எப்படி இருந்தாலும் குத்தமா?
பெண்களின் முன்னேற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்ட சமூகம், பெண்கள் வேலைக்குச் சென்றால் மட்டும் சும்மாவா விடப் போகிறார்கள்? கணவன், குழந்தையைவிட அவளுக்குக் காசுதான் முக்கியம் என்று அடுத்த அம்பைப் பாய்ச்ச தயாராகவல்லவா இருக்கிறார்கள்.
அலுவல் பணிச் சுமையின் காரணமாக, மாதத்தில் என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடும் விஷயம் மட்டும் வெளியே தெரிந்துவிட்டால் போதும், ஒரு நாள்கூட வீட்டில் அந்தப் பெண் சமைக்கிற பழக்கமே கிடையாது என்று அடுத்த கதை கட்டத் தொடங்கிவிடுவாார்கள்.