வாடகைத் தாய்- அறிவியலும் சட்டமும் சொல்வது என்ன?
கரு வளர இடம் கொடுக்கமுடியாத கர்ப்பப்பை உள்ள பெண்கள், நாற்பது வாரங்களுக்கு இன்னொருவரின் கர்ப்பப்பையை வாடகைக்கு(!) எடுப்பதுதான் வாடகைத்தாய்.
கரு வளர இடம் கொடுக்கமுடியாத கர்ப்பப்பை உள்ள பெண்கள், நாற்பது வாரங்களுக்கு இன்னொருவரின் கர்ப்பப்பையை வாடகைக்கு(!) எடுப்பதுதான் வாடகைத்தாய்.
மலைப்பகுதியை அடைந்தும் துயரம் தீரவில்லை. அட்டைக்கடி, கொசுக்கடி, தேள்கடி எனத் தொடர்ந்தது. காட்டு விலங்குகள் உயிரைப் பறித்தன. காலராவும் மலேரியாவும் அம்மையும் தாக்கின. வந்த தொழிலாளர்களில் பாதிப்பேர் மடிய, மீதிப் பேரே தேறினர். அதனால் மீண்டும் மீண்டும் தேவைக்கு அதிகமாகவே ஆட்களைச் சேகரித்தனர். பிழைப்பிற்காகக் கடல்கடந்து வந்த தமிழர்கள் பாறைகள் சூழ்ந்த அந்தக் கடினமான பகுதியைக் கனமான கருவிகள் கொண்டு உடைத்தனர். உயிரைப் பறிக்கும் அசுர உழைப்பினால் அந்த மலைப்பகுதியை விளைச்சலுக்கு ஏற்றதாக மாற்றினர். தங்களை அழைத்துவந்த ஆங்கில முதலாளிகளுக்கு விசுவாசமாக 150 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர்.
300 வகையான ராமாயணங்களில் வெவ்வேறு கதைகள் உண்டு என்று கூறப்படுவது ஒருபுறமிருக்க, தமிழ் மன்னன் ராவணன் வரலாற்றுத் திரிபுகளால் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்பட்டு, அரக்கனாக்கப்பட்டு விட்டான் என்ற பெருங்குறையொன்றுடன் இருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.
“நீங்க சொல்றபடி சாதித்த, சாதிக்க நினைக்கும் பெண்கள் முடியை நீட்டி முழக்கி அழகுன்னு பராமரிக்கறதில்லைதான். தங்களை வளர்த்துக்க எத்தனிக்கும்போது இதெல்லாம் கணக்கிலேயே வைக்க முடியாது. இதைக் கணக்கில் வைத்தால் அவர்கள் பணியில் சுணக்கம் ஏற்படும். நேரம் ஒதுக்க முடியாம போய்டும். நான் சொல்றது சரிதானே மேடம்?” என்றாள் பொன்னி.
இலங்கையின் இரண்டாவது பெரிய, அழகு மிகுந்த சோலைகள் சூழ்ந்த அந்த மலை ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில், நிர்வாக ரீதியாக நுவரெலியா மாவட்டத்துக்குச் சொந்தமானதாக இருக்கிறது. நான்கு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தை சர்ச்சையின்றி வணங்கிச் செல்லும் உலகின் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
செவிலியர் பணி அங்கீகாரம் இல்லாமல்தான் இருந்துவந்தது. அதுவும் பழைய காலங்களில் அவர்கள் இந்தப் பணியோடு வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றி அவர்களுக்கென்று ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர் ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று சிறப்பிக்கப்பட்ட ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்தான். செவிலியர் தினம் என்று கொண்டாடப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர். இதுநாள் வரை செவிலியர் தினத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே நிலவியது. ஆனால், கொரோனா சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து நமக்குச் சேவை செய்த செவிலியர்கள் தெய்வத்திற்குச் சமமல்லவா?
“அடேய் காலிப்பயலே… அந்த சின்னப்புள்ளய என்னடா பண்ண??”
“அம்மாடி.. அழாத… சொல்லு. உன்னை என்ன செஞ்சான் இவன்? பயப்படாம சொல்லுடா…”, என்றார் தலைமை ஆசிரியர்.
கிடைத்த அனைத்துச் செல்வங்களையும் சமமாகப் பகிந்து வாழும் சமூகம் பொதுவுடைமை சமூகமாக இருக்கும். எனவே, பெரும்பான்மையான கனடிய பழங்குடி மக்கள் பொதுவுடைமை சமூகமாக இருந்ததால் அவர்கள் சமூகங்களில் சமத்துவம் இருந்தது; குறிப்பாகப் பாலின சமத்துவம். இன்றைய நிலையில், நம் சமூகத்தில் எண்ணற்ற வகைகளில் வேறுபாடுகளும் மேல் கீழ் என்ற படிநிலைகளும் உள்ள சிக்கலான சமூகமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற அடையாளங்களை வைத்து எண்ணற்ற அடக்குமுறைகளும் நடக்கின்றன. சமத்துவமான சமூகம் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்பது தான் என்னுடைய அடுத்த கேள்வி. இந்தக் கேள்வியைச் சில நண்பர்களிடம் எழுப்பிய போது தனிச்சொத்துடைமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பதிலாகக் கிடைத்தது.
புத்தரின் புனிதப்பல் யாரிடம் இருக்கிறதோ அவர்களே இலங்கையை ஆள்வார்கள்’ என்பது தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. அதனால் மகாவம்ச கால சந்திரபானுவும் சரித்திரக் கால ஆரியச் சக்கரவர்த்தியும் புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்பட்ட பேழையை அபகரித்துச் சென்றுள்ளனர். இந்த இடத்திற்கு வருவதற்கு முன் ஐந்து வெவ்வேறு இடங்களில் அந்தப் பல் பாதுகாக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஒவ்வோர் அரசரும் ஒவ்வொரு பேழையில் வைத்துப் பாதுகாக்க, இப்போது பல் ஏழு பேழைகளுக்குள் பத்திரமாக பொதியப்பட்டுள்ளது. “மூன்று அங்குல அளவில் இருக்கும் அந்தப்பல், செம்பருத்தி பூக்களின் நடுவிலிருக்கும் காம்பு போல, வேருடன் காணப்படும்” என்று அந்தப் பிக்கு சொல்ல, “மூன்று அங்குல நீளத்தில் பல்லா?” என்று தலை சுற்றியது.
நமது சமகால ராணி எலிசபெத் காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அதனாலேயே அவரால் நெடுங்காலம் ராணியாக நிலைத்திருக்க முடிந்தது. அவரது வாகனம் தனிச்சிறப்பு பெற்றது. பதிவெண் இல்லாதது. அவருக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்மீது யாரும் எந்தவிதமான வழக்குகளும் பதிய இயலாது. இப்படிப் பல்வேறு தனிப்பட்ட சலுகைகள் இருந்தாலும் அத்தனைக்கும் அவர் கொடுத்த ஒரே விலை தனது சுதந்திரத்தையும் முடிவெடுக்கும் உரிமையையும்தான்.