UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

பெண் கல்வி பொருளாதார இழப்பா?

“இந்தா பாருங்க, என்னை எடுத்துக்கோங்க… நான் பொண்ணுன்னு என்னை 12 ஆவதோட நிறுத்திருந்தா நீங்க சொல்ற மாதிரி நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கிருப்பேனா? இப்படி வைத்தியம் பார்க்கத்தான் என்னால முடிஞ்சிருக்குமா? உங்க பொண்ணு நல்லா படிக்கும்ன்னு சொல்றீங்க. நல்லா படிக்க வைங்க. உங்களால முடிலைன்னா அரசாங்கம் உதவித்தொகை குடுக்குது. சமூகத்துல பல நல்ல உள்ளங்கள் இருக்கு. அவங்க உதவியை நாம எடுத்துக்கலாம்.”

தனி மனித எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம்!

வளர் இளம் பருவத்தினரைக் கையாள்வது என்பது இருமுனை கத்தியைக் கையாள்வதைப் போல மிக முக்கியமானது. ஏனெனில் இப்பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் பல்வேறு வடிவங்களையும் தன்மையையும் உடையது. ஆனால், இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்திறன் அவசியம்.

தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் சாதியம்

இந்தச் சாதிய இறுக்கமே ஈழத்தமிழர்களை, முஸ்லிம்கள் – மலையகத் தமிழர் – ஈழத்தமிழர் எனப் பிரித்தது. பின்னர் யாழ் – வன்னி – மட்டக்களப்பு என்றும் பிரித்தது. தற்பொழுது இங்குள்ள எந்தக் கட்சிகளுக்கும் சாதி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. சமூக அறத்திற்காகப் போராட எந்த அமைப்புகளும் இல்லை. இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட சக்திகள், தமிழர்கள், சிங்களவர்களைவிடத் தாழ்ந்த சாதி என்ற கருத்தையே விதைத்தன.

பெண்களைப் படிக்க வைப்பது, பொருளாதார இழப்பா?

“என்ன சொல்றது? நம்ம குடும்பத்துலதான் பொண்ணுகளை ப்ளஸ்டூக்கு மேல படிக்க வைச்சதில்லையே… பாட்டி படிக்கல. நான் ரெண்டாவதுதான் படிச்சிருக்கேன். நீ இப்போ ப்ளஸ் டூ படிக்கற. அதுவே பெருசு.”

நீங்களே மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யலாம்!

மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டிய எல்லை என்பது அக்குளின் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி மார்பின் கீழ்பகுதி, நெஞ்செலும்பின் நடுப்பகுதி, காறை எலும்பின் மேல்பகுதி வரை சென்று மீண்டும் அக்குள் பகுதிவரை சென்று முடியும்.

ஹிஜாப் அணிவது எனது உரிமை

“மதரீதியாக என்று சொல்வதெல்லாம் தப்பு, நான் ஹிஜாப் போட்டு வெளியில் நடக்குறதுதான் எனக்கான உரிமை. யூனிபார்ம் போடுறதுக்கு உரிமை இருக்கு. அதே மாதிரி ஹிஜாப் போடவும் உரிமை வேணும். போலீஸ், நர்ஸ் எல்லாம் அவங்களுக்கான யூனிஃபார்ம் போடறாங்க. ஆனா, ஹிஜாப் டிரஸ் முஸ்லிம்தான் போட முடியும். அதைப் போட விடணும். ஏற்கெனவே குஷ்பூ சொல்லி இருக்காங்க, அவங்க நடிகர், அவங்களும் முஸ்லிம்தான். ஹிஜாப் அணியறது அணியாதது அவங்க அவங்க விருப்பம்னு. எனக்கு ஹிஜாப் போடுவதுதான் பிடிக்கும். அது என்னுடைய படிப்புக்கு எந்த விதத்திலும் தடையில்லை” என்றார்.

கல்வியா… செல்வமா… உயிரா...?

இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும் சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும் ஆங்கிலம் வணிகத் துறையிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வித்திட்டங்கள் தற்போதுவரை பின்பற்றப்படுவதால், பிரிட்டிஷ் ஆங்கிலம் இலங்கைத் தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் ஆங்கில உச்சரிப்பு மலையாளிகள் போலவே இருக்கிறது.

ஒப்பிடலாமா?

நாமெல்லாம் பொருளாதாரத்துல யாரையும் சார்ந்திருக்காம இருக்கோம்ங்கிறதும் நமக்கான விசயங்களை நாம் செஞ்சுக்கணும்ங்கிற எண்ணம் இருக்கறதும் நம்மிடம் இருக்கும் நேர்மறை விசயங்கள். இது போல பெண்கள் தன் விருப்பங்கள் சார்ந்த வெளியை உருவாக்கிக்கணும். பல பெண்களுக்கு நம்மைப் போல இருக்கணும்னு ஆசை இருக்கு. இதெல்லாம் இந்தச் சமூகத்தில் இயல்பாக்கப்படணும்.

வாடகைத் தாய்- அறிவியலும் சட்டமும் சொல்வது என்ன?

கரு வளர இடம் கொடுக்கமுடியாத கர்ப்பப்பை உள்ள பெண்கள், நாற்பது வாரங்களுக்கு இன்னொருவரின் கர்ப்பப்பையை வாடகைக்கு(!) எடுப்பதுதான் வாடகைத்தாய்.

ருசிக்கும் தேயிலையின் கசக்கும் உண்மைகள்

மலைப்பகுதியை அடைந்தும் துயரம் தீரவில்லை. அட்டைக்கடி, கொசுக்கடி, தேள்கடி எனத் தொடர்ந்தது. காட்டு விலங்குகள் உயிரைப் பறித்தன. காலராவும் மலேரியாவும் அம்மையும் தாக்கின. வந்த தொழிலாளர்களில் பாதிப்பேர் மடிய, மீதிப் பேரே தேறினர். அதனால் மீண்டும் மீண்டும் தேவைக்கு அதிகமாகவே ஆட்களைச் சேகரித்தனர். பிழைப்பிற்காகக் கடல்கடந்து வந்த தமிழர்கள் பாறைகள் சூழ்ந்த அந்தக் கடினமான பகுதியைக் கனமான கருவிகள் கொண்டு உடைத்தனர். உயிரைப் பறிக்கும் அசுர உழைப்பினால் அந்த மலைப்பகுதியை விளைச்சலுக்கு ஏற்றதாக மாற்றினர். தங்களை அழைத்துவந்த ஆங்கில முதலாளிகளுக்கு விசுவாசமாக 150 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர்.