சிங்காரி
‘மேல படிக்க வைச்சதனால்தான் இப்படி மேலே போய் நிக்குது’ என மகள் ஓடிப்போனதற்குப் படிப்பைக் காரணமாக காட்டும் செல்லத்தின் (சிங்காரியின்) அப்பா, ‘படித்திருந்தும் பகுத்தறிவு இழந்தேன்’ எனச் சொல்லும் சிவப்பிரகாசம், ‘அதிகமா படிச்சவனுடைய லட்சணமா இது?’ என கேள்வி கேட்கும் நடராஜன் எனப் படிப்பைச் சுற்றிப் பல சொல்லாடல்கள் வருகின்றன.
