UNLEASH THE UNTOLD

Tag: family

தன் உரிமைகளுக்காகப் போராடும் வருண்!

‘சனிக்கிழமை நிலா நண்பர்களுடன் வெளியில் சென்றால் மதிய உணவுக்கு வந்துவிட வேண்டும். ஊர் சுற்றப் போனாலும் தான் போன் செய்தால் எடுத்துப் பேச வேண்டும், பல ஆண்டுகளாக அவன் போக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு இந்த ஆண்டாவது அவள் தன்னை அழைத்துப் போக வேண்டும். நிலாவின் பெற்றோர் இருக்கும்போது வேட்டிதான் கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. இஷ்டப்படி ஷார்ட்ஸ் அணிய அனுமதிக்க வேண்டும்’ என்பது போன்ற கடுமையான விதிகளை நிலாவிடம் தலையணை மந்திரம் போட்டுச் சம்மதிக்க வைப்பதுதான் வருணின் போர்த் தந்திரம்.

மனைவியை இழந்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை

“மனைவி இறந்தப்புறமும் அழகா இருந்தா மத்த பொண்ணுங்க தொல்லை கொடுப்பாங்கல்ல? அதுக்காக அப்படி ஒரு பழக்கம் நம்ம முன்னோர்கள் வெச்சிருந்தாங்க. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இது கலிகாலம் நிறைய கெட்டுடுச்சு. நிறைய பழக்கமும் மாறிடுச்சு. பொண்டாட்டி செத்தாகூட மீசையும் தாடியும் கலர் ட்ரெஸ்ஸுமா ஹாட்டா சுத்துறாங்க. பழகிக்க வேண்டியதுதான். சரி, நீ போய்ப் படி.”

அவனது அந்தரங்கம் – அண்ணாமலையின் ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

வாழ்க்கையின் யதார்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய வயதில் இருக்கிறீர்கள். உங்கள் நண்பருக்குத் திருமணமாகி ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது. அவரது மகிழ்ச்சியைத் தள்ளி நின்று வாழ்த்துங்கள். ஒரு வீட்டுக்கு வாழப் போய்விட்ட அவருக்கு இனி மனைவியையும் மாமனார், மாமியாரையும் வீட்டையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்புகள்தாம் அதிகம் இருக்கும். அதை நீங்கள்தான் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை எனும் ஆதங்கத்தில்தான் இப்படி நண்பரைப் போட்டுப் பிடுங்குகிறீர்கள்.

அடிக்கிற கை அணைக்குமா?

உலகின் எண்பது நாடுகளில் உள்ள இருபத்தைந்து சதவீத மக்கள் ஆண் பெண்ணை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஐநா சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பாதிப்பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்றும், இது இயல்பான ஒன்று என்கிற மனநிலையிலும்தான் இன்னும் இருக்கின்றனர். முதல் முறை ஆண் கை ஓங்கும் போதே பெண் தனது ஆட்சேபத்தை வன்மையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இதுவே வாடிக்கையாகிவிடும். கல்வி, வேலை, பொருளாதாரம் என்று எதுவும் ஆணுக்கு பெண்ணை அடிப்பது தவறென்று போதிக்காதது பெரிய ஆச்சரியம்தான். கணவன் என்றாலே அடிக்கும் உரிமையும் தன்னாலே வந்துவிடுவதாகப் பெரும்பாலான ஆண்களும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலேயே ஊறிக் கிடந்த பெண்களும் எண்ணிக்கொள்வது தவறென்று உணர்த்த வேண்டும்.

டூர் அவ்வளவுதானா?

அருண் தவியாகத் தவித்தபடி இருந்தான். ட்ரெயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் ஸ்டேஷனுக்குப் போய் ட்ரெய்னைப் பிடிக்க வேண்டுமானால் இப்போது கிளம்பினால்தான் முடியும். ஏற்கெனவே இரண்டு கேப் கேன்சல் செய்துவிட்டுக் கிளம்பி விட்டார்கள்.

