UNLEASH THE UNTOLD

Month: April 2022

இளமை திரும்புதே...

தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் அதிகப் பற்றுடன் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம், நல்லது, கெட்டது என்று எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது மனரீதியாக நல்லது. மனதில் படும் விஷயங்களை அப்படியே வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை மூளைக்கு எடுத்துச் சென்று அவதிப்படக் கூடாது. முகத்தில் புன்னகையைப் படர விட்டுக்கொண்டால் முதுமை அதைத் தாண்டி நம்மிடம் வரவே வராது.

எது கூட்டுக்குடும்பம்?

ஓர் ஆண், அவனது மனைவி குடும்பத்தோடு ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் அவனுக்குப் பெயர் ‘வீட்டோட மாப்பிள்ளை’. ஏன் இங்கும் கூட்டுக்குடும்பமாகத் தானே இருக்கிறார்கள்? இதை மட்டும் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் சொல்கிற மாதிரி கூடி தானே இங்கேயும் வாழப் போகிறார்கள்?

சூப்பர் ஹீரோயின்கள்

கொடும் குளிர் தாக்கும் பனிச்சாரல்களில் ஆடிப்பாடும் போது கனவென்றாலும் நாயகருக்குக் கம்பளி கோட்டும் பூட்ஸும் தேவைப்படுகையில், சென்னை வெயிலில் அணிவது போல் கையில்லாத கவர்ச்சி ரவிக்கைகளும் கொலுசு மட்டும் அணிந்த பாதங்களுடனும் நம் நாயகியர் முகமலர்ச்சியுடன் ஆடிப்பாடுவதைக் கண்டதில்லையா?

டிஸ்கோ சேலையும் சீட்டிப் பாவாடையும்

நாங்கள் கனமான துணியில் தாவணி அணிவதால், ‘கோணியை சுற்றி இருக்கிறீர்கள்’, என கேலி செய்வார்கள். இதுவும் ஒருவிதமான discrimination தான்!

பெண்மொழி என்று ஒன்றுண்டா?

மொழி என்பது ஒன்றுதான். அதில் பெண்மொழி என்று ஒன்று தனியாக இல்லை என்று வாதிடுபவர்கள் இருக்கலாம். பெண்களுக்கான அரசியலை, பெண்களுக்கான வலியை, அவர்கள் உணர்வுகளோடு தொடர்புடைய பிரச்னைகளை, குறிப்பாக உடலரசியலைப் பெண்களே பேசும்போது அல்லது எழுதும்போது அதில் தெறிக்கின்ற உண்மையையும் ஆழத்தையும் பலராலும் அறிந்துகொள்ள இயலும்.

சங்கீதாவுக்கு இன்னொரு பட்டம்

இப்போது அவள் மனதில் என்றோ எங்கோ வாசித்த கவிதைவரி ஒன்று தான் நினைவுக்கு வந்தது. “ராமர் கூட வேண்டாம். எங்களைத் தூக்கிச்செல்ல ராவணன் வந்தால் போதும்” என்ற கவிதை வரி.

உங்களுக்கு என்ன வேண்டும்?

இளைஞர்கள், “கல்யாணம் முடிந்ததும் எனது சுதந்திரம் பறிபோய்விடும். ஆயிரம் சிக்கல்கள்”, எனச் சொல்லும் உங்கள் மனதிடம் கேளுங்கள், ‘உண்மையில் உனக்கு என்ன வேண்டும்?’

ஆண் உரிமைக்கும் குரல் கொடுக்கிறது பெண்ணியம்

தைரியமில்லாத ஆண்களும் உண்டு, வலிமையான பெண்களும் உண்டு. பொதுஇடத்தில் பெண்ணுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ஆண்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. கேட்க தைரியமில்லாத ஆணை ’நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ என்று ஏசுவார்கள். கண்ணீர் வடிக்கும் ஆணிடம், ’ஏண்டா பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்கே?’ என்பார்கள். துக்கத்தை வெளிக்காட்டுவது இருபாலருக்கும் பொதுவானது. ஆனால், ஆண் தனது துக்கத்தை, இயலாமையை வெளிக்காட்டக் கூடாது என்று பொதுப்புத்தி எதிர்பார்க்கிறது.

வாழ்க்கையை மாற்றிய ஒரு சிறிய கடிதம்

அவளுடைய சின்ன ஆர்வம், அதற்கு உருவம் கொடுத்த லட்சுமி டீச்சர்… இந்தக் காரணங்களால் இன்று ரோகிணி தனது சொந்தக் காலில் நிற்கிறாள்.

புதுமை, சவாலை எதிர்கொள்ளத் தூண்டும் பதின்மவயது

கிராமத்தில் அது போன்று முடிவெடுக்க தனி தைரியமும் பல சிக்கல்களைச் சந்திக்கும் துணிவும் அவள் பெற்றோருக்குத் தேவைப்பட்டது.