச் சொல்வார்.

நீண்ட காலம் உயிர் வாழும் பெருக்குமரம் எனும் அதிசயம்!

நெடுந்தீவிலுள்ள மற்றொரு பெருக்குமரம் ஆறேழு பேர் உள்ளே சென்று நிற்கக்கூடிய அளவுக்கு மரத்திற்குள் குகை போல, தாராள இடவசதியுடன், மிகுந்த குளிர்ச்சியுடன் காணப்படுமாம். போர்த்துகீசியம், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் பெருக்குமரத்தினுள் ஒளிந்திருந்து அவர்கள் மீது நம்மவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

திக்குத் திசை தெரியாதவர்களா பெண்கள்?

முதலில் வயதுக்கு வந்த பெண்ணை ஏன் தனியாக அனுப்புவதில்லை? அவளுக்குப் பாதுகாப்பு வேண்டுமாம். எதற்குப் பாதுகாப்பு? வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய so called ‘கற்பு’க்குப் பாதுகாப்பு அளிக்கிறார்களாம்.

மாணவர்கள் வன்முறை யார் பொறுப்பு?

40 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ள நமது மாநிலத்தில் மிகச் சிறிய எண்ணிக்கையில் பத்துக்கும் குறைவாக வந்துள்ள இந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு மொத்தமாக அரசுப் பள்ளிகளே சரியல்ல என்ற கருத்தைப் பரவலாக்குவதும், 2 வீடியோக்களில் பெண் குழந்தைகளின் செயல்களை வைத்து பெண் பிள்ளைகளின் ஒழுக்கத்தை விமர்சிப்பதும் எந்த விதத்தில் சரி?

தமிழணங்கு: பண்பாட்டுக் கைப்பற்றலின் ஓர் உதாரணம்

பண்பாட்டுக் கைபற்றலை, அதற்கு நேர்மாறான பண்பாட்டுப் பாராட்டுதல் என்னும் பரஸ்பர பகிர்வு கொண்டு நாம் எதிர்கொள்ளலாம். பண்பாட்டுப் பாராட்டு என்பது நம் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கலை மற்றும் பண்பாட்டை, உண்மையிலேயே மதித்துப் பாராட்டுவதாகும். இது ஒரு பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலானது. இந்தப் பரஸ்பர புரிதலுக்கு, மற்ற பண்பாட்டின் வரலாற்றைக் கொஞ்சமேனும் அறிய வேண்டியது அவசியமாகிறது. இது ஒருவரின் சொந்த அல்லது மற்றவர்களின் வரலாற்றை அறிந்துகொள்வது என்று மட்டும் அர்த்தமல்ல. இது நமது அனைவரின் வரலாற்றையும் சேர்த்துக் குறிக்கிறது.