ஓசோன் பிரச்னையில் மூழ்கிக் கிடந்தோம்
“நம் வீடு தீப்பற்றி ஏரியும் போது என்ன செய்வோம்? அதையே இப்போது செய்ய வேண்டும். ஏனென்றால் , நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது”.
“நம் வீடு தீப்பற்றி ஏரியும் போது என்ன செய்வோம்? அதையே இப்போது செய்ய வேண்டும். ஏனென்றால் , நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது”.
“ஐ… அம்பேத்கர் தாத்தா… கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! நந்திஷ் சொல்லி குடுத்தாங்க ”, என்றான் சித்து.
ஈழக்காசு, ஈழக் கழஞ்சு, ஈழச்சேரி, ஈழத்துணவு, ஈழ மண்டலம் என்று பல்வேறு சொற்றொடர்கள் தமிழர்களின் வாழ்வியலில் தொடர்ச்சியாகப் பயன்பட்டுத்தான் வந்துள்ளன. ஈழ கேசரி, ஈழ நாடு போன்ற பத்திரிகைகள் தோன்றிய காலத்தில்கூட, ஈழம் என்பது முழுத் தீவையுமே குறித்தன. அரசியலில் இன வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தபோது தான், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்க, ‘தமிழீழம்’ என்ற சொல் அறிமுகமானது.
அதிகரித்துள்ள பல தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர கடன் அட்டைகளையும் லோன்களையும் தாராளமாக வாரி வழங்கிவருகிறது. இதனால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. எல்லாக் கடைகளிலும் உணவகங்களிலும் மக்கள் தாராளமாகச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். கிரெடிட் கார்டுகளின் வருகையால் நடுத்தர மக்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தைவிட வசதியான ஒரு வாழ்க்கைத் தரத்தை வாழ்ந்து பழகிவிட்டார்கள்.
மெனொபாஸ் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க சக்தியை முடித்துக்கொள்கிறது. ஓவரியன் தன் செயற்பாடுகளைக் குறைத்துக்கொள்கிறது.
இதெல்லாம் ஒரு நாளில், வாரத்தில், மாதத்தில் நடப்பதில்லை. இது பல கட்டங்களில் நடைபெறும். எப்படிச் சூரியன் உதிப்பதும் மறைவதும் சட்டென இன்றி படி நிலைகளில் இருக்கிறதோ அப்படித்தான்.
பெண்களுக்கு இன்னும் என்னதான் சமத்துவம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு, ‘ஒரு நாட்டின் பிரதமராக வருவதற்கு இந்திராகாந்திக்குப் பிறகு ஒரு திறமையான பெண் கூடவா இல்லை’ என்ற ஒற்றைக் கேள்வி போதாதா? இப்படியாக அந்தத் திரைப்படம் பேச வேண்டியதை அழகாக, அதே நேரத்தில் சமூகத்தில் அழுத்தமாகப் பேசிச் சென்றது.
தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் அதிகப் பற்றுடன் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம், நல்லது, கெட்டது என்று எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது மனரீதியாக நல்லது. மனதில் படும் விஷயங்களை அப்படியே வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை மூளைக்கு எடுத்துச் சென்று அவதிப்படக் கூடாது. முகத்தில் புன்னகையைப் படர விட்டுக்கொண்டால் முதுமை அதைத் தாண்டி நம்மிடம் வரவே வராது.
ஓர் ஆண், அவனது மனைவி குடும்பத்தோடு ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் அவனுக்குப் பெயர் ‘வீட்டோட மாப்பிள்ளை’. ஏன் இங்கும் கூட்டுக்குடும்பமாகத் தானே இருக்கிறார்கள்? இதை மட்டும் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் சொல்கிற மாதிரி கூடி தானே இங்கேயும் வாழப் போகிறார்கள்?
கொடும் குளிர் தாக்கும் பனிச்சாரல்களில் ஆடிப்பாடும் போது கனவென்றாலும் நாயகருக்குக் கம்பளி கோட்டும் பூட்ஸும் தேவைப்படுகையில், சென்னை வெயிலில் அணிவது போல் கையில்லாத கவர்ச்சி ரவிக்கைகளும் கொலுசு மட்டும் அணிந்த பாதங்களுடனும் நம் நாயகியர் முகமலர்ச்சியுடன் ஆடிப்பாடுவதைக் கண்டதில்லையா?
நாங்கள் கனமான துணியில் தாவணி அணிவதால், ‘கோணியை சுற்றி இருக்கிறீர்கள்’, என கேலி செய்வார்கள். இதுவும் ஒருவிதமான discrimination தான்!