UNLEASH THE UNTOLD

Year: 2024

லிடியா

லிடியா, ”விருது முக்கியமானதுதான். இவ்விருதுக்கு என்னுடன் பயணிக்கும் நண்பர்களுக்கு உரிமையானது. விருது பெற்றபோது என்னிடம் ஆராவாரமில்லாத அமைதியான உணர்வே இருந்தது. என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத வார இறுதிநாட்களில் பெற்றோருடன் குப்பை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்போது எனக்காகக் குப்பையிலிருந்து பொம்மை எடுத்து, பத்திரப்படுத்தி, நான் செல்லும் போது கொடுப்பார்கள். அந்த சந்தோஷத்தை விட வேறு எதுவும் பெரிதில்லை” என்றார்.

வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்: முதலாளிகளைக் காப்பாற்றுகிறதா அரசு?

தனது மக்களை கண்ணியத்துடன் நடத்துவதும், வாழ வழிவகை செய்வதும்தான் அரசின் ஆகப்பெரிய கடமையாக இருக்க முடியும். இந்த சமூக நீதி அரசு அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

பரதேவதையும் பெயர் மாற்றமும்

மனிதனுக்குச் சாதி பார்த்து பெயர் சூட்டும் வழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த பெருமையும் மனுநீதி சாஸ்திரத்தையேச் சாரும்.

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள் (2)

”அவளுக்கென்ன ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கறா. தின்னுட்டுத் தின்னுட்டுத் தூங்குறா. அப்புறம் குண்டாகாம என்ன செய்யும்?” என அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் தனது மகளைப் பார்த்துப் பெண்களின் தாய்மார்கள் புலம்புவதை நீங்கள் பார்த்திருக்கலாம். எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்கள்தாம் குண்டாக இருப்பதாகவும், ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படாது எனவும் புரிந்துகொள்ளப்படுகிறது.

காதலின் வெற்றி எது?

“நீ கேக்குறதெல்லாம் சரிதான், ஆனா ஒண்ணு புரிஞ்சிக்க, எங்க காலத்திலேயும் நாங்க வேலைக்குப் போனோம். ஆனா  வேலை நேரம் உங்களைப் போல இல்லை. இன்னொரு விஷயம் அப்போ எங்க வருமானம் வீட்டுக்குத் தேவை. அதனால புருஷன்களும் ஏதோ ஒரு சமையல் பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க, அதுக்கு மேல வகை வகையா செய்யவும் எங்களுக்கு வசதி இல்லை. புருஷன்களும் எங்களுக்குக் கொஞ்சம் உதவின்னு செஞ்சாங்க. இப்போ எல்லாருக்கும் சம்பளம் நல்லா வர்றதால குடும்பத்துக்கு உங்க வருமானம் எக்ஸ்ட்ரா தான். அதனால் உன்னைப் புரிஞ்சிக்கவோ உனக்கு உதவி செய்யவோ அவசியம் பிரபுவுக்கு இல்லை. இப்போ நிறைய பசங்க பொண்டாட்டி கஷ்டம் புரிஞ்சிக்கிறாங்க. பொறுப்பைப் பகிர்ந்துக்குறாங்க. ஆனா இதெல்லாம் வளர்ப்புல வர விஷயம். பிரபு வீட்டு ஆளுங்க கொஞ்சம் பழைய டைப், அதனால் இதைப் புரிஞ்சிக்கிற பக்குவம் அவருக்கு இல்லை. ஆனா சந்தேகமே இல்லாத உன் மேல ரொம்ப அன்பு இருக்கு. நீ அதைப் பிடிச்சுக்கிட்டு பிரபுவுக்குப் புரிய வை.“

 கனவு தேசமா, மர்ம தேசமா?

இதுவரை உலகில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரிதான அங்கோர்வாட், உலகின் எட்டாவது அதிசயம் எனப் பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும், உண்மையில் காண்போர் மனதைக் கவரும் முதல் அற்புதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் அழகால் மயக்கும் தாஜ்மஹாலையும், பகட்டாக எழும்பி நிற்கும் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கையும் பின்னுக்குத் தள்ளி விட்டு என் மனதில் முதலிடத்தில் வந்து நிற்பவை அங்கோர்வாட் கோயில்களே. யுனெஸ்கோவினால், உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, காலம் கடந்து நிற்கும் அந்தச் சிற்ப உலகிற்குள் நுழைந்த நொடியில் என் கனவு தேசம், மர்மதேசமாக மாறியதைப் போன்ற உணர்வு.

கருவறையும் அரசியலும்

2021இல் வெளியான இந்தியக் கருக்கலைப்பு சட்டத்தின் திருத்தத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.‌ சில குறைபாடுகளை 20 வாரங்களுக்குள் கண்டறிய முடியாது என்பதால் இச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தாயின் உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கருக்கலைப்புச் செய்யலாம். இங்கு தாயா, சேயா என்று பார்த்தால் தாயின் நலத்திற்குதான் முதலுரிமை.

பொங்குமாக்கடல்

கைக்கடிகாரம் 8.30 என்று காட்டியது.  இந்நேரம் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து கிளம்பி இருக்கும். இனியும் யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை, விரைந்து சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்று திரும்பியவர் கால்களில் இருந்த ஷுவின் கணமும் உணர்ச்சியின் வேகமும் சேர்ந்து பின்னால் இழுத்தது.

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள்

பருமனாக இருக்கும் பெண்கள் ஜவுளிக்கடையில் தங்களுக்கான உடைகள் கேட்கக் கூச்சப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பருமனாக இருப்பதாலேயே அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழல் சில நேரம் ஏற்படுகிறது. “சாரி மேடம். உங்க சைஸ்க்கு கிடைக்கல” என்று பணியாட்கள் தயங்கியபடி சொல்லும் போது அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால், இவையனைத்தும் நம் உடல் பருமனாகும் வரை நமக்குப் புரிவதில்லை.

குரங்காட்டி வித்தை

அதிகாலை தொடங்கினால், எல்லாம் முடிந்து, வீட்டினர் சாப்பிடக் குறைந்தது மதியம் இரண்டுமணியாவது ஆகிவிடும். நீராடிவிட்டு, அவரவர் நடைமுறைப்படி உடையணிந்து, தலையில் கட்டிய ஈரத் துணியுடன், அடுக்களைக்குள் நுழைந்தால், பெண்களின் அன்றைய நாள் அங்கேயே முடிந்துபோகும்.