UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

கேளடா மானிடவா-2

கர்ப்பப்பை காரணமாக அதே வயது ஆணை விடச் சிறிய கிட்னியைக் கொண்டிருந்தாலும், சிறுநீரை அடக்கிக்கொள்ளும் ஆற்றல் பெறாவிட்டாலும், திருமணமாகி குழந்தை – அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு தும்மினாலும் சிறுநீர் கழிந்துவிடும் என்கிற உடலமைப்பைப் பெற்றிருந்தாலும், ஆணை விட அதிகபட்ச நியாயங்கள் இருந்த போதிலும், ஏன் எந்தப் பெண்ணும் தெருவில் சிறுநீர் கழிப்பதில்லை?

இயற்கை எனும் சொர்க்கம்

மழை பிடித்தது. நிலா பிடித்தது. “நிலாச்சோறு மாற்றுதல்” என்று ஒரு விளையாட்டு 15 நாட்களுக்கு நடக்கும். வாசலில் முக்காலியில் சாணத்தால் செய்த பிள்ளையார் வைத்து, அன்று மாலை வீட்டில் சமைத்த உணவை எச்சில் படாமல் அவரவர் வீட்டில் இருந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து அந்த முக்காலியைச் சுற்றிலும் வைத்துக் கும்மிப் பாடல் பாடி விளையாடுவார்கள். கும்மி முடிந்து நிலவொளியில் நிலவுக்குப் படைத்த உணவைப் பகிர்ந்து உண்ணுவார்கள். அது முடிந்து தூக்கம் வரும் வரை விளையாட்டுகள் தொடரும். 15ஆவது நாள் மாவிடித்து உலக்கை வைத்து அந்த நிலாச்சோறு மாற்றும் வைபவம் முடியும்.

சும்மா கிடைக்குமா சான்ஸு?

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 5,65,639 என்கிறது அரசு புள்ளி விபரம். இது தவிர தனியார் பள்ளி ஆசிரியர்கள் இரு மடங்கு அதிகம். “இத்தனை ஆசிரியர்கள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி ஐநா வாய்ப்பு? எது உங்களை ஐ.நா. ஹெவியா லைக் பண்ண வெச்சுது? அரசியலா? பணமா? குடும்பமா? யாரோட சப்போர்ட்ல உங்களை தேர்ந்தெடுத்தாங்க? என்ன பின்புலம்?”, ஐந்தாண்டுகளாக தொடரும் கேள்விக் கணைகள். ஆனா ஒரு புலமும் இல்லை என்பது தான் நிஜம்.

எங்களுக்கு உணவில் சமத்துவம் வேண்டும்

“எல்லா குடும்பத்துலயும் எப்பவும் உணவு சம பங்கீட்டை வகுப்புல பண்ற உணவுத்திருவிழா மாதிரி தினம் தினம் கொண்டாடணும். ஆண், பெண் இருவர்கிட்டயும் பேசி புரிய வைப்போம். இருவரும் சேர்ந்துதான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்”, என நம்பிக்கையூட்டினான் உதயா.
குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டியது அரசாங்கம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பும் கடமையும் கூட. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கற மாதிரி சத்துணவு திட்டத்தை மேம்படுத்தி இன்னும் வேறு திட்டங்களை அறிவிச்சா நல்லா இருக்கும். பெண் குழந்தைகள் மீதான உணவு பாகுபாடு நீங்கி சமத்துவம் துளிர்க்கட்டும் சமூகத்தில்”, என்று முடித்தது டுமாங்கி.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

10 வருடங்கள் முன் எங்கள் கல்லூரி வகுப்புத் தோழிகள் எல்லாம் சந்திக்கலாம் என ஏற்பாடு செய்த போது வந்தவர்கள் வெறும் 5 பேர்தான், உள்ளூரிலேயே இருந்தாலும் குடும்பம், வீடு என்று சொல்லி வராமல் விட்டார்கள். அதன் பின் ஒவ்வொரு வருடமும் யார் வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் அந்த சந்திப்பை கட்டாயம் வைத்தோம். இறுதியாக ஒரு வருடத்திற்கு முன்தான் அத்தனை மாணவிகளும் சேர்ந்த சந்திப்பு சாத்தியப்பட்டது. அனைவரையும் ஒரே நாள், ஒரே சமயத்தில் வர வைப்பதற்கு எங்களுக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது.. இவையெல்லாம் பெண்களே தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வளையங்கள். இதனால்தான் அவர்கள் மன உளைச்சலுக்கும் அதிகம் ஆளாகிறார்கள்.

அது என்ன 'வீட்ல விசேஷமாங்க'?

கருவுறுவதற்குத் தயாராக இல்லாத, விருப்பம் இல்லாத பெண்ணை நிர்ப்பந்திப்பது மனித உரிமை மீறல். கருவுறுவது எப்படி ஒரு பெண்ணின் தேர்வாக இருக்க வேண்டுமோ, அதே போல் கருவை கலைப்பதும் அவள் தேர்வாக இருக்க வேண்டும்.

டைட்டானிக்கின் ஹீரோயின் யார்?

கடைசியாக, “போட்டை திருப்புகிறாயா? அல்லது உன்னை கடலில் தூக்கி வீசட்டுமா?”, என்று தன் முழு 5 அடி 10 அங்குல உயரத்துக்கும் உடல் நிமிர்த்தி படகின் கேப்டன் ராபர்ட் ஹிட்சென்சை அவர் கேட்க, லைஃப் போட் டைட்டானிக்குக்கு திரும்பி இன்னும் பலரை மீட்டது! கார்பேத்தியா கப்பல் டைட்டானிக்கிலிருந்து மீண்டவர்களை அமெரிக்காவில் இறக்கிவிடும் வரை- தப்பியவர்கள் ஒவ்வொருவருக்கும் யாராவது பொறுப்பானவர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை, கார்பேத்தியாவிலேயே சில வாரங்கள் தங்கி உதவினார் மாலி!

ஒரு கதை சொல்லட்டா, ஃப்ரெண்ட்ஸ்?

“பொம்பளபுள்ள, ஆம்பளைக்கு சமமா போய் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட ஊர்ப் பெருசுகளைக் கண்டுகொள்ளாமல், “ நீ நெறய படிக்கணும்” னு கழுத்தப்பிடிச்சு லைப்ரரிக்குள்ள தள்ளிவிட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம்.

மோதலும் காதலும்

உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று திரும்பும் தாத்தாவின் எடையும், பாட்டியின் எடையும் சமமாகவே இருக்கும். வலியோ வேதனையோ அவர்களுக்குள்ளாகவே பகிர்ந்து கடந்து விடுவார்கள். அன்பான வார்த்தைகளால் பேசியோ, அருகருகில் அமர்ந்தோ கூட அவர்களை கீதா பார்த்ததில்லை.

'டி' போட்டவரை 'டா' போட்டு அழைத்த முதல் பெண்ணிய போராளி!

மாபெரும் கவிஞர் ஒருவர் ‘டி’ போட்டு அழைத்ததாகவும் அதற்குப் பதிலாக ‘டா’ போட்டு பேசியது மட்டுமல்லாமல், வாய்க்கு வந்தபடி வசை பாடிய மிகவும் சுவாரசியமான பெண் ஒருவர் இருந்திருக்கிறார்! அப்படிப் பட்ட புரட்சிப் பெண்ணாக வலம் வந்தவர் கூழுக்கும் கஞ்சிக்கும் கவி பாடிய ஒளவையார். ‘டி’ போட்டு பேசியவர் யார்? சோழ மன்னனின் அவைப் புலவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான்!