“அகிலா… டைம் ஆகுது…”

அகிலா திரும்பி முறைத்தாள். அப்பாவுடன் பேசும் போது யாரும் குறுக்கிடக் கூடாது. ‘வரேன் போ’ என்று சமிக்ஞையை ஆறாவது முறையாகச் செய்தாள்.

இந்தப் பெண்களே இப்படித்தான்...

முதலில் உங்கள் சகோதரர் சிவாவுடனான உறவை முறித்துக் கொள்ளுங்கள். அவர் பேச்சில் உண்மை இருக்கிறதென்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் போய் காயத்ரியிடம் கேட்டால் என்ன நடக்கும்? வீண் சலசலப்பு உண்டாகும். கோபப்பட்டு அவர் திருமணத்தை நிறுத்தி விட்டால் உங்கள் வாழ்க்கையே வீணாகிவிடும். உங்கள் பெற்றோர் செய்த திருமணச் செலவெல்லாம் பாழாகிவிடும். முக்கியமாக உங்கள் குடும்ப கௌரவமே குலைந்துவிடும்.

திருமணத்தை மீறிய உறவு தீர்வாகுமா? - 2

பொதுவாக சரியான பாலியல் துணை அமையாதவர்கள் இப்படித்தான் ஒரு குழப்ப நிலையிலேயே வாழ்க்கையை ஓட்டுவார்கள். தாங்களும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள், அடுத்தவர்கள் குதூகலமாக வாழ்ந்தாலும் பொறுக்காது. மற்றவர்களையும் சந்தோஷமாக வாழ விடமாட்டார்கள். 

முப்பது வயதுக்குள்ளே குழந்தையா?

சரி, ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையா? ஆண்களின் விந்தணுக்கள் கருமுட்டைகளைப் போல் அல்லாமல் புதுப்பித்துக்கொள்ளும் திறன் கொண்டவை. ஓர் ஆணின் உடலில் தினமும் பல லட்சக்கணக்கான விந்தணுக்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல ஒரு விந்தணுவின் சுழற்சி முடிவதற்கு இரண்டரை மாதங்கள் வரை ஆகும். இதனால்தான் கருமுட்டைகளில் ஏற்படும் பிரச்னைகளைவிட விந்தணுக்களில் ஏற்படும் பிரச்னைகளைக் குணப்படுத்துவது சுலபம். சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் இவை அனைத்தும் பெரும்பான்மையான விந்தணு பிரச்னைகளைக் குணப்படுத்த போதுமானவை.

"பொண்ணுங்க எப்படி வேணா இருப்பாங்க; நாமதான் மனசைக் கட்டுப்படுத்திக்கணும்.”

“அவ உன்னை வேற ஏதாச்சும் பண்ணி இருந்தா? அவளை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அழகான பொண்டாட்டி, குழந்தைங்கன்னு ஒரு நல்ல வாழ்க்கை உனக்கு இருக்கு. ஏன் இப்படிப் புத்தி போகுதுன்னு உன்னைத்தான் கேட்பாங்க.”

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையாரின் ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

நானும் என் மனைவியும் அழகுக் கறுப்பு. இவன் மட்டும் எப்படியோ இப்படி வெள்ளையாகப் பிறந்து தொலைத்துவிட்டான். சிறு வயது முதலே பார்க்காத வைத்தியம் இல்லை. மிளகு, கடுகு, கருஞ்சீரகம் அரைத்துப் பூசிக் குளிக்க வைத்திருக்கிறேன். நண்பகல் வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் உடல் விரைவில் கருக்கும் என்று யாரோ சொன்னதை நம்பி அதையும் செய்து வருகிறான். இருந்தும் மேனி பூஞ்சைக்காளான் பூத்தது போல் வெள்ளை நிறமாகவே உள்ளது.