UNLEASH THE UNTOLD

Month: June 2022

ஆரியம் vs திராவிடம்: இது இனப் போரா அல்லது கலாச்சாரப் போரா?

தமிழ்நாடு போல் மற்ற மாநிலங்கள் திராவிட-ஆரிய கலாச்சாரப் போர் குறித்த புரிதலோடு தீவிரமாக அந்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில்லை. அதனால் தான் ‘தமிழர்களின் உரிமை’ என்று பேசப்படுவது போல் ‘தெலுங்கர்களின் உரிமை’ அல்லது ‘இந்தி பேசுபவர்களின் உரிமை’ என்று பேசப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழர்களின் உரிமைகள் பறிபோகிறது என்று பேசினால் பிரிவினைவாதிகள் என்ற முத்திரை குத்தப்படும். ஒடுக்குமுறையை எதிர்த்து மிகச் சரியான கேள்வியைக் கேட்போரைத் தேசத் துரோகி என்றும் பிரிவினைவாதி என்றும் ஆளும் வர்க்கம் அடையாளப்படுத்துகிறது.

முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட...

நகை போட்டால் தான் ஊரில் மதிப்பார்கள் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைத் தெரிந்தவர்கள், நாலு தடவை நகை போட்டு வரவேண்டியது தானே என்பார்கள். பின் இவள் இப்படித்தான் எனக் கடந்து போய்விடுவார்கள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கென்றே இப்போது ஓராயிரம் ஆபரணங்கள் வருகின்றன. அவற்றை அணிந்து பாதுகாப்பாகப் பயணிப்போம்.

தமிழுக்கு மதுவென்று பேர்...

முதன்முதலில் இலங்கைத் தமிழ் நமக்கு வானொலி வழியாகவே பரிச்சயமானது. இலங்கை அறிவிப்பாளர்களின் குரலுக்கும் தமிழுக்கும் மனதைப் பறிகொடுத்து பித்தாய் அலைந்தார்கள். தொலைக்காட்சிகளும் தமிழ்த் திரைப்படங்களும் நாமறிந்த இலங்கைத் தமிழின் வட்டத்தைச் சற்றே பெரிதாக்கின. யூ டியூப் காணொளிகளால் மேலும் சற்று அதிகப்படியாக அறிந்துகொண்டோம்.

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா...

ஆண் குழந்தைகள் ‘வாளி’ அணிந்திருக்கின்றனர். வாளி என்பது சிறு வளையம். அதன் தொடர்ச்சியாகவே இன்றும் கோயிலில் வைத்து காது குத்தும் விழா ஆண்களுக்கும் நடைபெறுகிறது. எங்கள் ஊரில் அந்தோணியார் கோயிலில் வைத்து அந்தோணியார் பட்டம் வைத்து வாளி போடுவார்கள். அந்தோணியார் பட்டம் என்பது தலையின் வெளிப்புறம் மட்டும் சிறிது முடி வைத்து, மற்ற இடங்களின் மொத்த முடியையும் அகற்றும் வகையிலான மொட்டை.

வாடி ராசாத்தி... புதுசா, ரவுசா போவோம் வாலாட்டி...

ஒழுக்கம் என்பதற்கு வரையறை தான் என்ன? ஆண் தன் மனம் போல் திரிந்துவிட்டுப் பெண்ணுக்கு மட்டும் ஒழுக்கக் கோட்டை வரைந்து கட்டுப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?

மாற்றுத்திறனாளிகளை பாலின சமத்துவத்தோடு அணுகுகிறோமா?

படிக்கட்டுகள் இருக்கும் இடங்களில் எல்லாம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான ஏதுவான சாய்தளங்கள், சக்கரநாற்காலிகள் செல்வதற்கான சூழலே இல்லாத நிலை தான். இதனால் பல மாணவிகளால் தொடர்ந்து கல்வி கற்கும் சூழல் இல்லை. அப்படியே தரைதளத்தில் வகுப்பறைகள் இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான கழிப்பறைகள், சோதனைக் கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை இருப்பதில்லை. அதனால் அவர்கள் பாதியிலயே கல்வியைவிடக்கூடிய சூழல்தான் உள்ளது.

குழந்தைகளை நல்வழிப்படுத்த எளிதான உத்திகள்

அன்புக்கும் (love) ஆடம்பரச் சலுகைக்கும் (pampering) வித்தியாசம் உண்டு. அந்த வித்தியாசத்தை உணர்ந்து, குழந்தைகளுக்கு அன்பை மட்டுமே கொடுங்கள். ஆடம்பரச் சலுகைகளை அல்ல.

மன்னார் தீவினுக்கோர் பாலம் அமைத்தே…

திருக்கேதீஸ்வரம், மடுமாதா தேவாலயம், தள்ளாடி, குஞ்சுகுளம் தொங்கு பாலம், அல்லி ராணிக்கோட்டை, கட்டுக்கரைக்குளம், வங்காலை பறவைகள் சரணாலயம், பெருக்குமரம், மாதோட்ட துறைமுகம், மன்னார்கோட்டை என வரலாற்றுச் சிறப்புகளால் நிறைந்திருக்கிறது மன்னார்.

டாட்டூ போடுவது பெருங்குற்றமா?

ஐம்பது வருடங்களுக்கு முன்புகூட நம் அம்மாச்சிகளும் அப்பத்தாக்களும் உடலில் குத்தியிருந்தது தான். மான், மயில், கிளி, தேர், தேள், மரம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், மீன், விலங்குகள், தெய்வங்கள் போன்ற உருவங்களை அவர்கள் தங்கள் உடலில் குத்தியிருந்தார்கள். அவற்றின் நவீன வடிவமே டாட்டூ.

டிரெண்ட் செட்டர் நதியா

அதுவரை கிராமத்தில் பெண்களுக்கான சைக்கிளை வயதான ஆண்கள், காலைத் தூக்கி போட்டு ஏறுவதற்கு எளிதாக இருக்கும் என வாங்கினார்கள். வீட்டில் சைக்கிள் ஓட்டும் பெண்கள்கூட ஆண் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திய ஆண்களுக்கான சைக்கிளைத்தான் பயன்படுத்தினார்கள். நதியா சைக்கிள் பிரபலமான பின் தான் லேடிஸ் சைக்கிள் பிரபலமானது. ஊரில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்.