UNLEASH THE UNTOLD

Tag: india

<strong>நாங்கள் இந்தியர்கள் இல்லையா?</strong>

“ஸ்கூல்ல டீச்சர் என்ன கூப்டாங்க. நா போய் நின்னேன். டீச்சரு என் பேர கேட்டாங்க. நா செய்யது அலி பாத்திமானு சொன்னேன். உடனே, ‘அவங்களா நீங்க?’னு கேட்டாங்க. அப்டினா என்னங்குற மாதிரி அமைதியா முழிச்சிட்டு நின்னேன். ‘அலி’னா என்னனு தெரியுமானு கேட்டாங்க. நா தெரியாதுனு சொன்னேன். என்னைய அனுப்பிட்டு பக்கத்துல இருக்கற டீச்சர்கிட்ட ஏதோ சொல்லி சிரிச்சாங்க. ஏன் மாமா அப்டி பண்ணாங்க…”

<strong>நீர் ஜனநாயகம்</strong>

சாதி, வர்க்கம், வசிக்கும் பகுதிகளின் ஆண்மைய மனப்பான்மை ஆகிய எல்லாவற்றையும் பொறுத்து பெண்களின்மீதான நீர்ச்சுமை அதிகரிக்கிறது. இந்தப் படிநிலைகள் நீங்கலாகப் பார்த்தாலும் நீர்ப் பிரச்னைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தாம். “உலக அளவில் நீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளைச் சேர்ந்த 80% குடும்பங்களில் நீர் சேகரிப்பது பெண்களின் தனிப் பொறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், உலக அளவில் நீர் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க பதவிகளில் 17% மட்டுமே பெண்கள்” என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று.

பெண் கல்வி பொருளாதார இழப்பா?

“இந்தா பாருங்க, என்னை எடுத்துக்கோங்க… நான் பொண்ணுன்னு என்னை 12 ஆவதோட நிறுத்திருந்தா நீங்க சொல்ற மாதிரி நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கிருப்பேனா? இப்படி வைத்தியம் பார்க்கத்தான் என்னால முடிஞ்சிருக்குமா? உங்க பொண்ணு நல்லா படிக்கும்ன்னு சொல்றீங்க. நல்லா படிக்க வைங்க. உங்களால முடிலைன்னா அரசாங்கம் உதவித்தொகை குடுக்குது. சமூகத்துல பல நல்ல உள்ளங்கள் இருக்கு. அவங்க உதவியை நாம எடுத்துக்கலாம்.”

விடுதலை... விடுதலை... விடுதலை...

வெண்முடி சூடிய வேந்தனாம் இமையனும்
விந்திய மலையனும் வாழ்த்துங்கள்!
தண்ணிய கீழ்மேல் மலைகளும் பழனி
நீலமா மலையும் வாழ்த்துங்கள்!

வானிடமிருந்து நீரினை வழங்கும்
கங்கையும் யமுனையும் வாழ்த்துங்கள்!
தேனுறு நீரினைத் தென்னவர்க் களிக்கும்
பொன்னியும் பொருனையும் வாழ்த்துங்கள்!

பெண்விடுதலை - குடும்பங்களில் ஆண்கள் பங்கு

இங்கு உண்மையாக, நேர்மையாக, திருமண வாழ்வில் ஈடுபாட்டுடன் வாழ்கிற ஆண்கள், பாதுகாப்பு உணர்வுடன், பெண் விடுதலையினால் தங்களுக்கும் நன்மையே என உணர்ந்து, தன்னையும் முன்னேற்றிக்கொண்டு, பெண்கள் முன்னேற்றத்திலும் உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

சுயமரியாதையுடன் கொண்டாடுவோம்!

வேலைக்குச் சென்று சாதிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்து சாதனையாளர்களை உருவாக்கினாலும் சரி, இன்று பெண்களுக்குச் சுயமரியாதை இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஓங்கும் கைகளைத் தடுக்கும் சக்தி பெண்களுக்கு வேண்டும். தன்னுடைய தேவை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லும் தின்மை வேண்டும்.

அருணாவும் சுதந்திரப் போராட்டமும்

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அருணாவின் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. 1942ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன், முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்து, ஆங்கிலேய அரசு சிறையிலடைத்தது. 33 வயது அருணா, மும்பையில் உள்ள கோவாலியா மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்றிப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

பெண்ணுக்கான சுதந்திரம் எப்போது?

பெண்களுக்கான இடம் இந்தச் சுதந்திர இந்தியாவில் எங்கு இருக்கிறது என்று பார்த்தால், நாம் இன்னும் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத இடத்தில் உள்ளோம். இன்று சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வேண்டுமானால் பெண்கள் சுதந்திரம் பெற்று வளர்ச்சி அடைந்து விட்டதைப் போல ஒரு பாவனை தோன்றும். ஆனால், நமது மக்கள் தொகையில் ஆண்-பெண் பிறப்பு விகிதம் குறித்துப் பார்க்கும் போது பெண்களுடைய வளர்ச்சி எங்கு உள்ளது?

போகும் பாதை தூரமே...

ஆணும் பெண்ணும் சமமென்ற நிலையை எட்ட இன்னும் நெடுந்தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான பல அடிகளை இப்போது நாம் எடுத்து வைத்திருக்கிறோம். நிச்சயமாக மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட...

நகை போட்டால் தான் ஊரில் மதிப்பார்கள் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைத் தெரிந்தவர்கள், நாலு தடவை நகை போட்டு வரவேண்டியது தானே என்பார்கள். பின் இவள் இப்படித்தான் எனக் கடந்து போய்விடுவார்கள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கென்றே இப்போது ஓராயிரம் ஆபரணங்கள் வருகின்றன. அவற்றை அணிந்து பாதுகாப்பாகப் பயணிப்போம்.