UNLEASH THE UNTOLD

Year: 2023

போர்களின் தேசம்

சீனா, பிரெஞ்சு, அமெரிக்கா, ஜப்பான் என நான்கு ஏகாதிபத்தியங்களை முறியடித்து வெற்றிவாகை சூடிய வீரஞ்செறிந்த மக்கள் வியட்நாமிய மக்கள். தேச விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது அவர்களது போராட்டம். உலகின் மிக நீண்ட போரைத் தன் மார்பில் சுமந்து தன்னைத் தொலைக்காமல் மீட்டெடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷமான வியட்நாம் உண்மையில் போர்களின் தேசம்தான். அத்தகைய போர்களை அனுபவித்தவர்கள், இன்று போர் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல், அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். கொடூரமான போர்கள் அவர்களை மனிதநேயமிக்கவர்களாக மாற்றியிருக்கிறது. நிறைய புன்னகை செய்கிறார்கள். உதவி செய்வதில் தாராளமானவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்கிறார்கள்.

இந்தப் பெண்களே இப்படித்தான்...

முதலில் உங்கள் சகோதரர் சிவாவுடனான உறவை முறித்துக் கொள்ளுங்கள். அவர் பேச்சில் உண்மை இருக்கிறதென்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் போய் காயத்ரியிடம் கேட்டால் என்ன நடக்கும்? வீண் சலசலப்பு உண்டாகும். கோபப்பட்டு அவர் திருமணத்தை நிறுத்தி விட்டால் உங்கள் வாழ்க்கையே வீணாகிவிடும். உங்கள் பெற்றோர் செய்த திருமணச் செலவெல்லாம் பாழாகிவிடும். முக்கியமாக உங்கள் குடும்ப கௌரவமே குலைந்துவிடும்.

குற்றவுணர்வு கொள்ளும் அம்மாக்களின் கவனத்திற்கு...

குழந்தை வளர்ப்பு என்பது என்னுடைய பொறுப்பு, இன்னும் சொல்லப்போனால் அது என்னுடைய பொறுப்பு மட்டும்தான் எனும் எண்ணம் அந்தப் பெண்களின் மனதில் ஆழமாக இருப்பதுதான். இந்த எண்ணம் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பெற்றோரும் வீட்டிலுள்ள பெரியவர்களும் ஊராரும் இந்தச் சமூகமும் தொடர்ந்து பெண்ணிற்கென சில கடமைகளை வரையறுத்து வைத்துக் கொண்டு, அதை ஒரு பெண் செய்தால் மட்டும்தான் அவள் சிறந்த பெண் எனும் சிந்தனையை ஊட்டிதான் வளர்க்கிறார்கள். அப்படி ஒரு பெண் சமையலில் உப்புப் போடுவதில் தொடங்கி குழந்தை வளர்ப்பு வரை, நூறு சதவீதம் தனக்கென வரையறுக்கப்பட்டுள்ள எல்லாக் கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடனேயே வளர்கிறாள் அல்லது வளர்க்கப்படுகிறாள்.

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்வோம்

இந்தக் குறைபாடு நிறைய காரணங்களால் ஏற்படலாம், அதில் மரபணு மாற்றங்களும் அடங்கும். இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான வேறு சில காரணங்கள் என்று சொல்லப்படுபவை சுற்றுச்சூழலும் உயிரியல் காரணிகளும். அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல் பிறரிடம் நட்பு பாராட்டவோ சகஜமாகப் பேசிப் பழகவோ முடியாது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு அவர்களுக்கான தனிப்பட்ட உலகில் வாழ்வர். இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளை ஒரு வயதிற்குள்ளாகவே கண்டறிய முடியும். சில குழந்தைகளுக்கு இரண்டு வயதிற்கு மேல்தான் இந்த அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். அதுவரை மற்ற குழந்தைகளைப் போல் அவர்களும் சாதரணமாகவே அந்தந்த நேரத்திற்குரிய வளர்ச்சியோடு இருப்பர்.

அவள் என்ன செய்யப் போகிறாள்?

