UNLEASH THE UNTOLD

Tag: women

மாரத்தான் ஓடப் பழகு

“சுயநலமாக இருங்கள். உங்கள் குழந்தைகள், குடும்பத்திற்காகச் சுயநலமாக இருங்கள். எனக்குப் புற்று நோய் பரிசோதனை செய்யும் போது என் மகளுக்கு நான்கு வயது. இப்போது என் மகள் இருபது வயதைத் தாண்டிவிட்டாள். நம் குழந்தைகள், குடும்பம் ஆகியவற்றிற்காகத் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம்.”

ஹார்மோர்ன் எனும் ரிங் மாஸ்டர்

ஒருவிதக் கிளர்ச்சியும் பயமும் குழப்பமுமாக இருக்கும் அந்தப் பெண் குழந்தைக்குத் தேவை எல்லாம், இதெல்லாம் இந்த வயதில் வரும் உணர்வுதான், இங்கே வா என அணைத்துகொண்டு தேற்றி அதில் இருந்து அவளை மென்மையாக மீட்டு, அவள் குழப்பங்களை, பயங்களை சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அன்பு மட்டுமே.

‘லட்சியம்’ கெட்ட வார்த்தையா?

திருமணத்தின் போது கணவரின் பணியிடம் செல்ல வேலையைவிட நேரும் பெண்கள், குழந்தைப்பேறுக்கான நேரத்தைத் திட்டமிட, தீர்மானிக்க உரிமை மறுக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பில் இணையர் சிறிதும் பங்கெடுக்காத பெண்கள், குழந்தை வளர்ப்பை முழு நேரமாகச் செய்யாததற்கு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பிற்காக எடுக்கும் விடுப்புகளுக்கு பணியிடங்களிலும் சமூகத்திலும் தண்டிக்கப்படும் பெண்கள் தங்கள் கனவுகளை எப்படிப் பின்தொடர முடியும்?

'ஒட்டகச்சிவிங்கி' பெண்கள்

படவுங் (கயான் லாவி) கயான் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இரண்டு வயதிலிருந்தே கழுத்து வளையச் சுருள்களை அணியத் தொடங்குகிறார்கள். சுருளின் நீளம் படிப்படியாக இருபது திருப்பங்களாக அதிகரிக்கப்படுகிறது. வளையங்களின் மொத்த எடை ஐந்து கிலோ இருக்கும். சுருள்களின் எடை இறுதியில் கழுத்துப்பட்டை எலும்பின் மீது போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தும், இதனால் அவை நீண்ட கழுத்து போன்ற தோற்றத்தை உருவாக்கும்.

குங் ஃபூ பௌத்த பிக்குணிகள்

காத்மாண்டுவில் உள்ள துருக் கவா கில்வா மடத்தில் பௌத்த பிக்குணிகளுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலைகள் கற்பிக்கப்பட்டன. குங் ஃபூ , தற்காப்புக்காகவும் அவர்களது உள் மற்றும் வெளிப்புற வலிமையை வளர்ப்பதற்காகவும், தியானத்தில் கவனம் செலுத்தவும், வலுவாக இருக்கவும், மற்றவர்களுக்காகக் கடினமாக உழைக்கவும் உதவியது.

தட்டை மாத்திக்கலாமா?

பன்னிரண்டு மணி உச்சி வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் மேனி ஒரு வாரத்தில் கறுத்துவிடும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு, மொட்டை மாடியில் மகனை நிற்க வைத்தார் அப்பா பரமசிவன். அருண் மயங்கி விழுந்து அக்கம்பக்கத்தினர் தூக்கிக்கொண்டு வந்ததும் பரமசிவனின் மனைவி பார்வதி, “என் புள்ளைய இனிமே இப்படிக் கொடுமைப்படுத்துன, நடக்குறதே வேற” என்று கணவனை நையப்புடைத்ததும் வரலாறு.

சிலந்தி வலை சின் பெண்கள்!

பச்சைக் குத்தல் ஊசிகள் பழங்கால நடைமுறையில், மூன்று கூர்மையான மூங்கில் துண்டுகளை ஒன்றாகக் கட்டியோ மூங்கில் முட்களாலோ செய்யப்படுகின்றன. மாட்டுப் பித்தம், புகைக்கரி, இலைகள், புல் தளிர்கள் மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் கலவையை வைத்து பச்சைக் குத்தும் மையைத் தயாரிக்கிறார்கள். இலைகள் நிறத்தைக் கொடுக்கின்றன, புகைக்கரி கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. புல் தளிர்கள் இறுதியில் சேர்க்கப்படுகின்றன. இது இயற்கையாகக் குணப்படுத்தும் முகத்தின் மறைப்பாகச் செயல்படுகிறது.

பூக்கரு

“இங்க பாரு பூவு, ஒன்னு வச்சேன்னு வையி, வாய் கொட்டாவி விட்டுக்கும். எங்கம்மாவைப் பாத்தியா எப்டித் தவிச்சு நிக்குதுன்னு? அது ஆசைப்பட்டுச்சுன்னுதான் நான் உன்னை இங்க வச்சிக்க சம்மதிச்சேன். இப்ப உன்னால அதுக்கு எதுவும் ஆச்சுன்னு வையி வெளுத்துடுவேன்” என்று சட்டைக் கைகளை மடித்தான் சரவணன்.

சோகை தவிர்ப்போம்; வாகை சூடுவோம்!

கிராமங்களில் பெரும்பாலும் மாதசுழற்சி உதிரப்போக்கை ‘தீட்டு’ எனக் கூறுவார்கள். அது கெட்ட ரத்தம் என்பார்கள். ஆனால், அது தவறான புரிதல். அது எவ்வகையிலும் கெட்ட ரத்தம் அல்ல. மனித இனம் உற்பத்தியாகும் மிகச்சிறந்த புனிதமான பேராற்றல் கொண்ட கர்ப்பபையில் இருந்து வரும் மாதசுழற்சி உதிரப்போக்கு எப்படித் தீட்டாக முடியும்? அது தீட்டெனில் அங்கிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தீட்டாகிறான் என்று சொல்வீர்களா?

டிபன் பாக்ஸ்

லஞ்ச் வேண்டாம் என்று காலையில் என்கிட்ட சொன்னால் என்ன? அவள்தானே இன்னிக்கு லெமன் ரைஸ் கேட்டாள். அவளுக்கு மட்டும் தனியாகச் செய்து கொடுத்தால், இப்படிச் செய்கிறாள். என்ன பண்ணுவது? எல்லாம் நம் தலையெழுத்து என்று புலம்பிக்கொண்டே லஞ்ச் பேக்கை உள்ளே வைத்துவிட்டு, தேநீர் கோப்பையை எடுத்தாள். பால் ஏடுகட்டி ஆறிப் போயிருந்தது. என்ன வாழ்க்கை இது? ஒரு டீகூட நிம்மதியா குடிக்க முடியவில்லை.