வாடி ராசாத்தி... புதுசா, ரவுசா போவோம் வாலாட்டி...
ஒழுக்கம் என்பதற்கு வரையறை தான் என்ன? ஆண் தன் மனம் போல் திரிந்துவிட்டுப் பெண்ணுக்கு மட்டும் ஒழுக்கக் கோட்டை வரைந்து கட்டுப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
ஒழுக்கம் என்பதற்கு வரையறை தான் என்ன? ஆண் தன் மனம் போல் திரிந்துவிட்டுப் பெண்ணுக்கு மட்டும் ஒழுக்கக் கோட்டை வரைந்து கட்டுப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
திருக்கேதீஸ்வரம், மடுமாதா தேவாலயம், தள்ளாடி, குஞ்சுகுளம் தொங்கு பாலம், அல்லி ராணிக்கோட்டை, கட்டுக்கரைக்குளம், வங்காலை பறவைகள் சரணாலயம், பெருக்குமரம், மாதோட்ட துறைமுகம், மன்னார்கோட்டை என வரலாற்றுச் சிறப்புகளால் நிறைந்திருக்கிறது மன்னார்.
ஐம்பது வருடங்களுக்கு முன்புகூட நம் அம்மாச்சிகளும் அப்பத்தாக்களும் உடலில் குத்தியிருந்தது தான். மான், மயில், கிளி, தேர், தேள், மரம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், மீன், விலங்குகள், தெய்வங்கள் போன்ற உருவங்களை அவர்கள் தங்கள் உடலில் குத்தியிருந்தார்கள். அவற்றின் நவீன வடிவமே டாட்டூ.
சூழ்நிலைகளால் கனவுகள் நொறுங்கி , குடும்பத்திற்காகத் தங்களை மெழுகுவர்த்திகளாக மாற்றிக்கொள்ளும் பெண் குழந்தைகள் நிரம்பிய சமூகம் இது. குறிப்பாகக் கிராமங்களில் இன்னும் பெண்களுக்கு விருப்பம் சார்ந்த படிப்பு கிடைப்பதில்லை.
ஆண்கள் வேலை செய்வதை முதலில் பெண்கள் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தனை ஆண்கள் தங்கள் வீட்டுக் கழிவறை, குளியலறைகளைச் சுத்தம் செய்கிறார்கள்? சமைத்தல், சுத்தம் செய்தல், துவைத்தல் போன்ற பொதுவான வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் பாலினப் பாகுபாடு இன்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
எங்கும் அப்பாவுடன் கூடவே செல்லும் தென்றல் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருக்க, அப்பாவும் தனக்குத் தெரிந்ததை மகிழ்வோடு பதில் சொல்வார். தன் குழந்தை அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறாளே என்ற பெருமிதம் இருக்கும். பொண்ணு இப்படி எடக்குமடக்காகக் கேள்வி கேட்கிறாயே என்று ஒரு நாளும் சொன்னதில்லை. மாறாக ஊக்கம் அளித்தே வந்தார்.
இனம், மொழி, மதம், சாதி, பாலினம், வர்க்கம் எனப் பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுடன் பாகுபாடின்றி பழகுவது தான் மிக ஆரோக்கியமான சமூகமயமாக்கல். ஆனால், உண்மையில் இந்தியாவில் ஆரோக்கியமான முறையில் சமூகமயமாக்கல் நிகழ்வதில்லை.
இது போன்றே சில மாணவியரின் வாழ்க்கையில் சவாலாக ஏற்பட்ட அனுபவங்கள் பலவற்றையும் லட்சுமி டீச்சர் வழியாக அறிந்துகொண்டு, தன் உலகத்தை விரிவாக்கிக்கொண்டு, தனது வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்த பைரவி, தற்போது சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
பெண் கருவுறாமையைக் குறிப்பதற்கு மலடி என்ற சொல் உருவானதே தவிர, ஆண் கருவுறாமையைக் குறிக்க ஒரு சொல் தமிழில் இல்லை. சிலர் ஆண் கருவுறாமையைக் குறிக்க ஆண்மையின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தச் சொல் சரியான சொல்லாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பெண் கருவுறாமையைப் பெண்மையின்மை என்று நாம் கூறாதபோது ஆண் கருவுறாமையை ஆண்மையின்மை என்று கூறுவது பொருந்தவில்லை.
குடும்ப கௌரவம் மட்டுமே முக்கியமான ஒன்று என்று பேசும் சமுதாயத்தின் பிற்போக்குத்தனம் எப்போது மாறப் போகிறது? அந்தப் பெண்ணின் மன வேதனையையும் வலியையும் உணர முடியாத சமூகம் பேசும் பேச்சுதான் அந்தத் தந்தைக்குப் பெரிதாகப் போயிற்று. அப்படியாவது கௌரவத்தை நிரூபித்து, நிலைநாட்டி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்?