UNLEASH THE UNTOLD

கலியா முதல் சீனிக்கிழங்கு பதநீர் பாகு வரை

மருமக்கமார் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கும்போது, புதுப்பெண் மாப்பிள்ளையை அழைத்துத் திருமண விருந்து தரும்போது, விடுமுறையில் பிள்ளைகள் எல்லாம் வீட்டில் கூடியிருக்கும்போது இப்படிச் சில தருணங்களில் நெய்ச்சோறுடன் விருப்பமாகச் சமைத்துப் பரிமாறப்படும் உணவு கலியா.

அபிநயா

“எம்மாடி… ரண்டு வருஷம் கண்ணு மூடி துறக்கதுக்குள்ள போயிரும். போனுலயே எங்க இருந்தாலும் நேருல பாத்து பேசிக்கலாமாமே. அதுல அடிக்கடி பாத்துகிட்டா போச்சி. நீ கலங்காம மவராசியா போயிட்டு வாடி என் ராஜாத்தி . உங்க தாத்தனும் இப்படித்தான் சிலோனுக்குப் போய் தொழில் பாத்தாவல்ல. அந்த வாரிசு இறங்காம இருக்குமா?” என்று தேற்றியவர், அவள் சென்றதும் வருத்தப்படுவார் என்று தெரியும். அவள் சென்னைக்கு படிக்கச் சென்ற போதே ஒரு வாரமாகச்  சரியாகச் சாப்பிடாமல் வருந்தினார் என்று அம்மா சொல்லியிருந்தார் .

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...

தேடலைத் தனக்குள் ஆரம்பிக்கும் பயிற்சி கைவந்துவிட்டால் வானமே உங்கள் வசம்தான். மனம் உணர்வு கொந்தளிப்பில் இருக்கும் போதெல்லாம், உணர்வை விட்டுவிட்டு நாம் நம்மில் மூழ்கி விட ஆரம்பிப்போம்.

முத்தழகி

“உன் சுயநலத்துக்காக அப்பாவி பிள்ளைகளை பலி கொடுப்பியா? இதுதான் கடைசி. அதுவும் அந்த அம்மா முகத்துக்காக செய்யறேன். இனிமேல் இப்படி வந்த… நானே போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்”, வார்டனிடம் உறுமிய டாக்டர்,  “அட்மிஷன் போடுங்க, ஆனா ரெக்கார்ட்ஸ் எதுவும் வேணாம்”, என நர்சிடம்  மெல்லிய குரலில் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

அய்யா வழி சனாதனத்துக்கு எதிரானது

சாதிக்கோட்பாடுகளை தகர்த்தெறியும் அய்யாவழி மரபுக்கும், தலையில் பிறந்தவனென்றும், காலில் பிறந்தவனென்றும் பிறப்பால் சாதி பிரிக்கும் சனாதனத்துக்கும் எங்ஙனம் பொருந்தும்?

பக்தியா அல்லது பயமா?

இருப்பதே மூன்று சதவிகிதத்தினர், இதிலே இவ்வளவு பிரிவுகள், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான சம்பிரதாய பழக்கவழக்கங்கள் என இருக்கின்றன. இதில், பெருவாரியாக நான் நேரில் கண்டு உணர்ந்த உண்மைகளை மட்டுமே இந்த கட்டுரைத் தொகுப்பில் எழுதுகிறேன்.

7. எழுத்தை ஆயுதமாக்கிய பெண்கள்

சினிமா எப்போதும் பெண்களைக் கோழைத்தனத்துடன் அழுதுவடிந்த முகமாகவே சித்தரிக்கிறது. எப்போதும் பெண்கள் ஆணின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறது. நாயகி பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் நாயகன் காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் சினிமாவில் எழுதப்படாத விதிகள்.

ஆசிஃபா முதல் மஹுவா மொய்த்ரா வரை 

சாதி, மதம், கடவுள் என்கிற அனைத்தும் பெண்களை அடிமையாக்கக் கண்ட உத்திகளே. ஆனால், பாஜக சாதி, மதவாதம், சனாதனம் ஆகியவையே பிரதானமாகக் கொண்டு அரசியல் செய்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு கட்சி நாட்டை ஆண்டால் பெண்கள் போராடிப் பெற்றுள்ள இத்தனை ஆண்டுகாலச் சுதந்திரமும் சமத்துவமும் இனி வரும் காலங்களில் வெறும் கனவாகவே சென்றுவிடும் சாத்தியங்கள்தாம் அதிகமாக உள்ளன. பெண்களின் ஓட்டு அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே பெண்களாகிய நாம் நம் முன்னேற்றத்தை மனதில் கொண்டு சிந்தித்து வாக்களிப்போமாக!

தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் குணம் மாறாது!

இந்தப் படத்தில் வரும் பெண்ணும் படித்திருப்பாள், நல்ல இடத்தில் வேலை செய்வாள். ஆனால், அந்தக் காதலில் இருந்து வெளியே வருவதைப் பற்றி அவள் யோசித்திருக்கவே மாட்டாள். அது நல்ல உறவில்லை என அவளுக்கும் தோன்றி இருக்காது. ஒரு தோழி மட்டும் அறிவுரை கூறுவாள். “நீங்கள் தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் தன்மை மாறிவிடப் போவதில்லை.”

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

திருநெல்வேலியிலோ பாளையங்கோட்டையிலோ உள்ள  கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டு வழக்கமாக அவள் திரும்புவது போல் இன்று தோன்றவில்லை. சோகமே உருவமாக அவள் முகமும், வழக்கத்துக்கு அதிகமான அவள் பைகளும், தலையில் முக்காடிட்டவாறு அவளோடு அமர்ந்திருக்கும் அவள் மாமியும் இந்தச் சந்தேகத்தைக் கொடுத்தது.