UNLEASH THE UNTOLD

உங்கள் தேவையை எப்போது பேசப் போகிறீர்கள்?

“நீ பேசத் தயாராகிவிட்டது மகிழ்ச்சியே, ஆனாலும் அது உன் பக்கம் சரியாகிவிட்டதற்கான அறிகுறி. அதைக் கேட்கும் அனைவரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் புரிதல், வளர்ந்த விதத்தைப் பொறுத்து மாறுபடலாம். ஆனாலும் அவர்களை அவர்கள் இடத்தில் இருந்து பார்க்கக் கற்றுக்கொள். கொஞ்சம் கொஞ்சமாக நீ விரும்பிய மாற்றம் உன் வாழ்வில் வரும்“ என்றார் ஆலோசகர்.

நீலச்சாயம்

சமூக ஊடகங்களில் இதெல்லாம் இயல்புதான். முக்கியமாகப் பொதுவெளியில் வந்து சுதந்திரமாகக் கருத்துச் சொல்லும் பெண்களின் வாயை அடைக்க, அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் என்பது ஒழுக்கம்தான். அதனைக் கேள்விக்குட்படுத்திக் கூனிக் குறுகிப் போகச் செய்வது.

சாமியாடி என்ன சொன்னார்?

காலையில் அவளைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போன அதே சாரதா அக்கா இவர் இல்லை என்று நினைத்த போதே அவள் கண்கள் சொருகின. மயங்கி விழப் போகிறாரோ என்று நினைத்ததற்கு மாறாக மெல்ல அவள் காதோரமாக வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் கிசுகிசுப்பான ஆனால் தீர்க்கமான குரலில் ஏதோ சொன்னார். அதைக் கேட்ட அவள் சர்வமும் ஒரு நொடியில் உறைந்தது.

பெருந்தொற்று

தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாமா என்கிற கேள்விக்கு வருவோம். ஒரு நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் அந்தத் தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தவரின் சுதந்திரத்தையும் மதிப்போம்!

தானும் ராமும் எத்தனை நெருக்கமான நண்பர்கள் என்றாலும் ராமுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை மறந்ததுதான் காரணம். ராம் எல்லாவற்றையும் சொல்லித்தான் ஆகவேண்டிய அவசியம் இல்லை, எதைப் பகிரலாம் என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்கும் நட்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே. நாம் அனைவருமே அவ்வப்போது தவறும் இடம் இது, நம் அன்பின் ஆழம் காரணமாக அடுத்தவரின் மேல் கண்மூடித்தனமான ஆதிக்கம் செலுத்துவோம், பல நேரம் நம்மை அறியாமலேயே. நல்ல வேளையாக இந்தப் பிணக்கை ராமிடம் காட்டவில்லை. அப்படி நடந்திருந்தால் அந்த அழகிய நட்பில் விரிசல் விழுந்திருக்கும்.

உள்ளாற எப்போதும் உல்லாலா...

ஒரு வெற்றுப் பாட்டிலில் உள்ள காற்றை வெளியேற்ற வேண்டும் என்றால் அதனுள் முதலில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அப்போது காற்று தானாகவே வெளியேறிவிடும். அது போல நாம் எதிர்மறை எண்ணங்களை நமக்குள்ளிருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்தால், முதலில் நம் மனதை நேர்மறைச் சிந்தனைகளால் நிரப்ப வேண்டும். அப்போது தானாகவே நாம் நினைத்தது நடக்கும். 

அந்தமான் கைதி

‘வெறிநாய் கடித்ததற்கு நாம் எவ்வாறு பொறுப்பாக முடியும்?’ என ஒரு ஆணால் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணைப் பார்த்து, நாயகன் கேட்பது; அவரையே காதலிப்பது போன்ற செயல்கள், அப்போதைய காலகட்டத்தில் முற்போக்கானதாக இருந்து இருக்க வேண்டும்.



மாட்டிறைச்சி பொது உணவு இல்லையா?

இந்தியாவில் மட்டும்தான் உணவு அரசியலாக்கப்படுகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது இந்து மதத்திற்கு, இந்தியாவிற்கு, இந்துக்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களிலும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துக்களில் தங்களை உயர்சாதியினராகக் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள் மட்டுமே உண்பதில்லை. இருப்பினும் பண்டைய இந்தியாவில் அனைத்து சாதியினரும், குறிப்பாக இந்துக்களும் மாட்டிறைச்சியை உண்டனர். பெளத்த மற்றும் சமண மதத்தின் எழுச்சிக்குப் பின்னரே சைவ உணவு என்பது இந்து தர்மமாகப் பார்க்கப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் (Avenshi Centre for Women’s Studies, 2012).

திருச்செந்தூர்க் கோயிலில் இன்றும் அடிமை முறை

தேவதாசி முறையின் எச்சம், அடிமை முறையின் எச்சம், அரச பரம்பரையினரின் புகழ் பாடும் பழக்கத்தின் எச்சம் போன்றவற்றை திருச்செந்தூர் முருகன் கோவில் பூசாரிகளும், பண்டாரங்களும் கட்டிக்காத்து வருகின்றனர்.

சிங்காரி

‘மேல படிக்க வைச்சதனால்தான் இப்படி மேலே போய் நிக்குது’ என மகள் ஓடிப்போனதற்குப் படிப்பைக் காரணமாக காட்டும் செல்லத்தின் (சிங்காரியின்) அப்பா, ‘படித்திருந்தும் பகுத்தறிவு இழந்தேன்’ எனச் சொல்லும் சிவப்பிரகாசம், ‘அதிகமா படிச்சவனுடைய லட்சணமா இது?’ என கேள்வி கேட்கும் நடராஜன் எனப் படிப்பைச் சுற்றிப் பல சொல்லாடல்கள் வருகின்றன.