UNLEASH THE UNTOLD

Month: February 2023

பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானதல்ல...

ஓர் ஆணை சமூகம் நிர்பந்திக்கும் இன்னோர் இடம் வாகனங்கள் ஓட்டுதல். ஆணுக்கு இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் கண்டிப்பாக ஓட்டத் தெரிய வேண்டும் என்று ஒரு பொதுபுத்தி நிலவுவதால் கற்றுக்கொள்ள விருப்பமில்லாத ஆண்களும் வாகனம் ஓட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டுதல் ஒரு வாழ்க்கைத் திறன், ஆனாலும் அது ஆண்மையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனம் வேகமாக ஓட்டுவதையும் திறமையாக ஓட்டுவதையும் ஆண்மையோடு தொடர்புபடுத்தி இருப்பதால்தான் சாலையில் வாகனம் ஓட்டி வரும் சகப் பெண் தன்னைத் தாண்டிப் போகிறபோது பல ஆண்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்களைத் துரத்திச் சென்று, அவர்களைவிட வேகமாக முந்திக்கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் அவர்கள் மனதில் ஏற்படுகிறது.

ஆலயப் பிரவேசமும் ஐஸ்வர்யாவும்

“கடவுளுக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. மேலும், என் கோயிலுக்கு இவர்கள் வரக் கூடாது, அவர்கள் வரக் கூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதேபோல, இதைச் சாப்பிடக் கூடாது, இது தீட்டு என்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாம் உருவாக்கின சட்டங்கள்தாம்.

<strong>வேயு புத்ரிகள்</strong>

பெண் நெசவாளர்கள் தங்களது கதைசொல்லலில் கவனமாகவும் துல்லியமாகவும் இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் பைகளை நெசவு செய்யும்போது முழு நாட்களும் வேலை செய்கிறார்கள். மேலும் ஒரு பையை முடிக்க ஒரு மாதம் வரை ஆகலாம். நெசவு தொழில் வேயு மக்களுக்கு நிதி உதவிக்கான ஒரு வழிமுறையாக மாறியுள்ளது.

வாழ்வியலுக்கான அறத்தைக் கற்றுக்கொடுங்கள்!

பள்ளியில் ஆசிரியர் குழந்தைகளோடு உரையாடும்போதோ பாடம் கற்பிக்கும் போதோ இடையிடையே அன்றாட செய்திகளைப் பற்றிய உரையாடல்களோ அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற ஆளுமைகளையோ அறிமுகப்படுத்துங்கள்.

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது?

வாணியம்மா கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, ஹரியான்வி, அசாமிஸ், துளு மற்றும் பெங்காலி போன்ற பல இந்திய மொழிகளில் (19 மொழிகள்) பாடியுள்ளார். மூன்று முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

மாரத்தான் ஓடப் பழகு

“சுயநலமாக இருங்கள். உங்கள் குழந்தைகள், குடும்பத்திற்காகச் சுயநலமாக இருங்கள். எனக்குப் புற்று நோய் பரிசோதனை செய்யும் போது என் மகளுக்கு நான்கு வயது. இப்போது என் மகள் இருபது வயதைத் தாண்டிவிட்டாள். நம் குழந்தைகள், குடும்பம் ஆகியவற்றிற்காகத் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம்.”

<strong>உரையாடல்</strong>

“இது போல் நீ ஒரு வாரம் இருப்பதன் காரணம் என்ன? உனக்குத் தெரியாது மதி. இந்த ப்ராஜெக்டிற்காக எத்தனை பேர் காத்திருந்தார்கள் என்று. நான் ஒவ்வொன்றாக அலசி உன்னையும் தீக்சித்தையும் தேர்வு செய்தேன். உங்கள் இருவரையும் வேண்டாம் என்று கூறியவர்களிடம் உங்களைத் தகுதியானவர்கள் இதற்கு என்று எத்தனை முயன்று நிறுவினேன் தெரியுமா? இது புரியாமல் உனது விடுப்பிற்காக நீ இத்தனை வருந்துகையில் எனக்கு எதுவுமே புரியவில்லை மதி.”

ஹார்மோர்ன் எனும் ரிங் மாஸ்டர்

ஒருவிதக் கிளர்ச்சியும் பயமும் குழப்பமுமாக இருக்கும் அந்தப் பெண் குழந்தைக்குத் தேவை எல்லாம், இதெல்லாம் இந்த வயதில் வரும் உணர்வுதான், இங்கே வா என அணைத்துகொண்டு தேற்றி அதில் இருந்து அவளை மென்மையாக மீட்டு, அவள் குழப்பங்களை, பயங்களை சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அன்பு மட்டுமே.

ஏன், எதற்குச் சிரித்தார்கள்?

இப்போது இந்த வேலைதான் அவனது ஜீவாதாரம் என்று அறிந்து கொண்ட பின்பு அவளையும் அவளது உழைப்பையும் மலிவாகவே எடை போடத் தொடங்கி இருந்தார்கள். எந்தப் புள்ளியில் அக்கறை அவமரியாதையாக மாறுகிறது, அதற்குத் தன்னுடைய எந்த நடவடிக்கை காரணமாக இருந்தது என்ற மன உளைச்சலில் தவிக்கத் தொடங்கி இருந்தான் சிபி.

அவனுடைய செய்கைக்கு அவனே பொறுப்பு!

ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு காரணம் தன் வீட்டார், தான் தவறு செய்யும்போது தனக்கு உறுதுணையாக இருப்பார்கள், தன்னைக் காப்பாற்றுவார்கள் என்னும் எண்ணமே. மாறாக நாம் அவனிடம் நீ செய்யும் தவறுக்கு நீயே பொறுப்பு என்பதை சிறுவயதில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். எப்படி இன்னொரு வீட்டு ஆண் தவறு செய்யும்போது அவனைச் சட்ட ரீதியாகத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருகிறதோ அதேபோல நம் வீட்டு ஆண்மகனும் அவ்வாறு தவறு செய்யும்போது சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் நம் பெற்றோர்களுக்கு வரவேண்டும்.