ஆரம்பத்திலிருந்து எல்லா விஷயங்களையும் அறிந்திருந்த தோழி அழுத்தந்திருத்தமாக, “வேண்டாம்னு சொல்லிருடி… நீ பட்ட கஷடமெல்லாம் போதாதா? இந்த சைக்கோ குடும்பத்துல உன் மகளையும் சிக்க வெச்சுறாதே” என்றாள். இந்தப் பெண் மறுக்கவே மீண்டும் பாராமுகமாகச் சென்று விட்டனர் கணவன் வீட்டார். அந்தக் குழந்தைக்கு சிறு செலவுகூடச் செய்யவில்லை அவர். இதனிடையே அந்தப் பெண்ணின் அம்மாவும் காலமானார். இவர்கள் இருவர் மட்டும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அதுவும் நெடுநாள் நீடிக்கவில்லை. அந்தக் குழந்தை கல்லூரிப் படிப்பை முடித்த உடனே மீண்டும் புகுந்த வீட்டார் படையெடுப்பு. அவரது சகோதரி மகனும் படிப்பை முடித்துவிட்டு வேலையில் அமர்ந்திருந்தான். அதைக் காரணம் காட்டி மீண்டும் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. மாமியார் இந்த முறை இந்தப் பெண்ணின் காலிலேயே விழுந்துவிட்டார்.

மாற்றி யோசி

மனித இனம் உருவாகிய நாளில் இருந்து இன்று வரை நாம் அடைந்த அத்தனை முன்னேற்றமும் வசதிகளும் யாரோ ஒருவர் ஆழமாகச் சிந்தித்து மாற்றி யோசித்ததால்தான் கிடைத்தது. அப்படி இருக்கும் போது நீங்கள் புதிது புதிதாக யோசிக்கா விடில் வாழ்வில் முன்னேற்றம் ஏது? ஆனால், நாம்தான் அதற்குப் பழகவே இல்லையே. நமது மூளையும் மனமும் ஒரு வட்டத்தைத் தாண்டி சிந்திக்க முடியாமல் சமூகம் நம்மைப் பதப்படுத்தி (Conditioning) இருக்கிறது. இது போல out of box thinking சிலருக்குப் பிறவியிலேயே அமையும் என்றாலும் முயன்றால் தேர்ச்சி நிச்சயம்.

உதாரண மனுஷியாக...

கோவையில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வருகிறார். லீவு எடுக்க முடியாத சூழலில் லீவு எடுக்க வேண்டாம் என்று வைராக்கியத்துடன், அறுவை சிகிச்சை முடிந்தபின் வேதி சிகிச்சை எடுத்துக் கொண்டே அலுவலகத்துக்கும் சென்று, பணிபுரிந்து வருகிறார். வேதிசிகிச்சை கண்டு பெரிதாக அவர் அலட்டிக் கொள்வதே இல்லை. அவரைப் போன மாதம் சந்தித்தபோது மிரண்டுவிட்டேன் அவர் தைரியத்தைப் பார்த்து. எவ்வளவு துணிச்சல் உள்ளவர். 38 வயதுதான் அவருக்கு.

இப்போ யாருங்க சாதி பார்க்கிறாங்க?

மதம், சாதி, குடி, இனம், மொழி பேதங்களை மறந்தும், பேசச் தயங்கியும், பேசப் பயந்தும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குச் சாதி, மத, இன, குடி, மொழி பேதங்களைப் பேசும் தைரியத்தை ஊட்டி எழுப்புகின்றனர் இவர்கள். “நீ என்ன சாதி?” என்று கேட்க வெட்கப்பட்டவன், நான் இன்ன சாதி என்று அறிவிக்க சாதிக்கயிறு கட்டிக்கொள்ளும் துணிச்சலை உண்டாக்கியிருக்கிறது இவர்கள் செய்யும் அரசியல்.

இனி கியர் வண்டியை எடுக்காதே...

பெரியப்பா வீட்டுக்குப் போனதும் அங்கு அண்ணன்கள், பெரியப்பா எல்லாம் இந்த வண்டியை ஓட்டறியா எனச் சொன்னதும் வார்த்தையில் விவரிக்க இயலாத பெருமிதம் வந்தது. வண்டியைச் சொல்லிக் கொடுத்த ஜெகன் அண்ணன் வாரி அணைத்துக்கொண்டான். “சூப்பர் பாப்பா இப்படித்தான் தைரியமா விடாம ஓட்டணும்.” புதியதாகப் பிறப்பெடுத்த நெபுலாக்களெல்லாம் வாழ்த்துச் சொன்னது போல இருந்தது.

திருமணத்தை மீறிய உறவு தீர்வாகுமா? - 2

பொதுவாக சரியான பாலியல் துணை அமையாதவர்கள் இப்படித்தான் ஒரு குழப்ப நிலையிலேயே வாழ்க்கையை ஓட்டுவார்கள். தாங்களும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள், அடுத்தவர்கள் குதூகலமாக வாழ்ந்தாலும் பொறுக்காது. மற்றவர்களையும் சந்தோஷமாக வாழ விடமாட்டார்கள்.