UNLEASH THE UNTOLD

Tag: women

முர்சி பெண்களுக்கு வாய் ரொம்பவே நீளம்!

முர்சி பழங்குடியினப் பெண்கள், கீழ் உதட்டில் வைக்கப்படும் களிமண் தட்டுகளுக்குப் பிரபலமானவர்கள். ஒரு பெண் 14 வயதாக இருக்கும்போது, அவளுடைய நான்கு கீழ் பற்கள் அகற்றப்படுகின்றன. மேலும் அவள் 15 வயதை அடையும் போது, அவள் கீழ் உதடு கீறப்படுகிறது. உதட்டில் வைக்கப்படும் தட்டு என்பது ஒரு பெண் பருவத்திற்குள் நுழைவதைக் குறிக்கிறது.

கட்டாயம் மிதித்துப் பழக வேண்டும்!

“நல்லா கேளும்மா. இவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சைக்கிள்ல சவாரி செய்யறாங்க. இவளுக்குத்தான் சைக்கிளே ஓட்டத் தெரியாதே அதான் வீட்லயே இருக்கா! பயந்தாங்கொள்ளி. இவளோட நாலு வயசு சின்னப் பையன் நானே எவ்ளோ சுலபமா ரெண்டு கைய விட்டுக்கிட்டு ஓட்டுறேன். இவ என்னடான்னா சைக்கிளையே தொடமாட்டிங்கிறா” என்று தன் அக்கா வாணியைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

பிஷ்னாய் சுற்றுச்சூழல் போராளிகள்!

அமிர்தா தேவி மரத்தைக் காப்பாற்ற, அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். கட்டுக்கடங்காத மனிதர்கள் மரத்தை வெட்டுவதற்காக அவரது உடலைத் துண்டித்தனர். அவரது மூன்று மகள்கள், தங்கள் தாயின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டு முற்றிலும் அதிர்ச்சியடைந்தாலும், தைரியமாக அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து, மரங்களைக் கட்டிப்பிடித்து அதே முடிவைச் சந்தித்தனர்.

கல்வியே சமநிலையை உருவாக்கும்!

அறிவாற்றலால் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒருவரை வெல்லும் சக்தி வேறெதற்கும் இல்லை. ஆக, ஒரு பெண்ணிற்குக் கிடைக்கும் கல்வி என்பது அவளது எதிர்காலத்தை கட்டமைப்பதோடு, ஆரோக்கியமான சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

விவாகரத்து நாள் வாழ்த்துகள்!

சமீபத்தில் (2022) இந்தியக் குடும்பங்களில் ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (NFHS)’ நடத்திய பெரிய அளவிலான பல சுற்றுக் கணக்கெடுப்பில் ‘திருமணமான 18 – 49 வயதுடைய 29.3% இந்தியப் பெண்கள் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 18 – 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 3.1% பேர் அவர்களின் கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும்கூடப் பெரும்பான்மையான பெண்கள் தங்கள் திருமண உறவில் இருந்து விவாகரத்து பெறுவது குறித்துச் சிந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

பிலிஸ் வீட்லி

இவரது கவிதைகளில் இவர் வாழ்க்கையின் பல தாக்கங்கள் பிரதிபலித்தன. மேலும் ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தின் பெருமையும் இவர் படித்த இலக்கியங்களின் மேற்கோள்களும் பைபிள் குறிப்புகளும் கவிதைகளில் தெரிந்தன. இவர் கவிதைகளில் இருந்த தனித்துவமும் இலக்கியச் செழுமையும், வாசகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்ற அதே வேளையில் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இத்தனை நேர்த்தியாக பல கவிதைகள் படைப்பதை ஏற்றுக்கொள்ளாத சில அமெரிக்கர்களால் இவரது கவிதைகள் ஒரு குப்பை எனவும், வேறு சில சிறந்த கவிஞர்களிடமிருந்து நகல் எடுக்கப்பட்டது எனவும் விமர்சிக்கப்பட்டது. அத்தனை விமர்சனங்களுக்கும் இடையில் வெகுஜன மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது ஃபிலிஸ்ஸின் கவிதைகள்.

வாழ்க்கை வசப்பட…

‘பெண்ணே பெண்ணுக்கு எதிரி, ஆண்களைக் குறை சொல்லாதீங்க, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் அடக்கினார்கள் என்று பொங்குகிறீர்களே முதலில் மாமியார் மருமக பஞ்சாயத்தை முடிங்க பார்ப்போம்’ என வீரவசனம் பேசுபவர்கள் அதிகம். நிஜத்தில் மாமியார் மருமகள் பிரச்னை ஏன் இவ்வளவு பெரிதாக ஊதி பெரிதாக்கப்படுகிறது? மாமனார், மருமகன் பிரச்னை வரவே வராதா? இங்குதான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு பெண்களைத் தங்கள் வசதிக்கு சாதகமாக, பெண்களைக் கொண்டே பெண்ணை ஒடுக்கும் வெளியே தெரியாத மிக தந்திரமான வலை ஒன்றைப் பின்னி, பெண்களையே பொறிகளாக வைத்துள்ளது.

உன் பணம்... பணம்... என் பணம்... பணம்...

“இதிலென்ன டவுட். நான்தான் வெச்சிருக்கேன்.அக்கவுண்ட் பாஸ்வேர்ட் டீடெய்ல்ஸ் எல்லாமும் என் கிட்டதான். அவனுக்குப் பணத்தை எல்லாம் மேனேஜ் பண்ணத் தெரியாது. சமத்தா வேலைக்குப் போயிட்டு வருவான், வீட்டைப் பார்த்துப்பான். அதுக்கே அவனுக்குக் கூறு பத்தாதுப்பா. அதனால மணி மேனேஜ்மெண்ட் எல்லாம் நான்தான்.”

ஆண்கள் செவ்வாய், பெண்கள் வெள்ளி என்று பொதுமைப்படுத்துதல் சரியா?

சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கும் பொதுமைப்படுத்தல்கள் பெண்களுக்கு எதிரான மனப்போக்கை விஷமாக மனத்தில் சேர்க்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெரிதாக வெளிப்படுகின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்தில் அந்தப் பெண் வல்லுறவுக்கு ஆளாகியதன் காரணம் விதிவிலக்கான சில ஆண் வன்முறையாளர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். உடன் சென்ற நண்பர் சிறு கீறலும் இல்லாமல் பிழைத்ததும், பெண் இரும்புப் பைப் உடலில் செலுத்தப்பட்டு உள் உறுப்புகள் சிதைந்து மரணம் எய்தியதும் எப்படி? கேவலம் ஒரு பெண் ஆணை எதிர்க்கலாமா என்ற எண்ணம்தான் அந்தச் சம்பவத்தின் அடிப்படை. பட்டர்ஃபிளை எஃபெக்டைப் போல இந்த ஸ்டீரியோடைப் எண்ணங்கள் எங்கோ, யார் வாழ்விலோ பெரிய பாதிப்பை உருவாக்குகின்றன.

புத்தகம் என்ன செய்யும்?

பெண்ணியம் பேசுவதற்குச் சுய சிந்தனை அவசியம். நம் உரிமைக்கான குரலுக்கு நம் அறிவே துணை. பெண்கள் உரிமைக்கு கேள்விகளைக் கேட்பதும் அதற்கான தேடல்களின் முழு வெற்றி கிடைக்கும் வரை போராடுவதும் அவசியம். அதற்குப் புத்தகங்கள் நமக்கு உதவி செய்யும். பல விஷயங்களைப் படித்து, தெளியும்போதுதான் தெளிவான முடிவை எடுக்க முடியும்.