UNLEASH THE UNTOLD

Year: 2023

தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்

ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். இவருடைய படைப்புகள் கன்னடத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் வளர்ச்சிக் கழக விருது, கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு உள்பட பல விருதுகளைப் பெற்றவர். சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். உலக வரலாறு பற்றிய அவருடைய பொது அறிவும் வியப்பை அளிக்கும் வண்ணம் இருந்தது.

வேலைக்காரி

‘குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, வளைந்து வளைந்து நடப்பது போலல்லவா வளைந்து வளைந்து பேசுகிறாய் என்கிற கேள்விக்கு மனதில் பாரம் இருந்தால் நாக்கு வளையத்தானே செய்யும்’ என்கிற பதில் போன்ற பல வரிகள் அண்ணாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகள்.

குமுதினி (1905 – 1986)

மகாத்மா காந்தியிடம்  மட்டற்ற பக்தி கொண்டு சுதந்திர பாரதம் உருவாக வேண்டும் என்று அயராது உழைத்தவர்களில் குமுதினியும் ஒருவர். காந்தீயத்தை முன் வைத்து அவர் எழுதியுள்ள கதைகள் மற்றும் கட்டுரைகள் அனைத்துமே விடுதலைப் போராட்டத்தை எடுத்துக்கூறுகின்றன. இவற்றை ஒரு  மணித்திரள்  எனலாம். இதற்கு முக்கிய காரணம் வெறும் பேச்சு, எழுத்து என்று அவர் பின்தங்கவில்லை.

உடையில் பாலின சமத்துவம்

“அவ்ளோ கஷ்டமா அப்போ படிக்கறது. இப்போல்லாம் அவ்ளோ சிரமம் இல்ல. அப்போ நாங்க ஜாலியா படிக்கறோம். அம்மா அப்போ தாவணி கட்டிருக்கீங்க, பொட்டு பாரு பெருசா நேர் பொட்டு வைச்சி அழகா இருக்கீங்கம்மா. இப்போ டீச்சரா வேலை செஞ்சாலும் ஸ்கூல்க்கு சுடிதார் போட்டுக்கிட்டுப் போறீங்க. அப்போ கொஞ்சம் பார்க்க கம்பீரமாவும் இருக்கீங்க. லவ் யூ ம்மா” எனக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்தான் விவேக்.

என் மனைவிக்கு மாதவிடாய் வலி...

மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு வரும் கடுமையான வயிற்றுவலி Dysmenorrhea எனப்படும். இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய அளவுக்குக் கடுமையான வயிற்று வலி ஓரிரு நாட்களுக்கு மேலும் தொடர வாய்ப்பு உண்டு. சிலருக்கு வலியுடன் வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைவலி, மயக்கமும் வரலாம்.

வலி நல்லது

வலியைக் குணப்படுத்துவது பற்றி யோசிக்காமல் வலியின் காரணத்தைக் குணப்படுத்துவதுப் பற்றி யோசிப்பதுதான் சாமர்த்தியம். அதுதான் நிரந்தர தீர்வும்கூட.

இலக்கணம் மாறுதே...

பேசிக்கொண்டே நித்யாவின் தோள்களில் கை போட்டுக் கொண்டான். மெதுவாகத் தன்னை நோக்கி இழுத்து, தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். ஒவ்வொரு முறை அவன் அணைக்கும் போது, அவள் புதிதாகப் பிறந்தாள். கண் மூடி, அவன் மார்பில் இருந்துவந்த, பழகிப்போன வியர்வை கலந்த ஸ்ப்ரே வாசனையை சுவாசிக்கையில் அவள் இதயம் பலமாகத் துடித்தது. அந்த வாசனை அவளுக்குப் புதிதல்ல. ஆனால், அன்று ஒருவித மன நெருடலைத் தந்தது.

எதிர்மறை உணர்வுகள்

உங்கள் மனநலனில் பிரச்னை இருக்கலாம் என்று ஓரளவு தெரிந்தவுடன், அதற்காகப் பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம். உடனடியாகச் செய்ய வேண்டியது உங்களால் முடிந்த உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும்தான். இரண்டும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் தொடர் பயிற்சி கைகொடுக்கும்.

பெண்ணுக்குப் பெண் எதிரியா?

ஊடகங்கள் அறத்தை இழக்காமல் அதன் கடமை உணர்ந்து நடக்க வேண்டும். சமஅளவு எண்ணிக்கையிலுள்ள சக உயிரான பெண்கள் மீது வன்மத்தை கட்டவிழ்த்துவிடுவது ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகோலாது. வியாபாரம் மட்டும் ஊடகத்தின் அறமாகாது. பொதுச் சமூகத்தின் கொண்டாட்டத்தை, சிந்தனையை மாற்றுவதில் ஊடகத்தின் பங்கு  அலப்பறியது. பண்பாட்டு ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பதில் பண்பாட்டின் முக்கியக் கூறாக இருக்கக்கூடிய ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அரசியல் சீர்திருத்தத்தைக் காட்டிலும் முக்கியமானது சமூக சீர்திருத்தம் என்பதை வலியுறுத்தவே  அம்பேத்கர் அரசியல் சீர்திருத்தவாதியைக் காட்டிலும் வலிமையானவர் சமூக சீர்திருத்தவாதி என்கிறார்.

சனாதனம் உண்மையிலேயே தர்மமா?

1964இல் லக்னோவில் வெளியிடப்பட்ட பெர்சிய மொழி அகராதியில் இந்து என்றால் திருடன், அடிமை, வழிப்பறியாளர் என பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தம் சரியா? ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு இந்துயிசம் பற்றி எதுவும் தெரியாது என்பது உண்மையா? இந்து என்கிற வார்த்தையை உருவாக்கியது யார்? அந்த வார்த்தைக்கான அர்த்தம் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா? உள்ளிட்ட கேள்விகளை முன் வைக்கிறார். இந்தக் கேள்விகள் எல்லாமே அர்த்தபூர்வமாகவும், தர்க்கபூர்வமாகவும் அமைந்திருக்கின்றன. சனாதனத்தைப் பின்பற்றும் எவர் வேண்டுமானாலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கலாம்.