UNLEASH THE UNTOLD

மேரியின் ஆட்டுக்குட்டி பாடல்

1830ம் ஆண்டு சாராவின் நூல் வெளியாகி உலகமெங்கும் மேரியின் ஆட்டுக்குட்டி பிரபலமானது. எந்த அளவுக்குப் பிரபலம் என்றால், உலகின் முதல் ஒலிப்பதிவுக் கருவியான ஃபோனோகிராஃபை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன், தன் சொந்தக் குரலில் அதில் முதலில் பதிவு செய்தது ‘மேரியின் ஆட்டுக்குட்டி’ பாடலைத்தான்!

உங்களுக்காகவும் பேசுங்கள்!

மற்றவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்னால், உங்களுக்கு நீங்கள் உதவி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவரவர்களின் செயல்களுக்கான நியாயங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னால், உங்கள் நியாயங்களைக் கருத்தில் வையுங்கள்.

சிரி... சிரி... சிரி...

சிரிப்பு நம் கவலைகளை எல்லாம் மறக்க வைக்கும் மாமருந்து. முன்பின் அறியாதவரைக்கூட நட்பில் இணைக்கும் ஓர் அன்புச் சங்கிலி. உடல்நலனோடு மனநலனையும் சீர்படுத்தும் வல்லமை கொண்டது. சிரிப்பு என்பது மனிதர்களால் மட்டும் செய்யக்கூடிய ஒரு செயல். மனிதன் பேசத் தொடங்கும் முன்னரே சிரித்துதான் மற்றவரிடம் தொடர்பு கொண்டிருந்திருக்கக்கூடும். உலகம் முழுமைக்கும் மொழியறிவு தேவைப்படாத ஒரு பொது மொழி, சிரிப்பு மட்டுமே. இது வயது, பாலினம், நிறம், தேசம், இனம் என்ற எல்லாவற்றையும் உடைத்துப் போடுகிறது. எளிதாகப் பிறரது இதயத்திற்குள் ஊடுருவுகிறது. 

சாதி வேற்றுமைக்கு நிறம் காரணமா?

இந்தியாவில், உண்மையில் நிறம் அடிப்படையில் சாதியப் பிரிவினை தோன்றவில்லை. அனைத்து சாதிய படிநிலையிலும் மக்கள் அனைத்து நிறத் தோற்றத்தில் இருப்பதை எளிதில் காணமுடியும். இருப்பினும் இந்தக் கண்ணோட்டம் எப்படித் தோன்றியது?

‘வாழ்க்கை என்பது கற்றுக்கொண்டே இருத்தல்!’

நாம் பிறந்ததிலிருந்து நம் கூடவே இருப்பது யார் என்றால், அது நாம்தான். இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் எப்போதும் – நம்மோடு நாம்தான் இருக்கிறோம். ஆனால், நமக்குப் பிடித்த மனிதர்கள் வரிசையில் நாமே, நம்மைச் சொல்ல மறந்திருப்போம்.

மாமியார் கங்கம்மாவும் மருமகள் சுலோக்சனாவும்

கங்கம்மா, “ஏம்மா, இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிக் கண்ணுல தண்ணியும் கையில புள்ளையுமா இருப்ப, புருசன் செத்து ஆறுமாசம் ஆச்சு, பொழப்ப பாக்க வேண்டாமா? நா சொல்றத கேளு, உன்ன மாறிதான் எம்பொழப்பும், சின்ன வயசுல தாலி அறுத்தவ தனியா வாழ முடியாதுமா. நா ஆம்புள புள்ளைய பெத்ததால பொழச்சேன். நீ பொம்பள புள்ளைய பெத்து இருக்க, தனியா வாழ முடியாது. புள்ளைய எங்கையில குடுத்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ. நா பட்ட கஷ்டம் உனக்கு வேணாம்டியம்மா. எங்க காலம் வேற , உனக்கு வாழ வேண்டிய வயசு உன் புள்ளைய நா வளத்து ஆளக்குறேன், நீயும் என்ன மாதிரி நரக வாழ்க்க வாழாத. ஊரும் வுலகமும் பேசும், ஆனா ஒதவாது நா சொல்றத கேளும்மா” என்றார்.

மரகதத்தீவில் மக்கள் திலகம்

நீண்டகாலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி எனச் சிக்கித் தவிக்கிறது இலங்கை திரைப்படத்துறை. அதனால், இந்தியாவில் இருந்து வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களே இலங்கைத் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.

உறவுகளில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம், வாங்க!

இவர்கள் எல்லாரிடமும் ஒரே தன்மைதான். அது தாங்கள் காயப்படுவோம் என்று தெரிந்தேதான், அவர்கள் தங்கள் உறவுகளுக்காகச் செய்கின்ற செயல்களைச் செய்து வருகிறார்கள். தன்னுடைய மகிழ்ச்சிக்காக அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தேர்ந்தெடுப்பது இதையே.

சின்னச் சின்ன ரசனையில்தானே ஜீவன் இன்னும் இருக்கு...

நாம் தினமும் சாதாரணமாகக் குடிக்கும் காபிக்கும் 5 கி.மீ. நடந்து பரிசாக அடையும் காபிக்கும் ருசியில் அவ்வளவு வித்தியாசம் இருக்கும். அது அவ்வளவு மேம்பட்டு ருசிக்கும். தின வாழ்வை இப்படியான சின்னஞ்சிறிய விஷயங்களால், நாம் சுவாரசியப்படுத்திக்கொள்ளலாம்.

ஓடி விளையாடுவோமா?

இந்தியர்களில் மூன்றில் ஒருவர்தான் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. படிப்பும் மதிப்பெண்களுமே முக்கியம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. விளையாட்டு வீராங்கனைகளுக்கு 30 சதவீதத்திற்கும் குறைவான இடமே வழங்கப்படுகிறது.