UNLEASH THE UNTOLD

Tag: women isssues

அம்மாவின் பொறுப்பு

“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.” எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என்…

பெண்களும் பணியிடப் பாதுகாப்பும்

வனங்களுக்கு அருகில் இருக்கும் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி வனவிலங்குகளால் தொல்லை எழுவது தினசரி நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அந்த மக்கள் விலங்குகளிடம் இருந்து காப்பாற்றக் கோரி அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதும், அரசாங்கம் அதற்குத் தக்க…

பெண்களும் சமூகக் கட்டமைப்புகளும்

பெண்கள் எவ்வாறு சமூகமயமாக்கப் படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, அவர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது என்பதைப் புரிந்தகொள்வது அவசியமாகிறது. டைரக்டர் சசி இயக்கத்தில் வெளியான ’பூ’ திரைப்படத்தில் ஒரு…

இயல்பாகிப் போயிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள்…

பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே…

10. பருவமெய்தல்

பேதை (1-8 வயது), பெதும்பை (9-10 வயது), மங்கை (11-14 வயது), மடந்தை (15-18 வயது),  அரிவை (19-24 வயது), தெரிவை (25-29 வயது), பேரிளம் பெண் (30 வயதுக்கு மேல்) எனத் தமிழ்…

காதலின் வெற்றி எது?

“நீ கேக்குறதெல்லாம் சரிதான், ஆனா ஒண்ணு புரிஞ்சிக்க, எங்க காலத்திலேயும் நாங்க வேலைக்குப் போனோம். ஆனா  வேலை நேரம் உங்களைப் போல இல்லை. இன்னொரு விஷயம் அப்போ எங்க வருமானம் வீட்டுக்குத் தேவை. அதனால புருஷன்களும் ஏதோ ஒரு சமையல் பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க, அதுக்கு மேல வகை வகையா செய்யவும் எங்களுக்கு வசதி இல்லை. புருஷன்களும் எங்களுக்குக் கொஞ்சம் உதவின்னு செஞ்சாங்க. இப்போ எல்லாருக்கும் சம்பளம் நல்லா வர்றதால குடும்பத்துக்கு உங்க வருமானம் எக்ஸ்ட்ரா தான். அதனால் உன்னைப் புரிஞ்சிக்கவோ உனக்கு உதவி செய்யவோ அவசியம் பிரபுவுக்கு இல்லை. இப்போ நிறைய பசங்க பொண்டாட்டி கஷ்டம் புரிஞ்சிக்கிறாங்க. பொறுப்பைப் பகிர்ந்துக்குறாங்க. ஆனா இதெல்லாம் வளர்ப்புல வர விஷயம். பிரபு வீட்டு ஆளுங்க கொஞ்சம் பழைய டைப், அதனால் இதைப் புரிஞ்சிக்கிற பக்குவம் அவருக்கு இல்லை. ஆனா சந்தேகமே இல்லாத உன் மேல ரொம்ப அன்பு இருக்கு. நீ அதைப் பிடிச்சுக்கிட்டு பிரபுவுக்குப் புரிய வை.“

ஆசிஃபா முதல் மஹுவா மொய்த்ரா வரை 

சாதி, மதம், கடவுள் என்கிற அனைத்தும் பெண்களை அடிமையாக்கக் கண்ட உத்திகளே. ஆனால், பாஜக சாதி, மதவாதம், சனாதனம் ஆகியவையே பிரதானமாகக் கொண்டு அரசியல் செய்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு கட்சி நாட்டை ஆண்டால் பெண்கள் போராடிப் பெற்றுள்ள இத்தனை ஆண்டுகாலச் சுதந்திரமும் சமத்துவமும் இனி வரும் காலங்களில் வெறும் கனவாகவே சென்றுவிடும் சாத்தியங்கள்தாம் அதிகமாக உள்ளன. பெண்களின் ஓட்டு அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே பெண்களாகிய நாம் நம் முன்னேற்றத்தை மனதில் கொண்டு சிந்தித்து வாக்களிப்போமாக!

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியாரின் ’பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பது புரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம் ’பெண் ஏன் அடிமையானாள்?’ இன்று வரை அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம், அந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தரப்பினர் எப்படி அன்று எதிர்தார்களோ அப்படியே இன்றும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சமையலறை எனும் சாபம்

இப்படி நேரம் காலம் பார்க்காமல் வருடத்தின் அத்தனை நாட்களும் ஓயாது உழைக்கிறாளே, உங்கள் வீட்டு மகராசி, அவளுக்கு ஒரு நாளாவது நீங்கள் லீவு கொடுத்ததுண்டா தோழர்களே? என்றாவது ஒரு நாள், நீங்கள் சாப்பிடும்போது, “சேர்ந்து சாப்பிடலாம் வா” என்று உங்கள் இணையரையோ தாயையோ என்றாவது அழைத்ததுண்டா? “தினமும் நீதானே பரிமாறுகிறாய், இன்று நீ உட்காரு. நான் உனக்கு தோசை சுடச்சுட சுட்டுத் தருகிறேன்” என்று கூறியதுண்டா?

விடுமுறையின் போதுதான், சுடச்சுட பஜ்ஜி போண்டா சுட்டுக் கொடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.