UNLEASH THE UNTOLD

Tag: Yamini

உணர்வு சூழ் உலகம் - புதிய தொடர்

மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்துகொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், “அது போன வாரம், இது இந்த வாரம்.”

முடிவில்லா விளையாட்டு...

துன்பம் வரும் போது இதை நினைவுகூர்ந்தால் வாழ்வு இந்தத் துன்பத்தோடு முடியப் போவதில்லை என்பது மனதிற்குப் புரியும். இந்த நிகழ்வு தந்த அனுபவத்தை மனதில் இருத்தி, அடுத்து வரும் இன்பத்தை எதிர்கொள்ள மனம் தயாராகும்.

துயரிலிருந்து எளிதில் வெளிவர...

நாம் இயற்கையின் அன்பிற்குப் பாத்திரமானவர்கள் என்ற உணர்வு வரும்போது அதற்கான முதல் தகுதியாக மற்றவரின் மேல் பரிவும் கருணையும் கூடிவிடும். அவர்கள் இடத்தில் இருந்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்துக் கொண்டால், எந்த முயற்சியும் செய்யாமலே நீங்கள் மற்றவரின் மேல் பரிவு காட்ட ஆரம்பித்து விடுவீர்கள்.

உறவாடும் திறனை மேம்படுத்துவது எப்படி?

தோல்வி வரும் போது, அதையும் குழுவாக ஏற்றுக் கொண்டாலும், அதைத் தலைமைதான் தோளில் சுமக்க வேண்டும். இல்லாவிடில் தோல்வி வரும்போது தன் பெயர் கெட்டு விடுமென எவரும் புதிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள்.

தலைமைக்கு முதல் தகுதி?

தலைவர்கள் எப்போதும் வேலையைச் சரியாக நடத்துவதில் கவனம் செலுத்துவதில்லை, அதைச் செய்பவர்கள் சரியான மனநிலையில் நல்ல உத்வேகத்தோடு இருக்கிறார்களா என்றுதான் பார்ப்பார்கள். வேலையைச் செய்யும் மனிதர்கள் சரியாக இருந்தால் வேலை நிச்சயமாகப் பிரமாதமாக அமையும்.

தன்னை வென்றவர் உலகை வென்றதுதான் சரித்திரம்!

உங்களைக் குணபடுத்திய பிறகு நீங்கள் உங்களைக் காயப் படுத்தியவர்களையும் குணபடுத்தலாம். அவர்களையும் ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்களாக மாற்றும் மனநிலை உங்களுக்கு வருமென்றால், எத்தனை உன்னதமான நிலை அது!

எதிர்மறை உணர்வுகளுக்கான தீர்வுகளைக் காண்போம்

யாரோ ஒரு குழந்தையின் மலர்ந்த புன்னகை, ஏதோ ஒரு வயதோகருக்குச் செய்யும் உதவி, முகமறியா மனிதரின் துயரத்தைத் துடைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் நம் மூளையில் டோபமைன் என்கிற வேதிப் பொருளைச் சுரக்க வைக்கும். இயற்கையாகவே நாம் மகிழ்வாக உணர்வோம்.

எதிர்மறை உணர்வுகள்

உங்கள் மனநலனில் பிரச்னை இருக்கலாம் என்று ஓரளவு தெரிந்தவுடன், அதற்காகப் பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம். உடனடியாகச் செய்ய வேண்டியது உங்களால் முடிந்த உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும்தான். இரண்டும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் தொடர் பயிற்சி கைகொடுக்கும்.

சவாலே சமாளி

சவாலைப் பிரச்னையாகப் பார்க்கும் ஒருவர், அதை வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்கிற சந்தேகத்துடனும் பயத்துடனும் எதிர்கொள்கிறார். இந்த மனநிலையில் நாம் மிகச் சிறியவராகவும், பிரச்னை பெரிதாகவும் தோன்றும். நம்மைவிடப் பலமான எதிரியிடம் கண்டிப்பாகத் தோற்போம் என்கிற மனநிலையில் தோல்விக்கே வாய்ப்பு அதிகம். அதையும் மீறி ஜெயித்தால் அவர் அதிர்ஷடத்தையோ கடவுளையோதான் காரணம் சொல்லுவாரேயன்றி தன் திறமையை அல்ல. அப்போது ஒவ்வொரு சவாலும் மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரும். மன அழுத்தம் நம் சிந்திக்கும், செயல்படும் திறனை மொத்தமாக அழித்துவிடும். வாழ்வு முழுவதும் போராட்டம்தான். சவால்கள் சாபம்தான்.

முடிவெடுக்கும் கலை

இங்கு முதல் கேள்வி நம் முடிவுகளை நாம் எடுக்கிறோமா என்பது. நாம் எடுக்கும் முடிவிற்கே நாம் பொறுப்பேற்க முடியும். அது தவறாகும்பட்சத்தில் மாற்று வழியைச் சிந்திக்க முடியும். பெற்றவர்கள், அறிஞர்கள், கற்றவர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆலோசனைகள் சொல்லலாம். ஆனால், அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். இதைச் சின்னச் சின்ன முடிவுகளில் பழகும்போதுதான் வாழ்வை மாற்றக் கூடிய விஷயங்களில் நாம் தடுமாற்றமின்றி செயல்பட முடியும்.