UNLEASH THE UNTOLD

Month: June 2023

இனிமேல் வருண் மீது கை நீட்ட மாட்டேன், அத்தை!

வருண் மனைவி தன்னை அழைத்துப் போக வந்ததை எண்ணி உள்ளூரப் பெருமையுடன் மூட்டைகளைக் கட்டத் தொடங்கினான். அடுத்த வீட்டு அண்ணன் சேகர் வந்து உதவி செய்து கொண்டிருந்தான்; நிறைய புத்திமதிகளுடன்.

சுதந்திரம் என்பது இதுதானா?

பெண்ணுக்கு என்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் இருக்கவே கூடாதா? அவளுக்கென்று நட்பு வட்டம் இருக்கக் கூடாதா? அவளின் அலைபேசியைக்கூட ஆராய்ச்சி செய்யும் ஆண்கள் இருக்கத்தானே செய்கின்றனர். “ஏன், பொண்டாட்டி மொபைல் புருஷன் பார்க்கக் கூடாதா?” என்று ஆதங்கம் வேறு வந்து தொற்றிக் கொள்கிறது ஆண்களுக்கு. மனைவியின் அலைபேசியில் அவளைச் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, அவள் தோழியரின் அல்லது பணியிடத்தின் ரகசியங்களும் ஒளிந்திருக்கும் என்று உணர்ந்துகொள்வதில்லை.

'தலித் சினிமா' எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது?

ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்களை ‘தலித் சினிமா’ என்று அடையாளப்படுத்தப்படுவதில்லை. அதாவது, தலித் அல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்களால் உருவாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் திரைப்படங்கள் பொது நீரோட்ட சினிமா என்றுதான் பார்க்கபடுகின்றன. இதில், இருக்கும் அரசியல் யாதென்றால் ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளைப் பேசி உருவாக்கப்படும் திரைப்படங்கள் மட்டும் தலித் சினிமா என்று அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சாதிய சினிமா’ என்று திரித்து சித்தரிக்கப்படுகிறது.

கொழுந்தன் கல்யாணம்...

புது ஆண் ஒருவனைத் தன் பழகிய அறைக்குள் எதிர்பார்த்திருந்தாள் லதா. தள்ளியிருத்தலே பெருமதிப்பு என்றும் முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் தன் உடல் அப்படிச் சொல்லுமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்தது. மணப்பந்தலில் அவன் வாசம் அவளைத் துளைத்தபடியே இருந்தது. உடல் ஒரு போக்காகவும் அவள் ஒரு போக்காகவும் போய்க்கொண்டிருந்தார்கள்.

நீங்க ரொம்ப பிஸியா?

எப்போதும் நேரமே இல்லை என்று புலம்புபவர்கள் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் மனம் செய்கிற வேலையில் இல்லாமல், அடுத்து என்ன என்பதிலேயே முனைப்போடு இருக்கும். மனம் எப்போதும் ஒரு பரபரப்பில், பதற்றத்தில் இருக்கும். எந்தத் துறையில் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் உள்ள பொதுவான அம்சம் சிறப்பான நேர மேலாண்மை.

கணவன் வாங்கிய சொத்தில் மனைவிக்கும் சம உரிமை

தீர்ப்பின்படி, சொத்து கணவனின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும், அது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உழைத்து வாங்கியது என்றே கருதப்படும். இல்லத்தரசி நேரம் பார்க்காமல் பல பணிகளைச் செய்கிறார். அவர்களுக்கு நிர்வாகம் செய்யும் பண்பு, சமைக்கும் திறன், பொருளாதாரம், கணித அறிவு எல்லாம் அவசியமாகிறது. வீட்டைப் பார்த்துக்கொள்ளுதல் என்பதில் அடிப்படை மருத்துவமும் அடங்கி இருக்கிறது. அதனால் மனைவியின் இந்தப் பங்கை ஒன்றுமில்லாதது எனக் கூற முடியாது. கணவன் சம்பாதித்த சொத்தில் சம உரிமை மனைவிக்கு உள்ளது. மனைவி இல்லாமல் அதை அவர் சம்பாதித்து இருக்க முடியாது. பெண்கள் குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும்போது இறுதியில் அவர்களுக்கு எதுவும் இல்லை எனக் கூற முடியாது. நீதிமன்றங்களும் பெண்கள் தன் தியாகத்துக்குச் சரியான பரிசு பெறுகிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

ப்ளீஸ், பார்வையாளர்களை அனுமதிக்காதீர்கள்...

எந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் வீட்டுக்குப் பார்க்க வருபவர்கள் மூலம் கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம் என்பதால், யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. இதில் கறாராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இயற்கையும் பெண் உடலியலும்

தன்னுடைய உணர்ச்சி வற்றி விடுவதற்குள், தன் வேலையை முடித்து விடவேண்டும் என்ற சுயநலத்துடன் அவளை ஆக்ரமித்து செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது ஏற்படும் மரண வலியில் எப்படி அவளுக்கு அந்த ஆணின் மீது காதலும் கூடலி ல் ஆர்வமும் ஏற்படும்..? 

ப்ராண்டுகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...

பெரும்பாலான நேரத்தில் நம்மை நாம் நம்புவதைவிட, நம் வாழ்க்கையின் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்த நாம் உடைகளிடம் சரணடைந்துவிடுகிறோம். வெளிப்படையாகச் சொன்னால் ப்ராண்டுகளிடம்!

சமூக வலைத்தளமும் பெண்களும்

நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.