UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

<strong>கருப்பைக்குள் படியும் நச்சுப்புகை</strong>

காற்று மாசுபாடுகளிலேயே மிகவும் கவலையளிக்கும் ஒரு வகைமை என்பது உட்புறக் காற்று மாசு (Indoor Air Pollution). அதாவது ஒரு வீட்டுக்குள்ளோ கட்டிடத்துக்குள்ளோ இருக்கும் காற்று மாசு இது. காற்று மாசு என்றதுமே நமக்கு வானுயர தொழிற்சாலைக் கட்டிடங்களில் இருந்து வெளியாகும் புகைதான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, வெளிப்புறக் காற்று மாசுக்கு ஈடான பாதிப்பு வீட்டுக்குள்ளும் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

காதலும் சுயமும்

சில நேரத்தில் சூழ்நிலைகளுக்கேற்ப விட்டுக் கொடுப்பது ஒருவருக்கு இன்னொருவர் செய்ய வேண்டியதுதான். ஆனால், எப்பொழுதும் ஒருவரே விட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பது உறவின் சரிநிலையைப் பாதிக்கும். நாளடைவில் சுயமரியாதையையும் இழக்கச் செய்யும். ஒரு நாள் என்ன சமைப்பது என்பது தொடங்கி, யார் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பது வரை பெரும்பாலும் பெண்களே சமரசங்கள் செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

கலைந்து போன தமிழனின் 150 ஆண்டுகாலக் கனவு

“சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்ற பாரதியின் நூற்றாண்டுச் சிந்தனை, தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவாகவே இருக்கிறது. தமிழினக்கால்வாய், சேது சமுத்திரக் கால்வாய் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இத்திட்டத்தின் அவசியம், அவசரம் குறித்து, அறிஞர் அண்ணா முதன் முதலில் நாடாளுமன்றத்தில் பேசினார். 1968 ஏப்ரல் மாதத்திய 25ஆம் நாள் காஞ்சி இதழில், “தனுஷ்கோடியைக் கடல் மூழ்கடித்ததால் தமிழன் கால்வாய் எனப்படும் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகிவிட்டது” என்று எழுதினார்.

<strong>நீர் ஜனநாயகம்</strong>

சாதி, வர்க்கம், வசிக்கும் பகுதிகளின் ஆண்மைய மனப்பான்மை ஆகிய எல்லாவற்றையும் பொறுத்து பெண்களின்மீதான நீர்ச்சுமை அதிகரிக்கிறது. இந்தப் படிநிலைகள் நீங்கலாகப் பார்த்தாலும் நீர்ப் பிரச்னைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தாம். “உலக அளவில் நீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளைச் சேர்ந்த 80% குடும்பங்களில் நீர் சேகரிப்பது பெண்களின் தனிப் பொறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், உலக அளவில் நீர் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க பதவிகளில் 17% மட்டுமே பெண்கள்” என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று.

பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானதல்ல...

ஓர் ஆணை சமூகம் நிர்பந்திக்கும் இன்னோர் இடம் வாகனங்கள் ஓட்டுதல். ஆணுக்கு இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் கண்டிப்பாக ஓட்டத் தெரிய வேண்டும் என்று ஒரு பொதுபுத்தி நிலவுவதால் கற்றுக்கொள்ள விருப்பமில்லாத ஆண்களும் வாகனம் ஓட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டுதல் ஒரு வாழ்க்கைத் திறன், ஆனாலும் அது ஆண்மையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனம் வேகமாக ஓட்டுவதையும் திறமையாக ஓட்டுவதையும் ஆண்மையோடு தொடர்புபடுத்தி இருப்பதால்தான் சாலையில் வாகனம் ஓட்டி வரும் சகப் பெண் தன்னைத் தாண்டிப் போகிறபோது பல ஆண்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்களைத் துரத்திச் சென்று, அவர்களைவிட வேகமாக முந்திக்கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் அவர்கள் மனதில் ஏற்படுகிறது.

ஆலயப் பிரவேசமும் ஐஸ்வர்யாவும்

“கடவுளுக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. மேலும், என் கோயிலுக்கு இவர்கள் வரக் கூடாது, அவர்கள் வரக் கூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதேபோல, இதைச் சாப்பிடக் கூடாது, இது தீட்டு என்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாம் உருவாக்கின சட்டங்கள்தாம்.

‘லட்சியம்’ கெட்ட வார்த்தையா?

திருமணத்தின் போது கணவரின் பணியிடம் செல்ல வேலையைவிட நேரும் பெண்கள், குழந்தைப்பேறுக்கான நேரத்தைத் திட்டமிட, தீர்மானிக்க உரிமை மறுக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பில் இணையர் சிறிதும் பங்கெடுக்காத பெண்கள், குழந்தை வளர்ப்பை முழு நேரமாகச் செய்யாததற்கு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பிற்காக எடுக்கும் விடுப்புகளுக்கு பணியிடங்களிலும் சமூகத்திலும் தண்டிக்கப்படும் பெண்கள் தங்கள் கனவுகளை எப்படிப் பின்தொடர முடியும்?

<strong>கானல்நீர்ப் பெண்டிர்</strong>

ஏற்கெனவே திருமணமாகியிருந்தும், தண்ணீர் சேகரிக்க ஆள் போதவில்லை என்பதற்காக மட்டுமே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை இது! சில சமயங்களில் இரண்டாவது மனைவியும் நீர் சேகரிக்கப் போதாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ஆண்களும் இருக்கிறார்கள்.

<strong>வந்தியத்தேவன் வழித்தடத்தில் தொண்டைமானாறு</strong>

முந்நூறு வருஷத்துக்கு முன்னால் இளவரசனாகிய மானவர்மன் காஞ்சிபுரத்தில் வந்து சரண் புகுந்திருந்தான். அவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்டுத் தருவதற்காக மாமல்ல சக்கரவர்த்தி ஒரு பெரும்படையை அனுப்பினார். அவர் அனுப்பிய படைகள் இந்தப் பிரதேசத்தில்தான் வந்து இறங்கின. அச்சமயம் தொண்டைமான் ஆறு உள்ள இடத்தில் ஒரு சிறிய ஓடைதான் இருந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், படைகள் இறங்குவதற்கும் சௌகரியமாவதற்கு அந்த ஓடையை வெட்டி ஆழமாகவும் பெரிதாகவும் ஆக்கினார்கள். பிறகு அந்த ஒடை தொண்டைமானாறு என்று பெயர் பெற்றது.

<strong>காடு யாருக்குச் சொந்தம்?</strong>

கிராமப்புற ஏழை எளிய மக்கள் சூழலையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற உலகளாவிய பொது புத்தியையும் சிப்கோ இயக்கம் மாற்றியமைத்தது. வளங்கள் மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்கான மக்களின் இயக்கம் வெற்றி பெறும் என்பதற்கு சிப்கோ இயக்கம் உலகளாவிய முன்னுதாரணமாக விளங்கியது. சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடுவது பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக இருந்த காலட்டத்தில், சூழலைப் பாதுகாப்பது ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் என்ற ஒரு புரிதலை சிப்கோ இயக்கம் ஏற்படுத்தியது. உலகளாவிய சூழல் லட்சியங்களில் சிப்கோவுக்கு இருந்த தாக்கம் அளப்பரியது.