UNLEASH THE UNTOLD

மாதவிடாய் எனும் மண்டையிடி நாள்கள்

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது, பூக்களைப் பறிக்கக் கூடாது, பூஜைப் பொருள்களைத் தொடக் கூடாது, குரான் ஓதக் கூடாது, நோன்பு வைக்கக் கூடாது, தொழுகக் கூடாது, வெளிப்படையாக (குறிப்பாக ஆண்கள்) பார்க்கும் வகையில் நாப்கின்களைக் கையாளக் கூடாது. உபயோகித்த துணியை ரகசியமாக அப்புறபடுத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வடிவில் தீண்டாமை நம்மை விட்டுவைப்பதாக இல்லை. இஸ்லாத்தில் ஒதுக்கி வைக்கும் வழக்கம் இல்லை என்றாலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்றே இறையியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பெண் குழந்தைகளின் உண்மை நிலை என்ன ?

வகுப்பறைகளிலும் இந்தச் சமூகத்திலும் பெண் குழந்தைகள் நடத்தப்படும் பாங்கு குறித்து நாம் வெளிப்படையாகப் பேசுவது ஏன் தவிர்க்கப்படுகிறது? இது ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுவதும் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளின் நீட்சிதான் பெண் குழந்தைகளது அடுத்தடுத்த நகர்வுகள், திருமண உறவில் வன்முறை, குடும்ப வன்முறை என அனைத்திற்கும் காரணமாக அமைகிறது.

வயோதிகத் தாயாக ஒரு வரலாற்றுச் சின்னம்!

ஒவ்வோர் ஆட்சியாளர் கீழும் ஓயாமல் உழைத்துத் தேய்ந்து, தன்னை உருமாற்றிக்கொண்டு, சிதிலமடைந்து, காலத்தின் கோலங்களைத் தன் உடலில் தாங்கித் தனித்து நிற்கிறது கோட்டை. கோட்டையைச் சுற்றி வரும்போது முருகைக்கற்கள், சுண்ணாம்புக்கற்கள், அகழிகள், மணிக்கோபுரம், காவலர் அரண், சுரங்கம், நீர்த்தேக்கம் எனக் காலச்சக்கரம் நம்மை உள்வாங்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்வதைத் தடுக்க முடியவில்லை.

கடமையைச் செய்யாமல் ஒரு நாள்...

தன் நேசிப்பின் முழு முதல் படியை, ‘நமக்காக நேரம் ஒதுக்குதல்’ என்பதில் தொடங்குங்கள். அது அரை மணியோ ஒரு மணியோ உங்களுக்காக ஒதுக்குங்கள். அதில் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

குழந்தைகளிடம் பொறுப்புகளை வழங்கலாமா?

நிகழ்ச்சிக்குப் பொறுப்பு ஆசிரியர்களான சுதாவும் கலியமூர்த்தியும் குழந்தைகளை ஒரு வகுப்பில் நிகழ்ச்சி சார்ந்து சில விஷயங்கள் கலந்து பேச ஒருங்கே அமர வைத்திருந்தனர். ஆசிரியர் கூட்டத்தில் பேசிய விஷயங்களைக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

விடுதலை... விடுதலை... விடுதலை...

வெண்முடி சூடிய வேந்தனாம் இமையனும்
விந்திய மலையனும் வாழ்த்துங்கள்!
தண்ணிய கீழ்மேல் மலைகளும் பழனி
நீலமா மலையும் வாழ்த்துங்கள்!

வானிடமிருந்து நீரினை வழங்கும்
கங்கையும் யமுனையும் வாழ்த்துங்கள்!
தேனுறு நீரினைத் தென்னவர்க் களிக்கும்
பொன்னியும் பொருனையும் வாழ்த்துங்கள்!

பெண்விடுதலை - குடும்பங்களில் ஆண்கள் பங்கு

இங்கு உண்மையாக, நேர்மையாக, திருமண வாழ்வில் ஈடுபாட்டுடன் வாழ்கிற ஆண்கள், பாதுகாப்பு உணர்வுடன், பெண் விடுதலையினால் தங்களுக்கும் நன்மையே என உணர்ந்து, தன்னையும் முன்னேற்றிக்கொண்டு, பெண்கள் முன்னேற்றத்திலும் உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

சுயமரியாதையுடன் கொண்டாடுவோம்!

வேலைக்குச் சென்று சாதிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்து சாதனையாளர்களை உருவாக்கினாலும் சரி, இன்று பெண்களுக்குச் சுயமரியாதை இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஓங்கும் கைகளைத் தடுக்கும் சக்தி பெண்களுக்கு வேண்டும். தன்னுடைய தேவை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லும் தின்மை வேண்டும்.

அருணாவும் சுதந்திரப் போராட்டமும்

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அருணாவின் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. 1942ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன், முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்து, ஆங்கிலேய அரசு சிறையிலடைத்தது. 33 வயது அருணா, மும்பையில் உள்ள கோவாலியா மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்றிப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

பெண்ணுக்கான சுதந்திரம் எப்போது?

பெண்களுக்கான இடம் இந்தச் சுதந்திர இந்தியாவில் எங்கு இருக்கிறது என்று பார்த்தால், நாம் இன்னும் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத இடத்தில் உள்ளோம். இன்று சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வேண்டுமானால் பெண்கள் சுதந்திரம் பெற்று வளர்ச்சி அடைந்து விட்டதைப் போல ஒரு பாவனை தோன்றும். ஆனால், நமது மக்கள் தொகையில் ஆண்-பெண் பிறப்பு விகிதம் குறித்துப் பார்க்கும் போது பெண்களுடைய வளர்ச்சி எங்கு உள்ளது?