UNLEASH THE UNTOLD

Tag: india

   பாராட்டக் கற்றுக் கொள்வோம்...

உண்மையாகப் பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் எல்லாருக்கும் புரிந்துவிடும். நம்பகத்தன்மை மறைந்துவிடும். ஆனால் தயக்கமின்றிப் பாராட்டுதல் இரு சாராருக்கும் மனமகிழ்ச்சி தரும். வெறுமனே பாராட்டாமல் அவர்கள் செயலில் ஒரு சிறு பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்கள் இன்னும் உற்சாகமாகி, நிறைய நல்லவற்றைக் கற்றுக் கொள்வார்கள். மட்டுமின்றி அவர்களும் பிறரைப் பாராட்டும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களை வாழ்க்கையில் பன்மடங்கு உயர்த்தும். இணையரைப் பாராட்டும் போது வாழ்க்கை மிக இனிதாக மாறும். அக்கம் பக்கத்தினரைப் பாராட்டினால் இணக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். உறவுகள், நட்புகளைப் பாராட்டும் போது அவை நல்லதாகத் தொடரும். தன்னிடம் பணிபுரிபவர்களைப் பாராட்டும் போது இருதரப்புமே மகிழ்ச்சி அடையும். வேலையும் சிறப்பாக நடக்கும்.

மாட்டிறைச்சி பொது உணவு இல்லையா?

இந்தியாவில் மட்டும்தான் உணவு அரசியலாக்கப்படுகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது இந்து மதத்திற்கு, இந்தியாவிற்கு, இந்துக்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களிலும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துக்களில் தங்களை உயர்சாதியினராகக் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள் மட்டுமே உண்பதில்லை. இருப்பினும் பண்டைய இந்தியாவில் அனைத்து சாதியினரும், குறிப்பாக இந்துக்களும் மாட்டிறைச்சியை உண்டனர். பெளத்த மற்றும் சமண மதத்தின் எழுச்சிக்குப் பின்னரே சைவ உணவு என்பது இந்து தர்மமாகப் பார்க்கப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் (Avenshi Centre for Women’s Studies, 2012).

பெண் விஞ்ஞானிகள் எப்படிப்பட்ட உடைகளை அணிவது சரியாக இருக்கும்?

ஒருவர் சிறந்த விஞ்ஞானியா இல்லையா என்பது அவர் செய்யும் வேலையைப் பொறுத்தது, உடையைப் பொறுத்தது அல்ல. ஆண் விஞ்ஞானிகள் என்று வரும்போது இந்தத் தெளிவான பார்வை இருக்கும். ஆனால், பெண் விஞ்ஞானிகளுக்கு அந்த சௌகரியம் இருப்பதில்லை. பெண்களை எல்லா இடத்திலும் பின்தொடரும் உடைப் பிரச்னை ஸ்டெம் துறையிலும் அவரைப் பாதிக்கிறது என்பதே கவலைக்குரிய நிதர்சனம். ஸ்டெம் பெண்களுக்கும் உடைக்குமான தொடர்பில் பல்வேறு இழைகள் உண்டு.

தினமும் என்னைக் கவனி...

நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார்.

அடையாள அரசியல் – சாதகமா, பாதகமா?

அவரவர் பிரச்னைகளை அவரவரே போராடித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று இருந்தால் சமூக மற்றம் நிகழவே நிகழாது. சுரண்டல் இல்லாத சமுதாயத்தைப் படைக்க அனைவரும் அவரவர் அடையாளங்கள் மத்தியில் கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அனைத்து மக்களும் சமம்தான் என்கிற எண்ணத்தோடும் தோழமை உணர்வோடும் ஒன்று சேர்ந்து போராடுவதே தீர்வாகும். மனிதனாக ஒன்றிணைவோம் வாரீர்.

நம் குழந்தைகளைச் சரியாக வளர்க்கிறோமா?  

பெற்றோர் தங்களுக்குள் ஒரு சுய அலசல் செய்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சர்வாதிகாரம் செய்யும் பெற்றோரா?, நடுநிலையுடன் நடந்து கொள்ளும் பெற்றோரா?, நட்புடன் பழகும் பெற்றோரா?, எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற பெற்றோரா? இதில் நாம் எந்த வகை என்று எந்தவித சமரசமும் இன்றி ஒப்புக் கொள்ள வேண்டும்.

அம்மா என்பவர் தியாகி?

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமணங்கள் இருக்கும். ஆனால், மகனுக்குச் சமைத்துக் கொடுக்க ஆள் வேண்டும், அவன் வெளியில் சாப்பிட்டுச் சிரமப்படுகிறான் எனத் திருமணம் செய்து வைப்பது, எல்லாம் ஒருத்தி வந்தால் சரி ஆகிடுவான் எனத் தீய பழக்கங்கள் கொண்ட மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது போன்றவை எல்லாம் நம் ஊரில்தான் நடக்கும். தீயப் பழக்கங்களை மறைத்து திருமணம் செய்து வைத்து, எத்தனை பெண்களின் வாழ்வைப் பெற்றோர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நம்மைச் சுற்றிப் பார்த்தாலேயே தெரியும்.

அன்னையர் தின வாழ்த்துகளைச் சொல்லும் முன்…

என்ன தான் குற்றவுணர்வை உண்டாக்கச் சுற்றி இருப்பவர்கள் துடித்தாலும், இந்தப் புனிதப்படுத்துதலில் சிக்கிக்கொள்ளாமல், குடும்பம் என்பது நம் ஒருவரின் பொறுப்பு மட்டுமில்லை, அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் பொறுப்புமேதான் என்று தெளிந்து, பாலினச் சமத்துவம் தன் குடும்பத்தில் உருவாகப் போராடும் ஒவ்வோர் அம்மாவிற்கும் ’அன்னையர் தின வாழ்த்துகள்.’

அர்த்தமுள்ளதா இந்த மதங்கள்?

பெண்கள் அதிகளவில் சாமியார் மடங்களிலும், கோயில்களிலும் குவியக் காரணம் என்னவென்றால் மூச்சுமுட்ட வைக்கும் வீட்டுச் சிறையில் இருந்து கொஞ்ச நேரமேனும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான். சக பெண்களைப் பார்க்கவும், கொஞ்சம் வெளிக் காற்றைச் சுவாசிக்கவும், சிறிது நேரமேனும் தனிமையில் இருக்கவுமே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அது புரியாமல் இந்தச் சாமி சமாச்சாரங்களை எல்லாம் பெண்களின் தலையில் ஆண்கள் கட்டக் காரணம் என்னவென்றால் பெண்கள்தாம் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்த தலைமுறைக்கு எளிதில் கடத்துகிறார்கள் என்பதால் தான்.

லட்சியத்தை அடையும் வழிமுறைகள்

நாம் யாரும் இயந்திரமல்ல, நிச்சயம் இதிலிருந்து அவ்வப்போது விலகுவோம். ஆனாலும் பாதைத் தெளிவாக இருந்தால்தான், விலகுகிறோம் என்பதே புரியும். இல்லாவிடில் வெகுதூரம் வந்த பின்தான் பாதை மாறியதே தெரியும். சரி செய்ய நீண்ட காலம் பிடிக்கலாம் அல்லது சரி செய்ய முடியாமலே போகலாம்.