UNLEASH THE UNTOLD

பொ. அனிதா பாலகிருஷ்ணன்

இப்படியும் அப்படியும் பேசும் ஊர்வாய்கள்...

மேற்படிப்புக்குத் தயாராக மருத்துவமனையை மூடிய போது, அது திறக்க எதிர்ப்பு தெரிவித்த அதே வாய்கள்தாம், ஏன் வருமானம் வரும் மருத்துவமனையைப் பொறுப்பில்லாமல் மூடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டன.

நண்பர்கள் இல்லாத உலகம் எப்படி இருந்திருக்கும்?

இவர்கள் அவள் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இன்றியமையாதவர்கள். ஆனால், இந்த எல்லாக் காலகட்டத்திலும் அவள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தூக்கிச் சுமக்கும் அவளைவிட அவளை நன்கறிந்த, அவளை அவளுக்காக நேசிக்கும், அவள் ஏற்ற இறக்கங்களை அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பகிர்ந்து, அவர்களை மீண்டும் தன்னிலையடையச் செய்யும் அவள் சாயும் தோள்கள் அவளுக்கு தோழி என்கிற பெயரில் வாழ்க்கை அளித்த தலைசிறந்த ஆசிர்வாதம்.

பெண்களைப் பயமுறுத்தும் பூச்சாண்டிகள்

‘நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டதுபோல், அவர்களும் தங்களைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வார்கள்’ என்று கூறினாள். அது உண்மைதான், ‘ஆனால் பெண் குழந்தைகளுக்குத் தற்காப்பு கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளிடம் எப்படி மரியாதையுடனும், அவர்களும் நம்மைப்போல் சக மனிதர்கள், அவர்களை நம் வீட்டுப் பெண்களை எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்போமோ அதைப் போன்ற பாதுகாப்பான உணர்வுடன் வெளியுலகைக் காணும்படியும் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்’ என்கிற அவள் வார்த்தைகள் தனிப்பட்ட கருத்து என்பதைவிட, சமூகக் கடமையாக மாறினால் இந்த நிஜ வாழ்க்கை பூச்சாண்டிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

கவிதை என்னும் காலநதி

அந்த ரகசியம் பிறருக்குத் தெரிய பல வருடங்கள் ஆனது. ஒரு காலகட்டத்தில் அவள் கண்முன் கண்ட அனைத்தையும் கவிதையாகக் கண்டாள். காலையின் முதல் கதிர் தொடங்கி இரவின் நட்சத்திரக் கூட்டம் வரை இயற்கையின்அனைத்து அதிசயங்களும் அவள் வார்த்தைகளின் தூரிகையில் அழகு கவிதைகளாகப் பிறந்தன.