உடல் மொழியும் உச்சக்கட்டமும்
வெட்கம் ஒரு தனிப்பட்ட நபரின் பிரத்யேகக் குணம். சில ஆண்களும் வெட்கப்படலாம், பல பெண்கள் வெட்கப்படாமலும் இருக்கலாம். அது முழுக்க முழுக்க அவர்களது தனிப்பட்ட உணர்திறனைச் சார்ந்தது
வெட்கம் ஒரு தனிப்பட்ட நபரின் பிரத்யேகக் குணம். சில ஆண்களும் வெட்கப்படலாம், பல பெண்கள் வெட்கப்படாமலும் இருக்கலாம். அது முழுக்க முழுக்க அவர்களது தனிப்பட்ட உணர்திறனைச் சார்ந்தது
‘கிளி போல் மனைவியிருந்தாலும் குரங்கு போல் வைப்பாட்டி வைத்திருக்கிறான்’ என்று அந்தக்காலப் பாட்டிகள்
சொல்வார்களில்லையா? (இது இருபாலருக்கும் பொருந்தும்) அப்படி ஒருவர் காலடியில் விழுந்து கிடப்பதற்குக் காரணம் உணர்வளவில் அவர்கள் அந்த நபரிடம் உச்சக்கட்டம் அடைந்திருப்பதால்தான்.
ஒரு ஆண், எதற்கெடுத்தாலும் ஒரு பெண்ணிடம் காரணமில்லாமல் அல்லது ஏதாவது காரணங்களை அவனாகவே கற்பித்துக்கொண்டு கத்தி சண்டையிடுகிறான் என்றால், அவன் அவள் முன் தன்னை மிகவும் தாழ்ந்தவனாகவும் நம்பிக்கையற்றும் உணர்கிறான் என்று பொருள். அந்தக் கையாலாகாத்தனத்தை, தன் இயலாமையை மறைக்கத்தான் ‘கத்தும் யுக்தி’.
தங்கள் துணைவரிடம் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல் காட்டிக் கொள்ள பொய்யான உச்சக்கட்ட நடிப்பை ஆடிவிட்டு, வெளியே வேறு ஒரு துணையுடன் உல்லாசமாக இருக்கிறார்கள். இதை மறைக்கத்தான் இவ்வாறு நடிக்கிறார்கள்
மேற்கத்திய பெண்கள், சுற்றி வளைக்காமல், ‘ இன்று நான் தயார்நிலை காலகட்டத்தில் இருக்கிறேன்’, ‘Why don’t we have a good time today..?’ ‘இன்று நாம் படுக்கையில் நெருக்கமாயிருப்போமா..?’ என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்களை ‘தலித் சினிமா’ என்று அடையாளப்படுத்தப்படுவதில்லை. அதாவது, தலித் அல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்களால் உருவாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் திரைப்படங்கள் பொது நீரோட்ட சினிமா என்றுதான் பார்க்கபடுகின்றன. இதில், இருக்கும் அரசியல் யாதென்றால் ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளைப் பேசி உருவாக்கப்படும் திரைப்படங்கள் மட்டும் தலித் சினிமா என்று அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சாதிய சினிமா’ என்று திரித்து சித்தரிக்கப்படுகிறது.
தன்னுடைய உணர்ச்சி வற்றி விடுவதற்குள், தன் வேலையை முடித்து விடவேண்டும் என்ற சுயநலத்துடன் அவளை ஆக்ரமித்து செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது ஏற்படும் மரண வலியில் எப்படி அவளுக்கு அந்த ஆணின் மீது காதலும் கூடலி ல் ஆர்வமும் ஏற்படும்..?
திரைப்படக் காட்சிகள் கொடுக்கும் பொய்யான கற்பனைகளால் தூண்டப்பட்டு எதையோ எதிர்பார்த்துத் திருமண வாழ்வைத் தொடங்கும் பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் முதலிரவில் தொடங்கி எல்லா இரவுகளிலும் கிடைப்பதென்னவோ பெரிய ‘பல்பு’தான்!
மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.
‘சிந்துபைரவி சுஹாசினிபோல் ஒரு காதலி வேண்டும். ஆனால், சுலோச்சனா போல் ஒரு மனைவி வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள். அதிலும் ‘அப்படி’ ஒரு மனைவியை வைத்துக் கொண்டு, ‘இப்படி’ ஒரு பெண்மேல் ஆசைப்படுவதும், சதா தன் மனைவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவளோடு ஒப்பிட்டுப் பேசுவதும் தனது கலவியல் உணர்வுகளைத் தூண்டாதது இந்த ‘அப்பாவி மனைவியின்’ தவறுதான் என்றும் தங்களுக்குத் தாங்களே காரணங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.