UNLEASH THE UNTOLD

Year: 2023

குழந்தை யார் சாயல்?

தொலைக்காட்சியில் ஐபிஎல் தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிரிக்கெட் வீரர்களான போலார்டும், க்ரிஸ் கெயிலும் நம் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு காரணம் அவர்களின் தோற்றம். வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்தவர்கள் உயரமாகவும், தங்கள் உயரத்திற்கேற்ற எடை உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், இதற்குப் பின்னால் இருப்பது தாயனையும் அது தாங்கி நிற்கும் மரபணுக்களும். ஜப்பானியர்களின் உயரமும் ஐரோப்பியர்களின் நிறமும் நேபாளியர்களின் தோற்றமும் சீனர்களின் கண்களும் மரபணுக்களால் தீர்மானிக்கப்பட்டவைதான்.

குழந்தைகளை இயல்பாக வாழவிடுவோம்!

ஒருவேளை சாப்பாட்டுக்காக, வறுமை காரணமாக குழந்தைகளை வேலை செய்ய வைப்பது போக இப்பொழுது அதிகமான லைக்ஸ், கமெண்ட்ஸ், புகழின் மேல் இருக்கும் போதை கூடவே வருமானம் போன்றவற்றிற்காக சமூக வலைத்தளங்களில் \ ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளைத் தவறான முறையில் பெற்றோர்களே ஈடுபடுத்துவது நிச்சயம் கண்டிக்கத்தக்க செயல்.

பாதுகாப்பு?

யானை, குரங்கு, மாடு போன்ற மிருகங்களை அடக்கித் தன்வசப்படுத்தி வைத்திருப்பதைப் போல பெண்ணையும் வைத்திருக்கிறது இந்தச் சமூகம். காலையில் அடித்து உதைத்து வசைபாடிவிட்டுச் சென்ற கணவனுக்கு மாலையில் திரும்பி வந்ததும் அடிஉதை எல்லாவற்றையும் மறந்து இல்லறம் நடத்துவதற்குத்தானே பெண்களுக்குக் கற்பிக்கிறார்கள்.

வாங்க பழகலாம்!

மொழி வளர்ந்த பின்பும் ஒவ்வொருவரும் பல மொழி கற்ற பிறகும் நாம் மற்றவருடன் தகவல்களை, உணர்வுகளைச் சிறப்பாகப் பரிமாறிக்கொள்கிறோமா என்றால் இல்லை. எப்போது பேசுவது, எப்படிப் பேசுவது, என்ன பேசுவது, நாம் பேசும் போது கேட்பவர் ஆர்வமாக கேட்கிறாரா அல்லது காயப்படுகிறாரா, மற்றவர் பேசும் போது எப்படிக் கேட்பது என்பதைப் பலர் கற்றுக் கொள்வதே இல்லை. இதனால்தான் பலர் அழகான உறவுகளை இழக்கிறோம்.

மகளிர் உரிமைத் தொகை...

ஒரு மகன் லட்சத்தில் சம்பாதிப்பதால் மட்டுமே அவனுடைய தாய்க்கு அதில் உரிமை இருக்கிறது என்று பொருள் இல்லை. ஓர் அவசர செலவுக்கு, மருந்து, மாத்திரை வாங்க என்றாலும்கூட ‘எனக்கு இது வேண்டும் வாங்கிக் கொடு’ என்று வாய்விட்டுக் கேட்கும் நிலையில்தான் பல பெண்கள் இருக்கிறார்கள்.

நோயைவிட நோபல் விஞ்ஞானியைச் சந்திக்க முடியாததில்தான் வருத்தம்

5வது கீமோதெரபிக்குப் பின்னர், உடல் நிலை ரொம்பவும் மோசமாகிவிட்டது. உள்ளம் உறுதியாக இருந்தது. நடப்பதே சிரமம் என்கிற நிலை, இருந்தாலும் நடந்தேன். என்னால் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டுக்குச் செல்ல இயலவில்லை. அதனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமனைச் சந்திக்க முடியாத வருத்தம் இன்றும் இருக்கிறது.

தீராத தொற்று நோய்

என் மகன் என் அருகில் வந்தான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வந்திருக்கிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அம்மா, எழுந்திரு. எனக்குப் பசியாக இருக்கு. பாஸ்தா செஞ்சு கொடு” என்று எனக்கு உத்தரவிட்டுவிட்டு ஒரு பந்தை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் விளையாட ஓடிவிட்டான்.

நான் செய்வதறியாது நின்றேன்.

குடும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம்

பெண்கள் வேலைக்குப் போவது குறிப்பாக ஆசிய நாடுகளில்தாம் குறைவாக இருக்கிறது. குடும்பம், கலாச்சாரம், மதம், சமய நம்பிக்கைகள் காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால் பெண்களேகூட என் குழந்தையை, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் எனக்கென்ன சிரமம், என் கடமை, பெருமை என்றெல்லாம் பேசுவதுண்டு. 16 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா வேலைக்குப் போய் சம்பாதிப்பவராக இருந்தாலும்கூட கணவரும் மகளும் மதிக்காமல் இருப்பது போல காட்சிகள் இருக்கும். பல குடும்பத்தில் நடக்கும் உண்மை நிகழ்வு இது. பெண்களை சமூக ஊடகங்களிலும் வீடுகளிலும் மட்டம் தட்டிப் பேசுவதை ஆண்கள் நகைச்சுவை என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் வீட்டு வேலை மட்டுமே செய்யும் ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ்வது என்பது ஆண்கள், பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ளது என்று ஒப்புக்கொள்வதைப் போல குறைவான சாத்தியமுள்ள விஷயம்.

பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையும் வாக்கு அரசியலும்

1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். அந்த உரிமையைப் பெற்ற மிகச்சில பெண்களுக்கான நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக 2017ஆம் ஆண்டு, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல்’ மற்றும் ‘குறிப்பிடத்தக்க’ பெண்களுக்கான கண்காட்சியாக இது உள்ளது. இங்கு பெண்கள் வாக்குரிமை பெற்றதற்கான நீண்ட வரலாறு குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அம்மாவும் நாகணவாயும்

அன்று அதற்கு அம்மாவிடம் நன்றாகத் திட்டு விழுந்தது. அடுத்த நாள் முதல் அதைக் காணோமென்றால் அம்மா தேடத் தொடங்கிவிடுவார். அவையும் வழக்கம் போல் வந்து சென்றன. மின் பெட்டியை மட்டும் நாங்கள் சந்தியி ன்றி நன்றாகப் பூட்டி விட்டோம். அன்று அம்மா பார்க்காமல் இருந்திருந்தால் நாங்கள் மின் அட்டையைக் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

இப்படியாகக் குருவிகள் எங்கள் குடும்ப உறுப்பினராகி விட்டன. மழை நாளில் எங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை!