UNLEASH THE UNTOLD

Month: February 2023

காதலும் சுயமும்

சில நேரத்தில் சூழ்நிலைகளுக்கேற்ப விட்டுக் கொடுப்பது ஒருவருக்கு இன்னொருவர் செய்ய வேண்டியதுதான். ஆனால், எப்பொழுதும் ஒருவரே விட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பது உறவின் சரிநிலையைப் பாதிக்கும். நாளடைவில் சுயமரியாதையையும் இழக்கச் செய்யும். ஒரு நாள் என்ன சமைப்பது என்பது தொடங்கி, யார் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பது வரை பெரும்பாலும் பெண்களே சமரசங்கள் செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

கலைந்து போன தமிழனின் 150 ஆண்டுகாலக் கனவு

“சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்ற பாரதியின் நூற்றாண்டுச் சிந்தனை, தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவாகவே இருக்கிறது. தமிழினக்கால்வாய், சேது சமுத்திரக் கால்வாய் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இத்திட்டத்தின் அவசியம், அவசரம் குறித்து, அறிஞர் அண்ணா முதன் முதலில் நாடாளுமன்றத்தில் பேசினார். 1968 ஏப்ரல் மாதத்திய 25ஆம் நாள் காஞ்சி இதழில், “தனுஷ்கோடியைக் கடல் மூழ்கடித்ததால் தமிழன் கால்வாய் எனப்படும் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகிவிட்டது” என்று எழுதினார்.

பறை தேவதைகள்!

உலகில் வேறெங்குமில்லாத வனுவாட்டுவின் தண்ணீர் பறை இசை, மனதை மயக்கும் ஒலி மற்றும் காட்சி அனுபவம். பாடல்கள் நீரின் மேற்பரப்புக்கு ஏற்ப கைகளால் நிகழ்த்தப்படுகின்ற பல்வேறு இயக்கங்களின் தொகுப்பு. நீரைத் தெறித்தல், அறைதல், சுழற்றுதல், கடைதல் என்று பல உத்திகளைக் கையாண்டு இசையை எழுப்புகிறார்கள்.

<strong>நாங்கள் இந்தியர்கள் இல்லையா?</strong>

“ஸ்கூல்ல டீச்சர் என்ன கூப்டாங்க. நா போய் நின்னேன். டீச்சரு என் பேர கேட்டாங்க. நா செய்யது அலி பாத்திமானு சொன்னேன். உடனே, ‘அவங்களா நீங்க?’னு கேட்டாங்க. அப்டினா என்னங்குற மாதிரி அமைதியா முழிச்சிட்டு நின்னேன். ‘அலி’னா என்னனு தெரியுமானு கேட்டாங்க. நா தெரியாதுனு சொன்னேன். என்னைய அனுப்பிட்டு பக்கத்துல இருக்கற டீச்சர்கிட்ட ஏதோ சொல்லி சிரிச்சாங்க. ஏன் மாமா அப்டி பண்ணாங்க…”

எனோலா ஹோம்ஸ்

“உனக்கு உலகம் மாறத் தேவை இல்லை. ஏனென்றால் உனக்கு உலகம் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.” இப்படி அர்த்தமும் ஆழமும் நிறைந்த வசனங்கள் கதையில் அப்படியே பொருந்திப் போகும். எனோலா ஹோம்ஸ் இன்றைய பல பெண்களின் பிரதிபிம்பம். இன்னும் பல பெண்களின் வாழ்வு சிலந்திவலை போன்ற சமூக விதிமுறைகளிலும் குடும்ப கௌரவத்தின் பிடியிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு : மகிழ்ச்சியா, அச்சமா?

ஒரு நபர் வீட்டின் உள்ளே நுழைந்ததும் விளக்குகளும் மின்விசிறிகளும் தானே உயிர்கொள்வதும், உள்ளே வந்த நபர் களைப்பாகவும் வியர்வையுடனும் இருக்கிறார் என்பதை உணர்ந்து, கூடவே ஏசியும் அவருக்குப் பிடித்த அவர் வழக்கமாகக் கேட்கும் பாடல் ஒன்றையும் போட்டு, அவர் பாடல் வேண்டாம் என்றதும் அதை நிறுத்தி மன்னிப்பு கேட்டால் எப்படி இருக்கும்? இதுதான் செயற்கை நுண்ணறிவு என்பது.

<strong>நீர் ஜனநாயகம்</strong>

சாதி, வர்க்கம், வசிக்கும் பகுதிகளின் ஆண்மைய மனப்பான்மை ஆகிய எல்லாவற்றையும் பொறுத்து பெண்களின்மீதான நீர்ச்சுமை அதிகரிக்கிறது. இந்தப் படிநிலைகள் நீங்கலாகப் பார்த்தாலும் நீர்ப் பிரச்னைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தாம். “உலக அளவில் நீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளைச் சேர்ந்த 80% குடும்பங்களில் நீர் சேகரிப்பது பெண்களின் தனிப் பொறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், உலக அளவில் நீர் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க பதவிகளில் 17% மட்டுமே பெண்கள்” என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று.

பிரஷர் போடாதீர்கள் பெற்றோர்களே!

ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு ரகம். அவரவர் திறமையை அவரவர் அடையாளம் கண்டுகொள்ளவே அதிக கால அவகாசம் தேவைப்படும், அதுவும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அப்படி இருக்க, அவர்களின் திறமையைப் பரீட்சை வைத்து, மதிப்பெண் அடிப்படையில் ஒரே அளவுகோலில் அளவிட இயலாது என்பதே உண்மை.

<strong>அறிந்தும் அறியாமலும்</strong>

பதின் பருவத்துக்கு வந்த குழந்தைகளிடம் குடும்பநிதி நிலையைத் தெளிவாக விளக்கி, பொறுப்புகளை ஒப்படைத்தால் நம்மைவிட அதிக கவனமாகச் செலவு செய்வார்கள். செல்லம் கொடுப்பது வேறு, அவர்களை சுதந்திரமாக வளர்த்தல் வேறு. இது இரண்டுக்குமான வித்தியாசம் புரியாமல்தான் பல பெற்றோர்கள் கோட்டை விடுகிறார்கள்.

அந்தக் கொடூரத்தை நிலா புரிந்துகொள்வாளா?

“வருண் தங்கம், தயவு செஞ்சு இதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு. யார் கிட்டயும் இதைச் சொல்லிடாதே. உங்க மாமாவைப் பத்தி நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்டி என் மகனையே…” தலையில் அடித்துக்கொண்டு அப்பா அழுததைப் பார்க்க வருணால் பொறுக்க முடியவில்லை.