UNLEASH THE UNTOLD

Month: August 2023

அவள் என்ன செய்யப் போகிறாள்?

ஆரம்பத்திலிருந்து எல்லா விஷயங்களையும் அறிந்திருந்த தோழி அழுத்தந்திருத்தமாக, “வேண்டாம்னு சொல்லிருடி… நீ பட்ட கஷடமெல்லாம் போதாதா? இந்த சைக்கோ குடும்பத்துல உன் மகளையும் சிக்க வெச்சுறாதே” என்றாள். இந்தப் பெண் மறுக்கவே மீண்டும் பாராமுகமாகச் சென்று விட்டனர் கணவன் வீட்டார். அந்தக் குழந்தைக்கு சிறு செலவுகூடச் செய்யவில்லை அவர். இதனிடையே அந்தப் பெண்ணின் அம்மாவும் காலமானார். இவர்கள் இருவர் மட்டும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அதுவும் நெடுநாள் நீடிக்கவில்லை. அந்தக் குழந்தை கல்லூரிப் படிப்பை முடித்த உடனே மீண்டும் புகுந்த வீட்டார் படையெடுப்பு. அவரது சகோதரி மகனும் படிப்பை முடித்துவிட்டு வேலையில் அமர்ந்திருந்தான். அதைக் காரணம் காட்டி மீண்டும் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. மாமியார் இந்த முறை இந்தப் பெண்ணின் காலிலேயே விழுந்துவிட்டார்.

மாற்றி யோசி

மனித இனம் உருவாகிய நாளில் இருந்து இன்று வரை நாம் அடைந்த அத்தனை முன்னேற்றமும் வசதிகளும் யாரோ ஒருவர் ஆழமாகச் சிந்தித்து மாற்றி யோசித்ததால்தான் கிடைத்தது. அப்படி இருக்கும் போது நீங்கள் புதிது புதிதாக யோசிக்கா விடில் வாழ்வில் முன்னேற்றம் ஏது? ஆனால், நாம்தான் அதற்குப் பழகவே இல்லையே. நமது மூளையும் மனமும் ஒரு வட்டத்தைத் தாண்டி சிந்திக்க முடியாமல் சமூகம் நம்மைப் பதப்படுத்தி (Conditioning) இருக்கிறது. இது போல out of box thinking சிலருக்குப் பிறவியிலேயே அமையும் என்றாலும் முயன்றால் தேர்ச்சி நிச்சயம்.

உதாரண மனுஷியாக...

கோவையில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வருகிறார். லீவு எடுக்க முடியாத சூழலில் லீவு எடுக்க வேண்டாம் என்று வைராக்கியத்துடன், அறுவை சிகிச்சை முடிந்தபின் வேதி சிகிச்சை எடுத்துக் கொண்டே அலுவலகத்துக்கும் சென்று, பணிபுரிந்து வருகிறார். வேதிசிகிச்சை கண்டு பெரிதாக அவர் அலட்டிக் கொள்வதே இல்லை. அவரைப் போன மாதம் சந்தித்தபோது மிரண்டுவிட்டேன் அவர் தைரியத்தைப் பார்த்து. எவ்வளவு துணிச்சல் உள்ளவர். 38 வயதுதான் அவருக்கு.

இப்போ யாருங்க சாதி பார்க்கிறாங்க?

மதம், சாதி, குடி, இனம், மொழி பேதங்களை மறந்தும், பேசச் தயங்கியும், பேசப் பயந்தும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குச் சாதி, மத, இன, குடி, மொழி பேதங்களைப் பேசும் தைரியத்தை ஊட்டி எழுப்புகின்றனர் இவர்கள். “நீ என்ன சாதி?” என்று கேட்க வெட்கப்பட்டவன், நான் இன்ன சாதி என்று அறிவிக்க சாதிக்கயிறு கட்டிக்கொள்ளும் துணிச்சலை உண்டாக்கியிருக்கிறது இவர்கள் செய்யும் அரசியல்.

இனி கியர் வண்டியை எடுக்காதே...

