UNLEASH THE UNTOLD

Tag: Society

<strong>திருமணமும் தாய்மையும்</strong>

ஓர் ஆண்/பெண் திருமணத்துக்குப் பெற்றோர் மட்டும்தான் காரணமா? இல்லை. நாகரிகமான சமூகம் என்று பீற்றிக்கொள்ளும் நம் சமூகத்தின் மறைமுக அழுத்தமும் காரணம். குறிப்பிடதக்க வயதில் வீட்டில் பெண் அல்லது ஆண் இருந்தாலே, ‘என்ன இன்னும் உங்க பிள்ளைக்குத் திருமணம் செய்யவில்லையா?’ எனப் பலர் முன்னிலையில் கூச்சமே இல்லாமல் அந்தப் பெற்றோரையும் பிள்ளைகளையும் கேட்டு சங்கடப்படுத்துவார்கள். இது அநாகரிகம் என்ற சுரணை இன்றுவரை நமது பொது சமூகத்துக்கு இல்லை.

பிரஷர் போடாதீர்கள் பெற்றோர்களே!

ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு ரகம். அவரவர் திறமையை அவரவர் அடையாளம் கண்டுகொள்ளவே அதிக கால அவகாசம் தேவைப்படும், அதுவும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அப்படி இருக்க, அவர்களின் திறமையைப் பரீட்சை வைத்து, மதிப்பெண் அடிப்படையில் ஒரே அளவுகோலில் அளவிட இயலாது என்பதே உண்மை.

<strong>அறிந்தும் அறியாமலும்</strong>

பதின் பருவத்துக்கு வந்த குழந்தைகளிடம் குடும்பநிதி நிலையைத் தெளிவாக விளக்கி, பொறுப்புகளை ஒப்படைத்தால் நம்மைவிட அதிக கவனமாகச் செலவு செய்வார்கள். செல்லம் கொடுப்பது வேறு, அவர்களை சுதந்திரமாக வளர்த்தல் வேறு. இது இரண்டுக்குமான வித்தியாசம் புரியாமல்தான் பல பெற்றோர்கள் கோட்டை விடுகிறார்கள்.

அந்தக் கொடூரத்தை நிலா புரிந்துகொள்வாளா?

“வருண் தங்கம், தயவு செஞ்சு இதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு. யார் கிட்டயும் இதைச் சொல்லிடாதே. உங்க மாமாவைப் பத்தி நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்டி என் மகனையே…” தலையில் அடித்துக்கொண்டு அப்பா அழுததைப் பார்க்க வருணால் பொறுக்க முடியவில்லை.

ஆலயப் பிரவேசமும் ஐஸ்வர்யாவும்

“கடவுளுக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. மேலும், என் கோயிலுக்கு இவர்கள் வரக் கூடாது, அவர்கள் வரக் கூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதேபோல, இதைச் சாப்பிடக் கூடாது, இது தீட்டு என்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாம் உருவாக்கின சட்டங்கள்தாம்.

வாழ்வியலுக்கான அறத்தைக் கற்றுக்கொடுங்கள்!

பள்ளியில் ஆசிரியர் குழந்தைகளோடு உரையாடும்போதோ பாடம் கற்பிக்கும் போதோ இடையிடையே அன்றாட செய்திகளைப் பற்றிய உரையாடல்களோ அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற ஆளுமைகளையோ அறிமுகப்படுத்துங்கள்.

ஹார்மோர்ன் எனும் ரிங் மாஸ்டர்

ஒருவிதக் கிளர்ச்சியும் பயமும் குழப்பமுமாக இருக்கும் அந்தப் பெண் குழந்தைக்குத் தேவை எல்லாம், இதெல்லாம் இந்த வயதில் வரும் உணர்வுதான், இங்கே வா என அணைத்துகொண்டு தேற்றி அதில் இருந்து அவளை மென்மையாக மீட்டு, அவள் குழப்பங்களை, பயங்களை சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அன்பு மட்டுமே.

ஏன், எதற்குச் சிரித்தார்கள்?

இப்போது இந்த வேலைதான் அவனது ஜீவாதாரம் என்று அறிந்து கொண்ட பின்பு அவளையும் அவளது உழைப்பையும் மலிவாகவே எடை போடத் தொடங்கி இருந்தார்கள். எந்தப் புள்ளியில் அக்கறை அவமரியாதையாக மாறுகிறது, அதற்குத் தன்னுடைய எந்த நடவடிக்கை காரணமாக இருந்தது என்ற மன உளைச்சலில் தவிக்கத் தொடங்கி இருந்தான் சிபி.

அவனுடைய செய்கைக்கு அவனே பொறுப்பு!

ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு காரணம் தன் வீட்டார், தான் தவறு செய்யும்போது தனக்கு உறுதுணையாக இருப்பார்கள், தன்னைக் காப்பாற்றுவார்கள் என்னும் எண்ணமே. மாறாக நாம் அவனிடம் நீ செய்யும் தவறுக்கு நீயே பொறுப்பு என்பதை சிறுவயதில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். எப்படி இன்னொரு வீட்டு ஆண் தவறு செய்யும்போது அவனைச் சட்ட ரீதியாகத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருகிறதோ அதேபோல நம் வீட்டு ஆண்மகனும் அவ்வாறு தவறு செய்யும்போது சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் நம் பெற்றோர்களுக்கு வரவேண்டும்.

‘லட்சியம்’ கெட்ட வார்த்தையா?

திருமணத்தின் போது கணவரின் பணியிடம் செல்ல வேலையைவிட நேரும் பெண்கள், குழந்தைப்பேறுக்கான நேரத்தைத் திட்டமிட, தீர்மானிக்க உரிமை மறுக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பில் இணையர் சிறிதும் பங்கெடுக்காத பெண்கள், குழந்தை வளர்ப்பை முழு நேரமாகச் செய்யாததற்கு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பிற்காக எடுக்கும் விடுப்புகளுக்கு பணியிடங்களிலும் சமூகத்திலும் தண்டிக்கப்படும் பெண்கள் தங்கள் கனவுகளை எப்படிப் பின்தொடர முடியும்?