UNLEASH THE UNTOLD

Month: April 2022

உணவுல ஒரு உறவு இருக்குது...

தாய்நாட்டின் சொந்த உணவுகளை, சமையல் முறைகளை இறுகப் பற்றியிருக்கும் ஈழத்தமிழர்கள், அந்த உணவுகளுக்குள் தம் உறவுகளை, நண்பர்களை,  தத்தம் ஊரை, நட்பை, அந்த உணவு குறித்த நினைவுகளை தினம் தினம் மீட்டெடுக்கிறார்கள்.

பெண்ணுக்கு வேண்டும் பெண்money!

உலகத்தின் மொத்த அசையா சொத்துக்களில் 20%க்கும் குறைவாகவே பெண்களின் பெயரில் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பினாமியாக வாங்கப்படும் சொத்துக்களும் சேர்த்தே இந்த லட்சணம்தான். 

வரதட்சணையின் பரிணாம வளர்ச்சி

மணமகள் செல்வம் தரும் பழக்கம் ஆப்பிரிக்க இனக்குழுக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள விவசாயம் மற்றும் கால் நடை சமூகங்கள் மத்தியிலும் பரிசம் போடுதல் என்ற பெயரில் காணப்படுகிறது.

36-24-36...

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பருமனான உடல்வாகு கொண்ட பெண்கள் அசிங்கமாக உருவக்கேலி செய்யப்படுகிறார்கள். இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. மாறாகச் சிரித்து இன்னும் அவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆண்களைவிடப் பெண்களே அதிக அளவில் உடல்ரீதியான கேலிக்கு உள்ளாகிறார்கள். ஆண்களைக் கவரும் விதத்தில் உடலை வைத்துக்கொள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதுவும் அவர்கள் குடும்பத்தாராலேயே நிகழ்கிறது.

பிரேக் த ரூல்ஸ்

உஸ்மானுக்கு ஒரு நீதியும் ரவிக்கு ஒரு நீதியும் வழங்கும் சமூகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுபோன்ற எழுதப்படாத சமூக விதிகள் சாமானிய மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக இருப்பின் உரக்கக் கூறுவோம் ’பிரேக் த ரூல்ஸ்’ என்று.

பெண்கள் பேய்களான கதை

இன்றைக்கும் மார்பகப் புற்றுநோய், தைராய்டு, கருப்பைக் கட்டி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவம் பார்க்காமல் பேயோட்டிக்கொண்டிருப்பதால் மடிந்துகொண்டிருக்கின்றனர்.

பூகோள எல்லைகளைத் தகர்த்த ஈழமும் தமிழகமும்

சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய சினிமாவால் இரு நாடுகளுக்கிடையேயான இணக்கம் இன்னும் அதிகமானது. இலங்கை, தமிழ் சினிமாவுக்குத் தந்த ஒவ்வொருவரும் மாணிக்கப் பரல்கள்தாம். இலங்கையின் நாவல்பட்டியில் பிறந்து வளர்ந்த எம்ஜிஆரின் கையில் தன்னையே கொடுத்து மகிழ்ந்தது தமிழகம். (அதே நேரம், ஈழப்போருக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற ஆதரவு உலகமே அறிந்தது). மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தின் பாலுமகேந்திரா தென்னிந்திய திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையானார். யாழ்ப்பாணம் அருகே நெல்லிப்பழையைச் சேர்ந்த சுஜாதாவின் திறமையைத் தமிழ், மலையாள சினிமாக்கள் பயன்படுத்திக்கொண்டன. கொழும்பில் பிறந்த ராதிகா தான் இன்றைக்குச் சின்னத்திரையின் ராணி. ஜே.ஜே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா உமாசங்கரும் சிங்களத்துப் பைங்கிளிதான். மன்னாரில் பிறந்த கேத்தீஸ்வரன் தமிழ் சினிமாவின் போண்டாமணியாக உருவெடுத்தார். ஏன், சமீபத்திய லாஸ்லியாவும் தர்ஷனும்கூட பிக்பாஸ் வழியாகக் கிடைத்த இலங்கை வரவுகள்தாம்.

சங்கரிகளுக்குக் கூடுதல் கவனம் தேவை!

பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பல நிலைகளில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பயில்கின்றனர். உடல் குறைபாடுகள், உள்ளக் குறைபாடுகள், உணர்வுக் குறைபாடுகள் என மருத்துவ ரீதியாக இருபதுக்கும் மேற்பட்ட பெயர்கள் கொண்டவையாக அவை இருக்கின்றன. கல்வித் துறையில் சிறப்பாசிரியர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்றனர்.

காகிதப் பூக்கள் - ப்ரீத்தி

“மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. ஆனால், நான் எதையும் அவ்வளவு கொண்டாடுவதில்லை. ஒரு வரையறையோடு இருக்கேனுகூடச் சொல்லலாம், தேவையான அளவு மகிழ்ச்சியும், அதே நேரம் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடத்துக்காக நான் நிறையவே நேரம் செலவிட்டேன். அதனாலேயே பெரிய கொண்டாட்டங்களுக்கு ஆர்வமில்லை.”

டிஜிட்டல் இந்தியாவின் கழிப்பறைகள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்கள் (சுமார் 62 கோடி பேர்) இந்தியாவில் இருப்பதாக, குறிப்பாக இந்தியக் கிராமங்களில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நவம்பர் 2019இல் வெளியான தேசியப் புள்ளிவிவர அறிக்கை கிராமப்புறங்களில் 29.7 % குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கூறுகிறது.