UNLEASH THE UNTOLD

Month: August 2023

தடுப்பூசி ப்ளீஸ்

தடுப்பூசிகளால் இவ்வுலகின் ஜனத்தொகை மீது ஆதிக்கம் செலுத்திய சில நோய்கள் அறவே நீக்கப்பட்டன. மக்களின் அவசரப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் சில பக்கவிளைவுகள் உள்ளன. அதன் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொண்டு, யார் அந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். கேன்சர், எச்ஐவி போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் மற்றும் ஒரு புரட்சி ஏற்படும்.

முடிவெடுக்கும் கலை

இங்கு முதல் கேள்வி நம் முடிவுகளை நாம் எடுக்கிறோமா என்பது. நாம் எடுக்கும் முடிவிற்கே நாம் பொறுப்பேற்க முடியும். அது தவறாகும்பட்சத்தில் மாற்று வழியைச் சிந்திக்க முடியும். பெற்றவர்கள், அறிஞர்கள், கற்றவர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆலோசனைகள் சொல்லலாம். ஆனால், அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். இதைச் சின்னச் சின்ன முடிவுகளில் பழகும்போதுதான் வாழ்வை மாற்றக் கூடிய விஷயங்களில் நாம் தடுமாற்றமின்றி செயல்பட முடியும்.

புற்றுநோய் வகைகளும் சிகிச்சை முறைகளும்

பொதுவாக கீமோதெரபி மருந்துகள் 3வாரங்களுக்கு ஒரு முறை (21 நாட்கள்) கொடுக்கப்படும். இதன் காரணம் என்ன வென்றால் கீமோதெரபி மருந்துகளுக்கு எது சாதாரண செல், எது புற்றுநோய் செல் என்று இனம் பிரித்துப் பார்க்கத் தெரியாது. எனவே எல்லா செல்களின் DNAவையும் சிதைத்து விடும். ஆனால், சாதாரண செல்கள் மீண்டும் அவற்றில் இருக்கும் நொதியால், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும், அதற்குத்தான் இந்த மூன்று வார கால அவகாசம் உதவுகிறது.

தீண்ட... தீண்ட... தொடத் தொட மலரும் காமம்…

மென்மையாக முத்தமிடுதல், கொஞ்சுதல், மென்மையாகவும் இறுக்கமாகவும் கட்டிப்பிடித்தல் இவற்றைச் செய்யும் போதே பெண்களின் உடலில் ‘ஆக்ஸிடோசின்’ மற்றும் ‘டோபமைன்’ சுரப்பு அதிகரிக்கத் தொடங்கி மகிழ்ச்சியுணர்வைத் தூண்டிவிடும்.

அடிக்கிற கை அணைக்குமா?

உலகின் எண்பது நாடுகளில் உள்ள இருபத்தைந்து சதவீத மக்கள் ஆண் பெண்ணை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஐநா சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பாதிப்பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்றும், இது இயல்பான ஒன்று என்கிற மனநிலையிலும்தான் இன்னும் இருக்கின்றனர். முதல் முறை ஆண் கை ஓங்கும் போதே பெண் தனது ஆட்சேபத்தை வன்மையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இதுவே வாடிக்கையாகிவிடும். கல்வி, வேலை, பொருளாதாரம் என்று எதுவும் ஆணுக்கு பெண்ணை அடிப்பது தவறென்று போதிக்காதது பெரிய ஆச்சரியம்தான். கணவன் என்றாலே அடிக்கும் உரிமையும் தன்னாலே வந்துவிடுவதாகப் பெரும்பாலான ஆண்களும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலேயே ஊறிக் கிடந்த பெண்களும் எண்ணிக்கொள்வது தவறென்று உணர்த்த வேண்டும்.

ஞானசவுந்தரி (1948)

ஞானசவுந்தரியையும் குழந்தையையும் கொல்லச் சொன்னது அந்தப் புதிய ஓலை. பிலவேந்திரனின் தந்தை அவ்வாறு செய்யாமல், ஞானசவுந்தரியைக் காட்டுக்கு அனுப்பி விடுகிறார். ஞானசவுந்தரி காட்டில் அன்னை மரியாள் உதவியால் இழந்த கைகளைப் பெறுகிறார்.

‘Children are not for burning…’

சின்னஞ்சிறிய அந்தக் கூண்டுக்குள் கிட்டத்தட்ட 14 பேரை ஒரே நேரத்தில் அடைத்து மேலிருந்து ரசாயனங்களைத் தூவ, அந்தக் கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகள் – கிராபிக் வீடியோக்களாகத் தரைப்பள்ளத்துக்குள் ஓட, குனிந்து பார்த்தபோது தத்ரூபமாக நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது. மனதைப் பிசைகிறது, நெஞ்சம் பதறுகிறது. வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்ட ட்ஃபோலியன்ட் ஸ்ப்ரேக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ஏற்படுத்திய பயங்கரமான விளைவுகள், ‘ஆரஞ்சு’ கண்காட்சிகள் என அத்தனையும் பார்க்க சகிக்க முடியாததாக இருக்கிறது. ஆங்கிலம், வியட்நாமிய மற்றும் ஜப்பானிய மொழிகளில் விளக்கங்கள் வேறு. விவரிக்க முடியாத கொடூரக் காட்சிகளைப் பார்க்க ஆரம்பித்து ஒரு மணிநேரம் கடந்திருந்தது.

உங்கள் அகக் குழந்தையைக் கொண்டாடுங்கள்!

நீங்கள் நன்றாக உங்கள் குழந்தைகளைக் கவனித்துப் பாருங்கள். மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருப்பது தவறா அல்லது சரியா என்று அவர்கள் ஒரு துளிகூடக் கவலைப்படுவதில்லை. அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்களே உணர்கிறார்கள். அது போல நம் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் நாமே தட்டிக் கேட்க அனுமதிப்பதும், அவற்றைச் சரி செய்வதும் நம் உள் குழந்தையைப் பராமரிப்பதற்கான வழிகளில் ஒன்று.

டூர் அவ்வளவுதானா?

அருண் தவியாகத் தவித்தபடி இருந்தான். ட்ரெயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் ஸ்டேஷனுக்குப் போய் ட்ரெய்னைப் பிடிக்க வேண்டுமானால் இப்போது கிளம்பினால்தான் முடியும். ஏற்கெனவே இரண்டு கேப் கேன்சல் செய்துவிட்டுக் கிளம்பி விட்டார்கள்.

“அகிலா… டைம் ஆகுது…”

அகிலா திரும்பி முறைத்தாள். அப்பாவுடன் பேசும் போது யாரும் குறுக்கிடக் கூடாது. ‘வரேன் போ’ என்று சமிக்ஞையை ஆறாவது முறையாகச் செய்தாள்.

டவுன்சிண்ட்ரோம்

டவுன்சிண்ட்ரோம்கூட குரோமோசோம்களின் எண்ணிக்கை மாற்றத்தால் ஏற்படக் கூடியதுதான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் டவுன்சிண்ட்ரோம் உடைய நபரின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் நாற்பத்தாறு குரோமோசோம்களில் இருபத்தோராவது குரோமோசோம் ஜோடியில் ஒன்று கூடுதலாக இருக்கும். அதாவது அந்த நபருக்கு இரண்டுக்குப் பதிலாக மூன்று இருபத்தியோராவது க்ரோமோசோம் இருக்கும். இதைத்தான் ‘21 ட்ரைசோமி’ என்று குறிப்பிடுவர். இதனால் அவரின் மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை நாற்பத்தியேழாக உயர்ந்திருக்கும்.