பெரியப்பா வீட்டுக்குப் போனதும் அங்கு அண்ணன்கள், பெரியப்பா எல்லாம் இந்த வண்டியை ஓட்டறியா எனச் சொன்னதும் வார்த்தையில் விவரிக்க இயலாத பெருமிதம் வந்தது. வண்டியைச் சொல்லிக் கொடுத்த ஜெகன் அண்ணன் வாரி அணைத்துக்கொண்டான். “சூப்பர் பாப்பா இப்படித்தான் தைரியமா விடாம ஓட்டணும்.” புதியதாகப் பிறப்பெடுத்த நெபுலாக்களெல்லாம் வாழ்த்துச் சொன்னது போல இருந்தது.

திருமணத்தை மீறிய உறவு தீர்வாகுமா? - 2

பொதுவாக சரியான பாலியல் துணை அமையாதவர்கள் இப்படித்தான் ஒரு குழப்ப நிலையிலேயே வாழ்க்கையை ஓட்டுவார்கள். தாங்களும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள், அடுத்தவர்கள் குதூகலமாக வாழ்ந்தாலும் பொறுக்காது. மற்றவர்களையும் சந்தோஷமாக வாழ விடமாட்டார்கள். 

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

கல்வி என்னைக் கர்வியாக்கியது, மடமையால் மதி இழந்தேன். என்னை மன்னித்து ஆட்கொள்ள வேண்டும் என சிந்தாமணி, வருங்கால கணவர் காலில் விழுகிறார். காலில் விழுவது என்பது, பாவேந்தரின் கொள்கைக்கு மாறுபாடானதாகத் தெரிந்தது.

நள்ளிரவிலும் பெண்கள் ஊர் சுற்றலாம்!

ஆண்களும் பெண்களும் பகல் முழுக்கக் கடுமையாக உழைக்கிறார்கள். மாலையானதும் ஹோ சி மின் நகரின் முகம் மாறுகிறது. வீட்டுக்குள் யாரும் அடைந்து கிடப்பதில்லை. அத்தனை வீடுகளிலும் வாசலில் சின்ன சின்ன நாற்காலிகளில், வீட்டு மனிதர்களைக் காண முடிகிறது. யாரும் தொலைக்காட்சித் தொடர்களில் தங்களைத் தொலைப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு சாலையிலும் குறிப்பிட்ட பகுதி பொழுதுபோக்கு/விளையாட்டு மைதானமாக விடப்பட்டுள்ளது. இரவு ஆனதும் குடும்பம் குடும்பமாகவும் நண்பர்களுடனும் அங்கு திரள்கிறார்கள். கயிறு விளையாட்டு, நடனம், ஓவியர்கள், ஓவியங்கள், பலூன்கள், ஸ்கேட்டிங், உடல்முழுக்க பெயின்ட் அடித்துக்கொண்ட மனிதர்கள் என அந்தப் பகுதி களைகட்டுகிறது. இளைஞர்களை, இளைஞிகளைத் திருவிழா கூட்டம்போல, கும்பல் கும்பலாகப் பார்க்க முடிகிறது. அவர்களில் பலர் ஆங்காங்கே தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்க, சுற்றியிருக்கும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.

அந்த நாலு பேருக்கு நன்றி

அந்த நாலு பேர் இல்லாத சமூகம் இல்லை. ஏனெனில் அந்த நாலு பேர் யாரோவும் அல்ல. நாம்கூட யாரோ ஒருவர் வாழ்வில் அந்த நாலு பேரில் ஒருவராக இருக்கலாம். நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவும் நால்வரில் ஒருவராக இருப்போம். வலிகள் நிறைந்த ஒருவருக்கு அன்பும் ஆறுதலும் செலுத்தும் நால்வரில் ஒருவராக இருப்போம். ஒருவருக்கு நம்பிக்கையூட்டும் நால்வரில் ஒருவராக இருப்போம். நான்கு விதமாகச் சொல்லும் அந்த நாலு பேரில் நல்ல விதமாகச் சொல்லும் ஒருவராக நாம் இருக்க முயற்சிப்போம்.

ரத்னாவும் அப்பாவும்

ஒருவாறு அப்பாவும் மகளும் சமரசமாகி, அப்பா அடுப்படியை ஆக்ரமிக்க, அப்பாவின் சமயற்கலையை அருகில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ரத்னா. மனதில் அம்மாவின் நினைவு வந்து போனது. அம்மா உடல்நலம் சரியில்லாத தன் பெற்றோரைப் பார்க்க வெளியூர் சென்றிருந்தார்.