UNLEASH THE UNTOLD

பொ. அனிதா பாலகிருஷ்ணன்

பொங்குமாக்கடல்

கைக்கடிகாரம் 8.30 என்று காட்டியது.  இந்நேரம் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து கிளம்பி இருக்கும். இனியும் யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை, விரைந்து சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்று திரும்பியவர் கால்களில் இருந்த ஷுவின் கணமும் உணர்ச்சியின் வேகமும் சேர்ந்து பின்னால் இழுத்தது.

வாழ்க்கையில் வீசிய புயல்...

“மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. பேசாம ஞாயித்துக் கிழம கிளம்பாம ரெண்டு பேரும் திங்கக் கிழம எங்கூடவே கிளம்புங்களேன்” என்றான் பொன்துரை. வழக்கமாக இப்படி எல்லாம் சொல்பவனில்லை. ஏன் இப்படிச் சொல்கிறான் என்று யோசித்தவளுக்கு, “ஓ, இப்ப புரியுது. வழக்கம் போல மங்களத்தை நாங்க கிளம்புற அன்னைக்கு வராம அடுத்த நாள் வராங்களே. அதனால இவ வேற அவ அப்பாவுக்கு சேவகம் செய்யச் சொல்றாளேன்னு தானே எங்கள அடுத்த நாள் போகச் சொல்றே?”

நடுநிசி வேளையில்...

அவன் ஆச்சியின் குரலும் அவர் வைத்திருந்த விளக்கின் வெளிச்சமும் ஆட்டுக் கொட்டகையில் அவர் இருப்பதைக் காட்டியது.

“சம்முசுந்தரம், இங்க வா ராசா. ஆத்தா கிட்ட வாடா. உன்னய பத்திரமா கூட்டிப் போறேன். ஏட்டி அழகம்ம இந்தா உனக்கு புடிச்ச உடமணி, வந்து சாப்பிடு” என்று குழந்தையைக் கொஞ்சும் குரலில் பேசிக் கொண்டிருந்ததும் , பதிலுக்கு அவை  ‘ம்மேமே’ என்று கத்துவதும் காதில் விழுந்த போது அவனுக்குக் கோபம் வந்தது.

“பகல்லதான் ஆடே உலகம்ன்னு கெடக்குறா சரி. நடுராத்திரியில இந்த மழைக்குள்ள அதுவும் கரண்டு இல்லாத நேரம் ஆட்ட கட்டிக்கிட்டு அழலன்னு  யாரு கேட்டா?”

இதுதான் காதல் என்பதா!

அவன் வருத்தத்தைப் போக்கும் விதமாக அவள் இதழ்களில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது. அவன் சற்று ஆசுவாசமடைந்தான்.
கடல் அரிப்பைத் தடுக்க போட்டிருந்த கற்பாறை மேல் அமர்ந்தாள். அருகிலிருந்த பாறை மேல் அவனும் அமர்ந்தான்.  
கடல் அவனைப் போல் ஓய்வின்றி பேசியது, எதையும் பேசாமல் அதை அமைதியாகக்  கேட்டு கொண்டு இருக்கும் கரையாக அவள்.

பா...ம்...பு.... பாம்பு...

அந்த நல்ல மனசுக்காரனுக்கு உதவி அபிநயாவின் உருவில் கிடைத்தது. தன் கம்பெனியில் மேனேஜர் பதவியில் இருந்து பலரைச் சமாளித்துப் பழகியவள் தைரியமாகத் தன்னுடைய விடை காணும் மனப்பான்மையை அந்தச் சூழலில் அவிழ்த்து விட்டாள்.

சாமியாடி என்ன சொன்னார்?

காலையில் அவளைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போன அதே சாரதா அக்கா இவர் இல்லை என்று நினைத்த போதே அவள் கண்கள் சொருகின. மயங்கி விழப் போகிறாரோ என்று நினைத்ததற்கு மாறாக மெல்ல அவள் காதோரமாக வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் கிசுகிசுப்பான ஆனால் தீர்க்கமான குரலில் ஏதோ சொன்னார். அதைக் கேட்ட அவள் சர்வமும் ஒரு நொடியில் உறைந்தது.

கோயில் கொடை

அவள் எண்ணவோட்டத்தைத் தடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கியிலிருந்து, ‘பால்குடம் எடுக்கும் பக்தர்கள் உடனே கோயிலுக்கு முன்பாக வரும்படி விழாக்குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். மேளதாளக் கலைஞர்கள் எங்கிருந்தாலும் உடனே விநாயகர் கோயில் முன்பாக வருமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பு தொடர்ந்தது.

மழையும் ரயிலும்

அவனுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் எச்சரிக்கை விளக்கைப் பொருத்தியவாறு ஓடிவந்த சுகுமார் கையிலிருந்த சிவப்பு வெளிச்சமும், சிவாவின் முகத்தில் இருந்த பதற்றமும் தான் கணித்தது சரி என்று தோன்றியது.

கொட்டிய மழை...

“திருச்செந்தூர் முருகங் கோயில்லயும்  தண்ணில, எவனோ வீடியோ எடுத்து போட்டுருந்தான். கடல் அப்படியே கொந்தழிச்சுச்சு பாத்தியா? சுனாமி கினாமி வந்தாலும் வந்துருமோ?”

மகேஸ்வரி

அவள் ஏற்கனவே எவ்வளவோ செய்துவிட்டாள்‌. முதலில் அவள் கணவன் அடிக்கத் தொடங்கிய நாட்களில் ஓடிச் சென்று அவள் வீட்டில்தான் தஞ்சம் புகுவாள். ஆனால் அவள் கணவன் அவளை அங்கு தேடி வந்து அவளை வசைபாடியதோடு நில்லாமல் ஒருமுறை அவனைத் தடுத்து கைநீட்டிய அவள் கணவன் முத்துராசு அண்ணனோடு அவளைச் சேர்த்து அசிங்க அசிங்கமாக பேசவும், இனியும் அவர்களுக்கு அவளால் தொல்லை வரக்கூடாது என்று நினைத்து வீட்டோடு இருந்துவிட்டாள்.