UNLEASH THE UNTOLD

Tag: women

இதுதான் நீ வேலைக்குப் போற லட்சணமா?

ஜஸ்டினுக்குப் பதற்றமாக இருந்தது. இது வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் பணியாற்றி வந்தவனுக்குப் புதிய வேலையும் பதவி உயர்வும் கிடைத்திருந்தது. ஆனால், ஒரு சிக்கல். இருபாலரும் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்குக் கணிதம்…

அவள்... அவன்... மேக்கப்...

அலங்காரம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் அழகு மட்டுமே எல்லாம் என்கிற கருத்தை நம்மீது திணித்து வருவது கண்டிக்கத்தக்கது. அக் கருத்து தவிர்க்கப்பட வேண்டியதும்கூட. பெண்கள் ஒப்பனை செய்துகொள்வது குறித்தான நகைச்சுவைகள் (?) காலாவதியான காலத்திலும்கூட பெண்களின் ஒப்பனைப் பேசு பொருளாகத்தான் இருக்கிறது. அழகான ஆடை அணிந்து, ஒப்பனை செய்து கொண்டு வெளியிலோ அலுவலகத்திற்கோ ஏதேனும் நிகழ்வுகளுக்கோ செல்வது அனைவருக்கும் பிடிக்கும்தானே? பின் ஏன் பெண்கள் ஒப்பனை செய்வதையே இந்தச் சமுதாயம் கேலி செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது?. 

இரண்டாம் மும்மாதம்

18வது வாரம்

குழந்தை விரல் சூப்புவது, கொட்டாவி விடுவது இதை எல்லாம் தெளிவாக ஸ்கேன் மூலம் காணமுடியும் இவ்வாரத்தில். தாயின் வயிற்றில் லேசான அசைவை கொடுத்தால்கூட கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் கண் இமைகள், கண்மணிகள் அசையும். தாயின் தொப்புளுக்குச் சற்று கீழேவரை கர்ப்பப்பை வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

கிச்சன் செட்டும் ரோபாட் செட்டும்

வெண்பாவை அருகில் அழைத்த அத்தை, அவளுக்கான பரிசுப் பொருளைக் கொடுத்தார். ரோபாட் உருவாக்கும் செட். அதற்கான செய்முறை விளக்கங்களுடன் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நிலாவே பரவசமானாள்.

“தாங்க்யூ அத்தை! போன தடவை மாதிரி கார்தான் இருக்கும்னு நினைச்சேன். இது ரொம்ப சூப்பரா இருக்கு!”

முதல் மூன்று மாத கர்ப்ப காலம்

8வது வாரம்

கண் இமைகள் திறந்து மூடும். விரல்கள் வளரத் தொடங்கும்.

வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படும் வாரம் இது. ஒரு பீன்ஸ் பருப்பின் அளவிற்குக் கரு வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

இலக்கணம் மாறுதே... 10

“எல்லார் பிறப்புக்கும் ஆதாரமாக இருக்கிற ஒரு விஷயத்தை, எப்படிக் கேவலமாகப் பேசுவதற்கு மனசு வருதுனு தெரியல. ஆணுக்கும் பெண்ணுக்கும் உச்சகட்ட மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒன்றை, தன் வாழ்வுக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை, ஏன் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை ஏன் இவ்வளவு கேவலமாகப் பேச வேண்டும்? இழிவாக இளக்காரமாக நினைக்க வேண்டும்? காரணம் என்னவாக இருக்க முடியும் நித்யா?”

ஹாய், சாப்பிட்டாச்சா?

“நீங்க இருங்க மாமா, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு வருணே எல்லாம் செய்தான். ஆனாலும் சமையலறையில் ஓர் ஓரமாக நாற்காலி போட்டு அமர்ந்தபடி மாமனார் உத்தரவுகளைப் பிறப்பிக்க, வருண்தான் ஓடியாடி எல்லாம் செய்தான். சின்ன மருமகளுக்கு மீனை இப்படிச் செய்தால் பிடிக்காது. பெரிய மருமகள் சிக்கன் தவிர எதுவும் சாப்பிட மாட்டார் என்கிற நிபந்தனைகளுக்கேற்ப ஆளுக்கு ஒன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தான் வருண்.

உடை... அதைக் கொஞ்சம் உடை...

எட்டு முழம், ஒன்பது முழம் கொண்ட புடவைகளை அணிந்து கொண்டு, எந்நேரமும் அவற்றைச் சரி செய்து கொண்டு, அந்த உடை விலகி இருக்கிறதா இல்லையா என்பதிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு இருப்பதால் பெண்களின் நேரம் வீணாகக் கழிகிறது என்பது பெரியாரின் எண்ணம். ஆண்களின் உடை அவர்களுக்குச் செளகரியமாகவும், உடுத்த எளிமையாகவும் அமைந்திருப்பதால் அவர்களால் உடை பற்றிய சிந்தனையின்றி இதர வேலைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது என்பது அவரது வாதம். அதனால் பெண்களும் ஆண்கள் போல எளிமையான உடை அணிய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மைதான், அணிவதற்கும், கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற எளிய உடைகள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

இலக்கணம் மாறுதே... 9

“வீட்டில இருந்த அருண், அவனோட காலேஜ் டேஸ் கேர்ள் பிரெண்டோட பேச ஆரம்பிச்சான். ரெண்டு பேரும் அனுப்பியிருந்த மெசேஜை வாசிச்ச எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அருண் கிட்ட சண்டை போட்டு அழுது புரண்டேன். வீட்ட எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக்குத் தாங்க முடியாத வலியா இருந்திச்சி. அந்தப் பொண்ணு கிட்ட பேசவே கூடாதுனு சத்தியம் வாங்குனேன்.

ஒரு தீபாவளி அரட்டை..

“தாங்க்ஸ். முடிஞ்சா வரேன். ஆனா, நீ ரெண்டு நாள் ஜாலியா பேச்சலரெட் லைஃப் எஞ்சாய் பண்ணு. இங்கே பாரு, உங்க அங்கிளை… எங்கேயும் போகாம என் உயிரை எடுத்துக்கிட்டு இருக்கு. மூட்டு வலி, முதுகு வலின்னு ஆயிரம் இருக்கு. யாரு சாப்பிடப் போறா, பேசாம விடுன்னா கேட்காம உட்கார்ந்து பலகாரம் பண்ணிக்கிட்டு இருக்கு. அப்புறம் கை வலிக்குது, உடம்பு வலிக்குது, டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போன்னு என் உயிரை எடுக்கும்.”