UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

10 வருடங்கள் முன் எங்கள் கல்லூரி வகுப்புத் தோழிகள் எல்லாம் சந்திக்கலாம் என ஏற்பாடு செய்த போது வந்தவர்கள் வெறும் 5 பேர்தான், உள்ளூரிலேயே இருந்தாலும் குடும்பம், வீடு என்று சொல்லி வராமல் விட்டார்கள். அதன் பின் ஒவ்வொரு வருடமும் யார் வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் அந்த சந்திப்பை கட்டாயம் வைத்தோம். இறுதியாக ஒரு வருடத்திற்கு முன்தான் அத்தனை மாணவிகளும் சேர்ந்த சந்திப்பு சாத்தியப்பட்டது. அனைவரையும் ஒரே நாள், ஒரே சமயத்தில் வர வைப்பதற்கு எங்களுக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது.. இவையெல்லாம் பெண்களே தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வளையங்கள். இதனால்தான் அவர்கள் மன உளைச்சலுக்கும் அதிகம் ஆளாகிறார்கள்.

அது என்ன 'வீட்ல விசேஷமாங்க'?

கருவுறுவதற்குத் தயாராக இல்லாத, விருப்பம் இல்லாத பெண்ணை நிர்ப்பந்திப்பது மனித உரிமை மீறல். கருவுறுவது எப்படி ஒரு பெண்ணின் தேர்வாக இருக்க வேண்டுமோ, அதே போல் கருவை கலைப்பதும் அவள் தேர்வாக இருக்க வேண்டும்.

டைட்டானிக்கின் ஹீரோயின் யார்?

கடைசியாக, “போட்டை திருப்புகிறாயா? அல்லது உன்னை கடலில் தூக்கி வீசட்டுமா?”, என்று தன் முழு 5 அடி 10 அங்குல உயரத்துக்கும் உடல் நிமிர்த்தி படகின் கேப்டன் ராபர்ட் ஹிட்சென்சை அவர் கேட்க, லைஃப் போட் டைட்டானிக்குக்கு திரும்பி இன்னும் பலரை மீட்டது! கார்பேத்தியா கப்பல் டைட்டானிக்கிலிருந்து மீண்டவர்களை அமெரிக்காவில் இறக்கிவிடும் வரை- தப்பியவர்கள் ஒவ்வொருவருக்கும் யாராவது பொறுப்பானவர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை, கார்பேத்தியாவிலேயே சில வாரங்கள் தங்கி உதவினார் மாலி!

ஒரு கதை சொல்லட்டா, ஃப்ரெண்ட்ஸ்?

“பொம்பளபுள்ள, ஆம்பளைக்கு சமமா போய் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட ஊர்ப் பெருசுகளைக் கண்டுகொள்ளாமல், “ நீ நெறய படிக்கணும்” னு கழுத்தப்பிடிச்சு லைப்ரரிக்குள்ள தள்ளிவிட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம்.

மோதலும் காதலும்

உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று திரும்பும் தாத்தாவின் எடையும், பாட்டியின் எடையும் சமமாகவே இருக்கும். வலியோ வேதனையோ அவர்களுக்குள்ளாகவே பகிர்ந்து கடந்து விடுவார்கள். அன்பான வார்த்தைகளால் பேசியோ, அருகருகில் அமர்ந்தோ கூட அவர்களை கீதா பார்த்ததில்லை.

'டி' போட்டவரை 'டா' போட்டு அழைத்த முதல் பெண்ணிய போராளி!

மாபெரும் கவிஞர் ஒருவர் ‘டி’ போட்டு அழைத்ததாகவும் அதற்குப் பதிலாக ‘டா’ போட்டு பேசியது மட்டுமல்லாமல், வாய்க்கு வந்தபடி வசை பாடிய மிகவும் சுவாரசியமான பெண் ஒருவர் இருந்திருக்கிறார்! அப்படிப் பட்ட புரட்சிப் பெண்ணாக வலம் வந்தவர் கூழுக்கும் கஞ்சிக்கும் கவி பாடிய ஒளவையார். ‘டி’ போட்டு பேசியவர் யார்? சோழ மன்னனின் அவைப் புலவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான்!

எங்களுக்கும் பாக்கெட் வேணும் டீச்சர்

பெண்களின் உடைகள்ல பாக்கெட் இல்லாததால பொருள்கள், பணம் போன்றவற்றை கையிலோ, தனிப்பையிலோ கொண்டுபோக வேண்டியிருக்கு. அதனால அது மேலயே கவனம் செலுத்த வேண்டியிருக்கு.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

என்ன வசதி இருந்தாலும் வேலைக்குப் போறதை மட்டும் விட்டுடாத. அதுதான் பெண்பிள்ளைங்களுக்கு அஸ்திவாரம் மாதிரி. எந்த சூழ்நிலையிலும் அது காப்பாற்றும்.

கனடா எனும் கனவு தேசம்-2

என்னை நம்பி திசை, வழி கேட்டவர்கள் பட்ட பாடு, அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அதிகம் பழக்கமான ஊரிலேயே, உறியடி விளையாட்டில் சுற்றுவது போல இரண்டு முறை சுற்றிவிட்டால் போக வேண்டிய திசை குழம்பிவிடும், கண்ணை கட்டாமலேயே.

கேளடா மானிடவா-1

ஒற்றை மகனை அனுப்புகிறாயே, என்னாகுமோ ஏதாகுமோ என்கிற கவலை இல்லையா, எது குறித்தும் பயமில்லையா என்று. அதற்கு அந்த அம்மா சொல்கிறார், மேலே கையைக் காட்டி ‘சாமி, இருக்குது; அது பாத்துக்கும்’ என்று. ஊரில் இருக்கும்போது தான் பார்த்துக்கொள்வேன்; வேற்றூரில் சாமி பார்த்துக்கொள்ளும் என்று. இவை பற்றி, ‘இது இராஜபாட்டை அல்ல’ என்கிற தனது நூலில் நடிகர் சிவகுமார் சொல்லியிருப்பார்.