UNLEASH THE UNTOLD

அறிவதுவே!

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்கள் அனைத்தும் தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திக் கொண்டேதான் இருக்கும். ஒரு மாமரத்தில் இருந்து இன்னொரு மாமரம் உருவாக முடியும் என்பதுதான் ஓரறிவு உயிரினங்களும் மரபணுக்களைக் கடத்துவதற்கான சான்று. இதைத்தான் மரபியலின் தந்தையான கிரிகர் ஜான் மெண்டல் (Gregor John Mendel) பட்டாணியில் நிகழ்த்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

இன்றும் வாழும் தாய்வழிச் சமூகங்கள்

தாய்வழிச் சமூகங்களில் காணப்படும் குடும்ப அமைப்பு, கூட்டு குடும்பக் கூறுகளுடன்தான் இயங்குகிறது. தனிக்குடும்ப அமைப்பின் அலகுகள் அதில் இல்லை. ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் சிக்கலும் அவற்றுக்கு இல்லை. இதனால் குழந்தை வளர்ப்பு யாருக்கும் கடினமாக அமைவதில்லை.

தீட்டு எனும் தீராப் பிணி

அக்கிரகார வாழ்க்கையில், மாதவிடாய் நேரத்தில் செய்வதற்கென்றே பெண்களுக்கு நிறைய வேலைகளை ஒதுக்கியிருந்தார்கள்!

மழையும் ரயிலும்

அவனுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் எச்சரிக்கை விளக்கைப் பொருத்தியவாறு ஓடிவந்த சுகுமார் கையிலிருந்த சிவப்பு வெளிச்சமும், சிவாவின் முகத்தில் இருந்த பதற்றமும் தான் கணித்தது சரி என்று தோன்றியது.

தினமும் என்னைக் கவனி...

நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார்.

மோகன சுந்தரம்

‘மோகன சுந்தரம்’ 1951ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  டி.ஆர்.மகாலிங்கம் அளிக்கும் ஸ்ரீ சுகுமார் ப்ரொடக்ஷன்ஸ் அளிக்கும் மோகன சுந்தரம்; கே ஆர் ரங்கராஜுவின் துப்பறியும் நவீனம் எனத் திரைப்படம் தொடங்குகிறது.  நடிகர்கள்  டி.ஆர். மகாலிங்கம்…

சொல்லப்படாத கதைகள் - ஜென்னி எர்பென்பெக்

“இதுவரை சொல்லப்படாத எங்கள் வாழ்க்கையைச் சொல்கிறது இந்நாவல்” என்கின்றன அந்த மதிப்புரைகள். சொல்லப்படாதவர்களின் கதைகளைச் சொல்ல ஜென்னி எர்பன்பெக் போல நம்மில் பலர் வரவேண்டும்.

அடையாள அரசியல் – சாதகமா, பாதகமா?

அவரவர் பிரச்னைகளை அவரவரே போராடித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று இருந்தால் சமூக மற்றம் நிகழவே நிகழாது. சுரண்டல் இல்லாத சமுதாயத்தைப் படைக்க அனைவரும் அவரவர் அடையாளங்கள் மத்தியில் கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அனைத்து மக்களும் சமம்தான் என்கிற எண்ணத்தோடும் தோழமை உணர்வோடும் ஒன்று சேர்ந்து போராடுவதே தீர்வாகும். மனிதனாக ஒன்றிணைவோம் வாரீர்.

நூதன அறிவுத் திருடர்கள் ஜாக்கிரதை!

ஒரு நாவலில் உள்ள காட்சிகளை அல்லது கதைக்கருவை  அப்படியே எடுத்துத் தங்கள் கதைகளில் பயன்படுத்திக் கொண்டு அதனை இன்ஸ்பிரேஷன் அல்லது இன்ப்ஃளுயன்ஸ் என்று இங்குள்ள சிலர் சமாளிக்க வேறு செய்கிறார்கள். நிறையப் பேருக்கு இன்ஸ்பிரேஷன், இன்ப்ஃளுயன்ஸ், காப்பி இது மூன்றுக்குமே வித்தியாசம் தெரிவதில்லை. 

மல்லிகா

“சாதி கெட்ட நாய்களுக்கு எங்க சாதியில் பொண்ணு கேட்குதோ? ஒண்ணுந்தெரியாத எம்மவளை மயக்கி இழுத்துட்டுப் போகச் சொல்லிட்டு இப்ப குடும்பமா சேர்ந்து நாடகமாடறீகளோ..? வயிறெரிஞ்சி சொல்றேன்…குடும்பத்தோட நாசமாப் போயிடுவீங்க”, என சாபமிட்டு அழுதுகொண்டே போய்விட்டாள்.