UNLEASH THE UNTOLD

Month: March 2022

பாக்கெட் உணவுப்பொருட்களில் குழந்தைகளை எச்சரிக்கும் வாசகங்கள் இடம்பெறுமா?

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) பாக்கெட் உணவுகளுக்கான நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சர்க்கரை மற்றும் கொழுப்பின் அனுமதிக்கப்பட்ட அளவை மீறும் உணவுகள், உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளின்படி, அவை எந்த அளவிற்குக் குறிப்பிடுகின்றன என்பதைக் காட்டும் சிவப்பு மற்றும் பச்சை அடையாளங்கள் பாக்கெட்டின் வெளியில் அச்சிடப்பட வேண்டும் என்ற விதிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. ஆனால், உணவு நிறுவனங்கள் சர்க்கரைக்கு உள்ள மாற்று பெயர்களான கார்ன் சிரப், பிரக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ் என்று சாமர்த்தியமாக பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுவிடுகின்றன.

பண்பாட்டுக் கட்டமைப்பு எனும் பாலின ஒடுக்குமுறை

பெண்ணடிமைத் தன்மையிலிருந்து தங்களுக்கு விலக்களிப்பதற்கு உடை குறித்தான சிந்தனைத் தெளிவு வேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர். தனக்கான வெளியைத் தானே தேர்வுசெய்ய வேண்டும்; தனக்குப் பிடித்தமான உடையை அணிந்து தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக நிமிர்ந்து நடைபோட வேண்டுமென்கிறார். பெண்களின் உடலை, உடையை யாரேனும் விமரிசித்துக் குறைகூறினால், மோசமாகப் பேசினால் அது அவர்களின் அறியாமையையே வெளிக்காட்டுகிறது என்பதைப் பெண்களே புரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு நிறுவவும் முற்படுகிறார். பெண்களின் ஆளுமைத்திறன் பேராற்றல் மிக்கது, அதை வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் உடல். அந்த உடலைப் பற்றி எந்தக் குற்றவுணர்வும் பெண்களுக்கு இருக்கக்கூடாது.

கண்ணீருக்கு விடைகொடுப்போம் கண்மணிகளே!

அன்றாட  வாழ்க்கையில் பிரச்னைகளையும் வலிகளையும் எதிர்கொள்ளும் சூழல் பெண்களுக்கே அதிகம். இந்தச் சூழலை நமது சமூகம் பெண்கள் குழந்தைகளாக வளரும் போதிருந்தே இயல்பாகவே அறிமுகப்படுத்துவதோடு, அதை நியாயப்படுத்தவும் செய்கிறது. 

இடப்பெயர்கள்: மனித நினைவுகளின் எச்சங்கள்

மனிதன் நடந்த இடத்திற்கெல்லாம் இடப்பெயர்களும் நகர்ந்தன. அதாவது, மனிதர்கள் இடம் பெயர்ந்தபோது, அவர்கள் தங்கள் இடப் பெயர்களை எடுத்துச் சென்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காகிதப் பூக்கள் - சோலு

என் அப்பா என் அம்மாவை கொடுமை செய்தார். மனமுடைந்த என்னுடைய அம்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். என் அம்மாவினுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட என்னை அனுமதிக்கவில்லை.

நேசித்து வாசிப்போம்!

பல வீடுகளில் பெண்கள் தொடர்கதைகளை ஒரே புத்தகமாக வைத்திருப்பார்கள். இவ்வாறும் பல கதைகள் வாசிக்கக் கிடைக்கும். அவற்றிக்கு எடுத்துக் காட்டாக, ஜாவர் சீதாராமன் எழுதிய ‘மின்னல் மழை மோகினி’, ‘உடல் பொருள் ஆனந்தி’, கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

அரசுப் பள்ளிகள் வெற்றிநடை போடுமா?

“அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”

உடை அனைவருக்கும் பொதுவாகட்டும்!

ஓ, இதுதான் பிரச்னையா? உடை என்பதில் ஏன் இப்படி உயர்வு, தாழ்வு வந்துச்சுன்னு பேசுவோம். ஆதிமனிதர்கள் உடை போட்டிருந்தாங்களா? இன்னும் சில பழங்குடி மக்கள் முதன்மை வாழ்க்கை முறையில் உடை இல்லாம இருக்காங்க. ஆதிமனிதர்கள் தொடக்கத்தில் உடை போடாமத்தான் இருந்தாங்க. நாமதான் குரங்குல இருந்து பல கோடி வருசமா பரிணாமம் அடைஞ்சு மனிதனா வளர்ந்திருக்கோம்னு அறிவியல் அறிஞர் டார்வின் சொன்னார்ல்லயா…” எனத் தொக்கி நின்றது வாக்கியத்தோடு நிறுத்தினார் ஆஷா.

மண்ணும் பெண்ணும்

வரலாற்றுப் பெருமைமிக்க, பௌதீக வசீகரமிக்க, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஓர் அழகிய மாங்கனி வடிவ தேசத்தை போர், தீவிரவாதம், இனக்கலவரம் எனப் பிரச்னை கொண்ட கண்ணீர்த்துளி தேசமாக மட்டுமே உலகின் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் சமீபக்கால பதிவுகளிலிருந்து மாறுபட்ட, இலங்கையின் சிறப்புகள், தொன்மைகள், வாழ்வியல் முறை குறிப்பாகப் பெண்கள் குறித்து நானறிந்த, நான் உணர்ந்த சில துளிகளைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

இளம்வயதினரிடம் என்ன கேட்கலாம்?

குழந்தைகளாக இருந்தால், “என்ன பாடம் பிடிக்கும்?”, “உன் நண்பர்கள் யார்?”, “என்ன விளையாடப் பிடிக்கும்?” என்று பிரச்னை இல்லாமல் எதையோ கேட்கலாம். வளர்ந்தவர்களிடம் என்ன பேசுவது?