UNLEASH THE UNTOLD

Tag: women

கோபம் பிறரை மட்டுமல்ல, தன்னையும் அழிக்கும்...

கோபம் என்பது சிறு தீப்பொறி போல், தான் பற்றித் தொடங்கியவற்றிலிருந்து யாவருக்கும் தொற்றி எல்லோரையும் அழிக்க வல்லது மட்டுமல்ல, தன்னையே எரிக்கும் பெரும் தீ. அதைச் சுடராக வைத்துக்கொள்வது சம்பந்தப்பட்ட நமது கைகளில்தாம் உள்ளது.

ராணித் தேனீக்கள்...

நமது சமகால ராணி எலிசபெத் காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அதனாலேயே அவரால் நெடுங்காலம் ராணியாக நிலைத்திருக்க முடிந்தது. அவரது வாகனம் தனிச்சிறப்பு பெற்றது. பதிவெண் இல்லாதது. அவருக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்மீது யாரும் எந்தவிதமான வழக்குகளும் பதிய இயலாது. இப்படிப் பல்வேறு தனிப்பட்ட சலுகைகள் இருந்தாலும் அத்தனைக்கும் அவர் கொடுத்த ஒரே விலை தனது சுதந்திரத்தையும் முடிவெடுக்கும் உரிமையையும்தான்.

வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது...

‘வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது, நீங்கள் செய்வதை விரும்புவது மற்றும் நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை விரும்புவது’ என்கிறார் மாயா ஏஞ்சலோ.

உங்களுக்காகவும் பேசுங்கள்!

மற்றவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்னால், உங்களுக்கு நீங்கள் உதவி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவரவர்களின் செயல்களுக்கான நியாயங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னால், உங்கள் நியாயங்களைக் கருத்தில் வையுங்கள்.

சிரி... சிரி... சிரி...

சிரிப்பு நம் கவலைகளை எல்லாம் மறக்க வைக்கும் மாமருந்து. முன்பின் அறியாதவரைக்கூட நட்பில் இணைக்கும் ஓர் அன்புச் சங்கிலி. உடல்நலனோடு மனநலனையும் சீர்படுத்தும் வல்லமை கொண்டது. சிரிப்பு என்பது மனிதர்களால் மட்டும் செய்யக்கூடிய ஒரு செயல். மனிதன் பேசத் தொடங்கும் முன்னரே சிரித்துதான் மற்றவரிடம் தொடர்பு கொண்டிருந்திருக்கக்கூடும். உலகம் முழுமைக்கும் மொழியறிவு தேவைப்படாத ஒரு பொது மொழி, சிரிப்பு மட்டுமே. இது வயது, பாலினம், நிறம், தேசம், இனம் என்ற எல்லாவற்றையும் உடைத்துப் போடுகிறது. எளிதாகப் பிறரது இதயத்திற்குள் ஊடுருவுகிறது. 

‘வாழ்க்கை என்பது கற்றுக்கொண்டே இருத்தல்!’

நாம் பிறந்ததிலிருந்து நம் கூடவே இருப்பது யார் என்றால், அது நாம்தான். இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் எப்போதும் – நம்மோடு நாம்தான் இருக்கிறோம். ஆனால், நமக்குப் பிடித்த மனிதர்கள் வரிசையில் நாமே, நம்மைச் சொல்ல மறந்திருப்போம்.

சின்னச் சின்ன ரசனையில்தானே ஜீவன் இன்னும் இருக்கு...

நாம் தினமும் சாதாரணமாகக் குடிக்கும் காபிக்கும் 5 கி.மீ. நடந்து பரிசாக அடையும் காபிக்கும் ருசியில் அவ்வளவு வித்தியாசம் இருக்கும். அது அவ்வளவு மேம்பட்டு ருசிக்கும். தின வாழ்வை இப்படியான சின்னஞ்சிறிய விஷயங்களால், நாம் சுவாரசியப்படுத்திக்கொள்ளலாம்.

கடமையைச் செய்யாமல் ஒரு நாள்...

தன் நேசிப்பின் முழு முதல் படியை, ‘நமக்காக நேரம் ஒதுக்குதல்’ என்பதில் தொடங்குங்கள். அது அரை மணியோ ஒரு மணியோ உங்களுக்காக ஒதுக்குங்கள். அதில் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

பெண்விடுதலை - குடும்பங்களில் ஆண்கள் பங்கு

இங்கு உண்மையாக, நேர்மையாக, திருமண வாழ்வில் ஈடுபாட்டுடன் வாழ்கிற ஆண்கள், பாதுகாப்பு உணர்வுடன், பெண் விடுதலையினால் தங்களுக்கும் நன்மையே என உணர்ந்து, தன்னையும் முன்னேற்றிக்கொண்டு, பெண்கள் முன்னேற்றத்திலும் உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

சுயமரியாதையுடன் கொண்டாடுவோம்!

வேலைக்குச் சென்று சாதிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்து சாதனையாளர்களை உருவாக்கினாலும் சரி, இன்று பெண்களுக்குச் சுயமரியாதை இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஓங்கும் கைகளைத் தடுக்கும் சக்தி பெண்களுக்கு வேண்டும். தன்னுடைய தேவை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லும் தின்மை வேண்டும்.