UNLEASH THE UNTOLD

Tag: women isssues

10. பருவமெய்தல்

பேதை (1-8 வயது), பெதும்பை (9-10 வயது), மங்கை (11-14 வயது), மடந்தை (15-18 வயது),  அரிவை (19-24 வயது), தெரிவை (25-29 வயது), பேரிளம் பெண் (30 வயதுக்கு மேல்) எனத் தமிழ்…

காதலின் வெற்றி எது?

“நீ கேக்குறதெல்லாம் சரிதான், ஆனா ஒண்ணு புரிஞ்சிக்க, எங்க காலத்திலேயும் நாங்க வேலைக்குப் போனோம். ஆனா  வேலை நேரம் உங்களைப் போல இல்லை. இன்னொரு விஷயம் அப்போ எங்க வருமானம் வீட்டுக்குத் தேவை. அதனால புருஷன்களும் ஏதோ ஒரு சமையல் பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க, அதுக்கு மேல வகை வகையா செய்யவும் எங்களுக்கு வசதி இல்லை. புருஷன்களும் எங்களுக்குக் கொஞ்சம் உதவின்னு செஞ்சாங்க. இப்போ எல்லாருக்கும் சம்பளம் நல்லா வர்றதால குடும்பத்துக்கு உங்க வருமானம் எக்ஸ்ட்ரா தான். அதனால் உன்னைப் புரிஞ்சிக்கவோ உனக்கு உதவி செய்யவோ அவசியம் பிரபுவுக்கு இல்லை. இப்போ நிறைய பசங்க பொண்டாட்டி கஷ்டம் புரிஞ்சிக்கிறாங்க. பொறுப்பைப் பகிர்ந்துக்குறாங்க. ஆனா இதெல்லாம் வளர்ப்புல வர விஷயம். பிரபு வீட்டு ஆளுங்க கொஞ்சம் பழைய டைப், அதனால் இதைப் புரிஞ்சிக்கிற பக்குவம் அவருக்கு இல்லை. ஆனா சந்தேகமே இல்லாத உன் மேல ரொம்ப அன்பு இருக்கு. நீ அதைப் பிடிச்சுக்கிட்டு பிரபுவுக்குப் புரிய வை.“

ஆசிஃபா முதல் மஹுவா மொய்த்ரா வரை 

சாதி, மதம், கடவுள் என்கிற அனைத்தும் பெண்களை அடிமையாக்கக் கண்ட உத்திகளே. ஆனால், பாஜக சாதி, மதவாதம், சனாதனம் ஆகியவையே பிரதானமாகக் கொண்டு அரசியல் செய்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு கட்சி நாட்டை ஆண்டால் பெண்கள் போராடிப் பெற்றுள்ள இத்தனை ஆண்டுகாலச் சுதந்திரமும் சமத்துவமும் இனி வரும் காலங்களில் வெறும் கனவாகவே சென்றுவிடும் சாத்தியங்கள்தாம் அதிகமாக உள்ளன. பெண்களின் ஓட்டு அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே பெண்களாகிய நாம் நம் முன்னேற்றத்தை மனதில் கொண்டு சிந்தித்து வாக்களிப்போமாக!

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியாரின் ’பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பது புரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம் ’பெண் ஏன் அடிமையானாள்?’ இன்று வரை அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம், அந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தரப்பினர் எப்படி அன்று எதிர்தார்களோ அப்படியே இன்றும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சமையலறை எனும் சாபம்

இப்படி நேரம் காலம் பார்க்காமல் வருடத்தின் அத்தனை நாட்களும் ஓயாது உழைக்கிறாளே, உங்கள் வீட்டு மகராசி, அவளுக்கு ஒரு நாளாவது நீங்கள் லீவு கொடுத்ததுண்டா தோழர்களே? என்றாவது ஒரு நாள், நீங்கள் சாப்பிடும்போது, “சேர்ந்து சாப்பிடலாம் வா” என்று உங்கள் இணையரையோ தாயையோ என்றாவது அழைத்ததுண்டா? “தினமும் நீதானே பரிமாறுகிறாய், இன்று நீ உட்காரு. நான் உனக்கு தோசை சுடச்சுட சுட்டுத் தருகிறேன்” என்று கூறியதுண்டா?

விடுமுறையின் போதுதான், சுடச்சுட பஜ்ஜி போண்டா சுட்டுக் கொடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இலக்கணம் மாறுதே... 11

“எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கும், இந்த ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போது, உனக்கு வழிகாட்ட முடியுமே தவிர உனக்காக ஓடுவது இயலாத காரியம். நீதான் ஓட வேண்டும். எனவே நீதான் முயற்சி செய்து கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் இந்தப் புத்தகங்களை வாசி. மேலும், ஜாதி எந்த அளவிற்கு மனிதகுல மாண்பைச் சீரழிக்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள், மத ஒற்றுமை, அரசியல் குறித்த, நமது உரிமை குறித்த புரிதல்களை ஏற்படுத்தி தருபவர்கள் என இணையத்தில் விழிப்புணர்வையும், தர்க்க சிந்தனைகளையும் நிறைய பேர் ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே தெரிந்து கொள்வது எளிதுதான். ஹெர் ஸ்டோரிஸ் இணைய தளத்தின் கட்டுரைகளையும் வாசிக்க தவறாதே.”

எப்படி இருந்தாலும் குத்தமா?

பெண்களின் முன்னேற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்ட சமூகம், பெண்கள் வேலைக்குச் சென்றால் மட்டும் சும்மாவா விடப் போகிறார்கள்? கணவன், குழந்தையைவிட அவளுக்குக் காசுதான் முக்கியம் என்று அடுத்த அம்பைப் பாய்ச்ச தயாராகவல்லவா இருக்கிறார்கள்.

அலுவல் பணிச் சுமையின் காரணமாக, மாதத்தில் என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடும் விஷயம் மட்டும் வெளியே தெரிந்துவிட்டால் போதும், ஒரு நாள்கூட வீட்டில் அந்தப் பெண் சமைக்கிற பழக்கமே கிடையாது என்று அடுத்த கதை கட்டத் தொடங்கிவிடுவாார்கள்.