UNLEASH THE UNTOLD

Top Featured

லஞ்ச் டைம்

“ஹய்யய்யோ இந்த வெயில்லயா? இன்னிக்குச் சும்மா ட்ரை பண்ணேன். நான் ஒரு மாசமாச்சும் வெளில நல்ல சாப்பாடு சாப்டலாம்னு பார்த்தா, ராம் வத்தக்குழம்பு, பருப்புப் பொடி, மாவுன்னு ஒரு பெரிய லிஸ்டே ரெடி பண்ணி ஃப்ரிஜ்ல வெச்சிட்டுப் போயிருக்கான். அதைத்தான் சாப்டணும்னு. எங்க இருந்தாலும் டார்ச்சர் பண்றாங்கப்பா” என்று தோளைக் குலுக்கினாள் ஜெனி.

வாங்க, சுய மதிப்பீடு செய்வோம்!

தன் மீது மதிப்பும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவர் உலகத்தை அநாயாசமாக கவர்கிறார். அவரிடம் அறிவு, அழகு, கல்வி, செல்வம், ஆற்றல் எல்லாம் நிறைந்திருக்க வேண்டுமென எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனாலும் நமக்கு அவரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும். ஏன்?

விவாகரத்து நாள் வாழ்த்துகள்!

சமீபத்தில் (2022) இந்தியக் குடும்பங்களில் ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (NFHS)’ நடத்திய பெரிய அளவிலான பல சுற்றுக் கணக்கெடுப்பில் ‘திருமணமான 18 – 49 வயதுடைய 29.3% இந்தியப் பெண்கள் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 18 – 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 3.1% பேர் அவர்களின் கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும்கூடப் பெரும்பான்மையான பெண்கள் தங்கள் திருமண உறவில் இருந்து விவாகரத்து பெறுவது குறித்துச் சிந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

மலக்குழி மரணங்கள்...

கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 19 ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடரின் போது மலக்குழி சுத்தம் செய்பவர்களுக்கு நிகழும் மரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி வைக்கப்பட்ட போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், ‘கடந்த  5 ஆண்டுகளில்  இந்தியா முழுவதும் 347 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51, தமிழ்நாட்டில் 48, டெல்லியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 40 சதவீத மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்கிற புள்ளிவிவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.

நெய்தல் பெண்களின் வாழ்க்கை

தமிழ்நாட்டில் பல மீன்பிடித் துறைமுகங்களில் போதுமான கழிப்பறை வசதி இல்லை என்று பெண்கள் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். “அதிகாலையில் இருந்து இங்குதான் இருக்கிறோம், எப்படிச் சமாளிப்பது?” என்று நாகப்பட்டினத்தில் ஒரு பெண் கேட்டது இன்னமும் நினைவிருக்கிறது. பல பொதுப் போக்குவரத்துகளில் மீன்கூடைகளோடு வரும் பெண்களை நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே பெண்கள் தங்களுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களைக் கைகாட்டி,”அவங்கள மாதிரி டூ வீலர்ல நம்மால போக முடியாது, அப்போ என்னதான் செய்யுறது?” என்று என்னிடம் ஒரு மீன் விற்பனை செய்யும் பெண் கேட்டார். இந்தியாவில் பல துறைமுகங்களில் இதே நிலைமைதான் இருக்கிறது.

வியூகம்

“உங்க விருப்பம் அதுதான்னா, அப்படியே நடக்கட்டும். நான் தீர்மானிச்சிட்டேன். கூடிய சீக்கிரம் நாங்க அங்கே குடிபோறோம். நீங்க இங்கதான்தான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா, இருந்துக்கோங்க, தனியா சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு. எனக்கு அதைப் பத்தி கவலையில்லை’’ என அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவள் எழுந்து போக, உறைந்து நின்றான்.

விவாகரத்தும் வியாக்கியானங்களும்

இன்றைய தலைமுறை ஆண்கள் நான் மனைவியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்கிறேன், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று சிலவற்றைப் பகிர்ந்தாலும், பல நூற்றாண்டுகளாக ஆணுக்குள் ஆழப் பதிந்துவிட்டு இருக்கும் பெண்ணின் இலக்கணம் வழுவுதலை பல ஆண் மனதால் ஏற்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

உங்கள் மாமாவுக்குப் பாதுகாப்பற்ற உணர்வு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள்தான் பக்குவமாக இதனைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். திருமணமாகி விட்ட காரணத்தினாலேயே மனைவி மீது முழு ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்காதீர்கள். அவர் முதலில் தந்தைக்கு மகள். பின்புதான் உங்கள் மனைவி.

பெரியவர்கள் வீட்டில் இருக்கும் போது மனைவியுடன் தனியே சிரித்துப் பேசுவதைத் தவிருங்கள். அவர்கள் முன்பு மனைவியைத் தொட்டுப் பேசுவதோ கொஞ்சுவதோ குடும்ப ஆண்களுக்கு அழகில்லை.

இலவசப் பேருந்துப் பயணமும் ஆண்களின் மனநிலையும்

கிராம, நகர பாரபட்சமில்லாமல் அனைத்துப் பெண்களுக்கும் இலவசப் பேருந்துப் பயணம் இலகுவாக கிடைக்கிறதா என்றால்? இல்லை என்றே நிதர்சனம் பேசுகிறது. கண் முன்னாடி பல சண்டைகளை ஓட்டுநருக்கும் பெண்களுக்குமிடையே நிகழ்த்திக் காட்டுகிறது. சில இடங்களில் ஆங்காங்கே எப்படி எல்லாம் அந்த இலவசத்தை வீணடிக்க முடியுமோ, அப்படி எல்லாம் சில டிரைவர், கண்டக்டர் தெளிவாகச் செய்கிறார்கள்.

நான் என்பது...

நமது கட்டுபாட்டில் உள்ள ஒன்றை மேம்படுத்த முயலுவதும், கட்டுபாட்டில் இல்லாத காரணிகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சுய நேசிப்பின் அடிப்படை.