ஆணுக்கு (ம்) அவசியம் பாலியல் கல்வி
ஆணுக்குப் பாலியல் கல்வி அளிப்பதன் மூலம் ஆணாதிக்கம், பாலியல் பாகுபாடு, பெண் அடிமைத்தனம் போன்றவை ஒழியும். பாலியல் கல்வி இல்லாத ஆண்பிள்ளை வளர்ப்பு இன்னோர் ஆணாதிக்கவாதியைத்தான் உருவாக்கும்.
ஆணுக்குப் பாலியல் கல்வி அளிப்பதன் மூலம் ஆணாதிக்கம், பாலியல் பாகுபாடு, பெண் அடிமைத்தனம் போன்றவை ஒழியும். பாலியல் கல்வி இல்லாத ஆண்பிள்ளை வளர்ப்பு இன்னோர் ஆணாதிக்கவாதியைத்தான் உருவாக்கும்.
“பெண்கள் எல்லாரும் படித்துப் பொருளாதார நிலையில் முன்னேறிவிட்டதால் ஆண்களை மதிப்பதில்லை. எல்லாரும் குடும்பம் நடத்தாமல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்கள்” என்பது பெண்களின் மீது வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டு. புள்ளி விவரங்களின்படி ஒரு சதவீதம் திருமணங்கள் மட்டுமே விவாகரத்து வரை செல்கின்றன. எதன் அடிப்படையில் இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டைப் பெண்கள் மீது வெட்கமின்றி சுமத்துகிறீர்கள் எனக் கேட்டால், “தேவாவே சொன்னான்” என்பது மாதிரி நானே பாதிக்கப்பட்டேன். குடும்ப நீதிமன்றத்தில் என் கண்ணாலேயே பார்த்தேன். நீங்களும் வேண்டுமானால் வந்து பாருங்கள் என்று கோயில் வாசலில் பிச்சை எடுக்க செட்டு சேர்ப்பவர்கள் மாதிரி பதில் சொல்கிறார்கள்.
ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்தப் பொருள் பற்றிய பயன்பாட்டின் தேவையை அறிந்துகொள்ள முயற்சித்தாலே தேவையில்லாத பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும். பணமும் வீட்டில் இடமும் மிச்சமாகும்.
ஒரு பிறந்தநாளைக் கொண்டாட இயலாத பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. கொண்டாட முடியும் என்பவர்களும் வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது எனக்கெதற்கு என்று தியாகம் செய்துவிடுகிறார்கள். இந்த உலகில் என்னுடைய வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்று சொல்ல ஏன் எல்லாப் பெண்களாலும் முடிவதில்லை?
நீங்கள் ‘வழிதவறி’ நடந்தாலும் உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்தான் உங்களுக்கு ‘நல்ல வாழ்வு’ கிடைத்திருக்கிறது. உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இதனை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் கற்புடன் நடந்துகொள்ளுங்கள்.
நிலா வீட்டுக்குள் நுழைந்ததும் வருணின் தம்பியும் ஒன்று விட்ட மச்சினர்களும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே உள்ளறைக்கு ஓடிவிட்டார்கள். மீசை லேசாக அரும்பத் தொடங்கி இருந்த பையன் ஒருவனைக் கையைப் பிடித்து இழுத்தாள் நிலா.
”எங்க பாப்பாவும் தம்பியும் வீட்டுக்கு வரமாட்டிங்கறாங்க? லீவ்னா அக்கா வீட்ல உரிமையா வந்து தங்குனாத்தான எனக்கு சந்தோசமா இருக்கும். எவ்ளோ முறை கூப்பிட்டிருக்கேன், பாப்பான்னா வரவே மாட்டிங்கிறா. சின்னதா இருந்த போதெல்லாம் வந்தா, இப்போ பெரியவளாயிட்டு சுத்தமா வரமாட்டிங்கிறா! எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள் பாரதி.
சில நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பும் அளவிற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெற்றாலும் இன்றும் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மிக மிகக் குறைவுதான். ஆயிரம் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதில் ஒருவர்தான் ஆண். இது ஏதோ இந்தியாவின் பின்தங்கிய மாநிலத்தின் நிலை இல்லை. தமிழகத்தில்தான் என்று ஒரு தரவு சொல்கிறது.
“நிலா, என்ன சொல்ற? உனக்கு அது தப்புன்னு தோணலியா?” வருணின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.
“என்ன தப்பு? அது அவங்க ப்ரைவசி. அதுல நீ மூக்கை நுழைக்கிறதுதான் தப்பு. பொம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க. உங்கம்மா பார்க்க மாட்டாங்கன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்று நக்கலாகக் கேட்டாள் நிலா.
இந்தக் காலத்து ஆண்களே இப்படித்தான். திருமணத்துக்கு முன்பு நல்ல மனைவி வேண்டும் என்று விரதமிருக்கிறீர்கள், கோயிலுக்கு நடையாக நடக்கிறீர்கள், மாமனார் மெச்சும் மருமகனாக இருக்க வேண்டுமென்று வீட்டு வேலைகள் செய்து பழகுகிறீர்கள். திருமணம் என்று ஒன்று நடந்து மனைவியும் கொஞ்சம் நல்லவளாக அமைந்து விட்டால் போதும். அவரது அன்பிலும் செல்லத்திலும் அப்படியே மயங்கிச் சோம்பேறியாகி விடுகிறீர்கள்.