UNLEASH THE UNTOLD

Top Featured

நண்பர்கள் இல்லாத உலகம் எப்படி இருந்திருக்கும்?

இவர்கள் அவள் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இன்றியமையாதவர்கள். ஆனால், இந்த எல்லாக் காலகட்டத்திலும் அவள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தூக்கிச் சுமக்கும் அவளைவிட அவளை நன்கறிந்த, அவளை அவளுக்காக நேசிக்கும், அவள் ஏற்ற இறக்கங்களை அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பகிர்ந்து, அவர்களை மீண்டும் தன்னிலையடையச் செய்யும் அவள் சாயும் தோள்கள் அவளுக்கு தோழி என்கிற பெயரில் வாழ்க்கை அளித்த தலைசிறந்த ஆசிர்வாதம்.

வாசக்காப்பு

“சரி, ஏன் எல்லாரும் இது பெண்கள் கருத்தடையவிட நல்லதுனு சொல்றாங்க?”

“ஏன்னா அதுதான் 100% உண்மை. இப்ப உனக்கு லோக்கல் அனஸ்தீஷியாதான் குடுத்தாங்க. ரெண்டு நாள்ல இயல்பாகிடுவே. ஆனா, பெண்கள் கருத்தடை ரொம்ப சிக்கல். அதுக்கு ஜெனரல் அனஸ்தீஷியா கொடுக்கணும். குணமாகவும் ரொம்ப லேட்டாகும். முன்னாடி காலத்துல அறிவில்லாம அப்படிலாம் பண்ணி இருக்காங்க. இடியட்ஸ்.”

மலரும் யாசினியும்

தத்து எடுக்க விரும்பும் பெற்றோர் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.

திருமணம் ஆனவர்களும் திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.

தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.

தனி ஆண்மகன், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகே தத்தெடுக்க முடியும்.

தள்ளாடிய வயதிலும் தள்ளாடாத இலக்கிய ஆர்வம் - எழுத்தாளர் பூரணி அம்மாள்

கவிதைகள் எழுதுவதோடு இந்தியில் சாகித்யம் பெற்ற அம்மா, பல பெண்களுக்கு இந்தி கற்றுக்கொடுத்து வந்தார். இந்தியிலிருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான சரஸ்வதி ராம்நாத் அம்மாவிடம் இந்தி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணங்களும் விவாகரத்துகளும்

காதலித்தால் பிரியக் கூடாது. திருமணம் செய்தால் விவாகரத்து வாங்கக் கூடாது. காதலிக்கிறவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும். கல்யாணம் பண்ணிக்கொண்டால் கட்டாயம் அவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற சமூக விதியை ஆண் மேலாதிக்கச் சமூகம் கட்டமைக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் ஆண் மீறும்போது கண்டுகொள்ளாத சமூகம், பெண் எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது கலாச்சாரம் கெட்டுப்போகிறது என்று பொங்கி எழுகிறது.

பயத்தை வெல்லலாம் வாங்க!

இயற்கையான பய உணர்வு உங்களை எச்சரிக்கும், முடக்காது, எதிரே ஒற்றை யானையைப் பார்த்தால், 150 கி.மீ. வேகத்தில் மகிழுந்து ஓட்டினால், ஆள் அரவமற்ற இடத்தில் தனி வீடு கட்டிக் குடியேறினால், இரவில் நிறைய நகைகளோடு நடமாடினால் நம் மூளை அதில் உள்ள ஆபத்தை நினைவுப்படுத்தி எச்சரிக்கும். இது போன்ற பயங்கள் நமக்குத் தேவை. இது இப்போது செய்யும் காரியம் ஆபத்தை விளைவிக்கும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மனித மூளை நமக்கு அளிக்கும் சமிக்ஞைகள். இதை வீண் பயம் என்று ஒதுக்காமல் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

புடவையிலிருந்து சுடிதாருக்கு மாற்றிய அறுவை சிகிச்சை

21 நாள் இடைவெளியில் கீமோதெரபி கொடுப்பார்கள். ஒவ்வொரு கீமோதெரபிக்கு முன்னும் இரண்டு முறை ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த ரிப்போர்ட்டை அறுவை சிகிச்ச செய்த மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரத்த செல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பதை அறிந்து, குறைந்திருந்தால் ரத்தம் ஏற்ற வேண்டும். எனக்கு ஒருமுறைகூட கீமோதெரபி கொடுக்கும்போது, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் உருவாகவில்லை. தினமும் கீரை சாப்பிட்டேன். நல்ல புரதச் சத்துள்ள உணவை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டேன். நிறைய பழங்கள், ஜூஸ் சாப்பிட்டேன். மீன் தவிர வேறு எந்த அசைவ உணவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மிளகு காரம்கூடச் சாப்பிட முடியாது. இதனால்தான் நான் ரத்த விருத்திக்கான மாத்திரைகளைச் சாப்பிடவே இல்லை.

‘லைக்’ செய்துதான் பாருங்களேன்!

என்னைப் பரவசப்படுத்தும் வகையில் எனது நெருங்கிய தோழியிடமிருந்து, ‘சூப்பர் டா, நச்சுன்னு இருக்கு கட்டுரை, தொடர்ந்து எழுது’ என்கிற கமெண்டுடன் என் பதிவிற்கு ஒரு லைக் இருந்தது!

மங்கம்மா சபதம் -1943, 1985

கணவன் மன்னிப்பு கேட்க, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் எனப் படம் முடிந்தாலும், அதற்கு முந்தைய காட்சியில், “நானா ஜெயித்தவள்? உலகமறிய தோற்றவள் நான்; வாழ்நாளெல்லாம் வீணாக, பொய்யாக மனம் தடுமாறி பேயைப்போல் வாழ்ந்தேன். இதுவா என் ஜெயம்? இந்த இருபது வருஷ காலமாகத் தனித்தனியாக உலக வாசனையற்று, ஒரு பட்ஷி தனிப்பட்டு கூண்டில் இருப்பது போல் சிறையில் கிடந்து வாடினேன்; இதுவா என் ஜெயம்? கொண்ட புருஷனை அடைய பொய் சொல்லி, இதுவா என் ஜெயம்?” எனக் கேட்பது போலவும் காட்சி அமைத்திருக்கிறார்கள்.

இயற்கையும் பெண்ணுடலியலும் - 2

மேற்கத்திய பெண்கள், சுற்றி வளைக்காமல், ‘ இன்று நான் தயார்நிலை காலகட்டத்தில் இருக்கிறேன்’, ‘Why don’t we have a good time today..?’ ‘இன்று நாம் படுக்கையில் நெருக்கமாயிருப்போமா..?’ என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவார்கள்.