UNLEASH THE UNTOLD

Year: 2023

புற்றுநோய்களும் சிகிச்சை வகைகளும்

இந்த கீமோதெரபி மருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால்தான் இதனை பல நாட்கள் இடைவெளி விட்டுக் கொடுப்பார்கள். ஏனெனில் இடையில் சாதாரண செல்கள் நன்றாகச் செயல்பட சில நாட்கள் தேவைப்படும். இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இரு வேறு நபர்களுக்கு ஒரே வகையான புற்றுநோய் , அதாவது நுரையீரல் புற்று நோய் இருக்கலாம். ஆனால், இருவருக்கும் ஒரே வகையான கீமோ தெரபி இருக்காது. ஒவ்வொருவருக்கும் அவரின் தன்மை பொறுத்துப் புற்றுநோய் சிகிச்சை வேறுபடும். ஒரேவகை புற்றுநோய் எத்தனை பேருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தன்மை பொருத்து சிகிச்சை தன்மை வேறுபடும். இரண்டு புற்றுநோய்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தனிப்பட்ட புற்றுநோய்க்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. ஒரே வகைப் புற்றுநோயும்கூட அவற்றின் தன்மைகள் பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கலாம்.

சந்திரலேகா

இறுதியில் ஆறு நிமிடங்கள் இடம் பெறும், முரசு நடனம் என்பதுதான் பிரம்மாண்டத்தின் உச்சம். இசை, நடன அமைப்பு, அரங்க அமைப்பு என எத்தனை தடவைப் பார்த்தாலும், புதிதாகவே பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. 400 நடனக் கலைஞர்களுள் ஒருவராக நடித்த (அறிமுகமான) எஸ்.என்.லட்சுமி அம்மா தன் இறுதிக்காலம் வரை ( 2012), 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர், இவர் மிகக் கூடுதலான காலம் நடிப்புத் துறையில் இருந்தவர் என்கிற பட்டியலில் உறுதியாக இடம் பெறுபவர்.

நேபாம் சிறுமியை மறக்க முடியுமா?

ஒரு வல்லரசு ஏகாதிபத்தியத்தை வெற்றிகொள்வதற்காக வியட்நாம் கொடுத்திருக்கும், கொடுத்துக்கொண்டிருக்கும் விலை மிக மிக அதிகம். பேராசைக்கான போர்களில் எப்போதும் அப்பாவி ஆடுகளே பலியாகின்றன.

அவனது அந்தரங்கம் – அண்ணாமலையின் ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

வாழ்க்கையின் யதார்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய வயதில் இருக்கிறீர்கள். உங்கள் நண்பருக்குத் திருமணமாகி ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது. அவரது மகிழ்ச்சியைத் தள்ளி நின்று வாழ்த்துங்கள். ஒரு வீட்டுக்கு வாழப் போய்விட்ட அவருக்கு இனி மனைவியையும் மாமனார், மாமியாரையும் வீட்டையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்புகள்தாம் அதிகம் இருக்கும். அதை நீங்கள்தான் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை எனும் ஆதங்கத்தில்தான் இப்படி நண்பரைப் போட்டுப் பிடுங்குகிறீர்கள்.

தடுப்பூசி ப்ளீஸ்

தடுப்பூசிகளால் இவ்வுலகின் ஜனத்தொகை மீது ஆதிக்கம் செலுத்திய சில நோய்கள் அறவே நீக்கப்பட்டன. மக்களின் அவசரப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் சில பக்கவிளைவுகள் உள்ளன. அதன் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொண்டு, யார் அந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். கேன்சர், எச்ஐவி போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் மற்றும் ஒரு புரட்சி ஏற்படும்.

முடிவெடுக்கும் கலை

இங்கு முதல் கேள்வி நம் முடிவுகளை நாம் எடுக்கிறோமா என்பது. நாம் எடுக்கும் முடிவிற்கே நாம் பொறுப்பேற்க முடியும். அது தவறாகும்பட்சத்தில் மாற்று வழியைச் சிந்திக்க முடியும். பெற்றவர்கள், அறிஞர்கள், கற்றவர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆலோசனைகள் சொல்லலாம். ஆனால், அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். இதைச் சின்னச் சின்ன முடிவுகளில் பழகும்போதுதான் வாழ்வை மாற்றக் கூடிய விஷயங்களில் நாம் தடுமாற்றமின்றி செயல்பட முடியும்.

புற்றுநோய் வகைகளும் சிகிச்சை முறைகளும்

பொதுவாக கீமோதெரபி மருந்துகள் 3வாரங்களுக்கு ஒரு முறை (21 நாட்கள்) கொடுக்கப்படும். இதன் காரணம் என்ன வென்றால் கீமோதெரபி மருந்துகளுக்கு எது சாதாரண செல், எது புற்றுநோய் செல் என்று இனம் பிரித்துப் பார்க்கத் தெரியாது. எனவே எல்லா செல்களின் DNAவையும் சிதைத்து விடும். ஆனால், சாதாரண செல்கள் மீண்டும் அவற்றில் இருக்கும் நொதியால், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும், அதற்குத்தான் இந்த மூன்று வார கால அவகாசம் உதவுகிறது.

தீண்ட... தீண்ட... தொடத் தொட மலரும் காமம்…

மென்மையாக முத்தமிடுதல், கொஞ்சுதல், மென்மையாகவும் இறுக்கமாகவும் கட்டிப்பிடித்தல் இவற்றைச் செய்யும் போதே பெண்களின் உடலில் ‘ஆக்ஸிடோசின்’ மற்றும் ‘டோபமைன்’ சுரப்பு அதிகரிக்கத் தொடங்கி மகிழ்ச்சியுணர்வைத் தூண்டிவிடும்.

அடிக்கிற கை அணைக்குமா?

உலகின் எண்பது நாடுகளில் உள்ள இருபத்தைந்து சதவீத மக்கள் ஆண் பெண்ணை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஐநா சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பாதிப்பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்றும், இது இயல்பான ஒன்று என்கிற மனநிலையிலும்தான் இன்னும் இருக்கின்றனர். முதல் முறை ஆண் கை ஓங்கும் போதே பெண் தனது ஆட்சேபத்தை வன்மையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இதுவே வாடிக்கையாகிவிடும். கல்வி, வேலை, பொருளாதாரம் என்று எதுவும் ஆணுக்கு பெண்ணை அடிப்பது தவறென்று போதிக்காதது பெரிய ஆச்சரியம்தான். கணவன் என்றாலே அடிக்கும் உரிமையும் தன்னாலே வந்துவிடுவதாகப் பெரும்பாலான ஆண்களும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலேயே ஊறிக் கிடந்த பெண்களும் எண்ணிக்கொள்வது தவறென்று உணர்த்த வேண்டும்.

ஞானசவுந்தரி (1948)

ஞானசவுந்தரியையும் குழந்தையையும் கொல்லச் சொன்னது அந்தப் புதிய ஓலை. பிலவேந்திரனின் தந்தை அவ்வாறு செய்யாமல், ஞானசவுந்தரியைக் காட்டுக்கு அனுப்பி விடுகிறார். ஞானசவுந்தரி காட்டில் அன்னை மரியாள் உதவியால் இழந்த கைகளைப் பெறுகிறார்.