UNLEASH THE UNTOLD

பயன்பாட்டில் இருந்த பொருட்கள்

பொதுவாகக் கருங்காலி மரத்தில் இருந்து உலக்கை செய்யப்படுகிறது. தண்டு, இலை எங்கும் முட்கள் கொண்ட இந்த மரம் பார்க்க மிக அழகாக இருக்கும். கருங்காலி மரம் மிகவும் வலிமையானது. அதனால் பல பொருட்கள் கருங்காலி மரத்திலிருந்து செய்கிறார்கள். மரத்தை வெட்டப் பயன்படும் கோடரிக்கான கைப்பிடி பெரும்பாலும் கருங்காலி மரத்திலிருந்துதான் செய்கிறார்கள். மர இனத்தை அழிப்பதற்கு அது துணை செய்கிறது என்பது போல தன் இனத்தை அழிப்பதற்குத் துணை செய்பவர்களைக் ‘கருங்காலி’, ‘இனத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு’ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் முதல் பெண்கள் பள்ளி, அதைத் தாங்கிப் பிடிக்கும் ஆசிரியர்கள்!

“இங்கு இளம் சிறாருக்கு அடிப்படை கல்வியறிவு தரப்படுகிறது. பெண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. கோயில்களில் ஆடும் தேவதாசிப் பெண்களுக்கு மட்டும் கல்வி கற்பிக்கப்படுகிறது” – சீகன்பால்கு

குழந்தைகள் ஆளுமைகளாக வழிகாட்டுவோம்!

சிறுவயசுல சில விஷயங்களைத் தனித்துச் செயல்பட பழக்கலாம். தான் அணியும் துணிகளைத் தேர்ந்தெடுத்தல், வளரிளம் பருவத்துல தனித்துச் செயல்பட வழிகாட்டிட்டு, பிழை செய்யின் அப்பவே குறுக்கிடாம அதற்குப் பிறகு அந்தச் செயல் குறித்து உரையாடலாம். இந்த உரையாடல் அவர்களோட செயல்பாட்டை நெறிப்படுத்தும். அதைவிடுத்து நாம் அறிவுரை வழங்கிட்டே இருந்தோம்னா அவர்கள் அதை என்னவென்றுகூடக் கேட்க மாட்டார்கள். மாறாகத் தன்னை மனிதனாக அங்கீகரிக்காதது போல உணர்கிறார்கள். அவர்களை அங்கீகரித்து பொறுப்புகள் வழங்கி பெருமூளையை வலுப்படுத்துவோம்.

மேரியின் ஆட்டுக்குட்டி பாடல்

1830ம் ஆண்டு சாராவின் நூல் வெளியாகி உலகமெங்கும் மேரியின் ஆட்டுக்குட்டி பிரபலமானது. எந்த அளவுக்குப் பிரபலம் என்றால், உலகின் முதல் ஒலிப்பதிவுக் கருவியான ஃபோனோகிராஃபை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன், தன் சொந்தக் குரலில் அதில் முதலில் பதிவு செய்தது ‘மேரியின் ஆட்டுக்குட்டி’ பாடலைத்தான்!

உங்களுக்காகவும் பேசுங்கள்!

மற்றவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்னால், உங்களுக்கு நீங்கள் உதவி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவரவர்களின் செயல்களுக்கான நியாயங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னால், உங்கள் நியாயங்களைக் கருத்தில் வையுங்கள்.

சிரி... சிரி... சிரி...

சிரிப்பு நம் கவலைகளை எல்லாம் மறக்க வைக்கும் மாமருந்து. முன்பின் அறியாதவரைக்கூட நட்பில் இணைக்கும் ஓர் அன்புச் சங்கிலி. உடல்நலனோடு மனநலனையும் சீர்படுத்தும் வல்லமை கொண்டது. சிரிப்பு என்பது மனிதர்களால் மட்டும் செய்யக்கூடிய ஒரு செயல். மனிதன் பேசத் தொடங்கும் முன்னரே சிரித்துதான் மற்றவரிடம் தொடர்பு கொண்டிருந்திருக்கக்கூடும். உலகம் முழுமைக்கும் மொழியறிவு தேவைப்படாத ஒரு பொது மொழி, சிரிப்பு மட்டுமே. இது வயது, பாலினம், நிறம், தேசம், இனம் என்ற எல்லாவற்றையும் உடைத்துப் போடுகிறது. எளிதாகப் பிறரது இதயத்திற்குள் ஊடுருவுகிறது. 

சாதி வேற்றுமைக்கு நிறம் காரணமா?

இந்தியாவில், உண்மையில் நிறம் அடிப்படையில் சாதியப் பிரிவினை தோன்றவில்லை. அனைத்து சாதிய படிநிலையிலும் மக்கள் அனைத்து நிறத் தோற்றத்தில் இருப்பதை எளிதில் காணமுடியும். இருப்பினும் இந்தக் கண்ணோட்டம் எப்படித் தோன்றியது?

‘வாழ்க்கை என்பது கற்றுக்கொண்டே இருத்தல்!’

நாம் பிறந்ததிலிருந்து நம் கூடவே இருப்பது யார் என்றால், அது நாம்தான். இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் எப்போதும் – நம்மோடு நாம்தான் இருக்கிறோம். ஆனால், நமக்குப் பிடித்த மனிதர்கள் வரிசையில் நாமே, நம்மைச் சொல்ல மறந்திருப்போம்.

மாமியார் கங்கம்மாவும் மருமகள் சுலோக்சனாவும்

கங்கம்மா, “ஏம்மா, இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிக் கண்ணுல தண்ணியும் கையில புள்ளையுமா இருப்ப, புருசன் செத்து ஆறுமாசம் ஆச்சு, பொழப்ப பாக்க வேண்டாமா? நா சொல்றத கேளு, உன்ன மாறிதான் எம்பொழப்பும், சின்ன வயசுல தாலி அறுத்தவ தனியா வாழ முடியாதுமா. நா ஆம்புள புள்ளைய பெத்ததால பொழச்சேன். நீ பொம்பள புள்ளைய பெத்து இருக்க, தனியா வாழ முடியாது. புள்ளைய எங்கையில குடுத்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ. நா பட்ட கஷ்டம் உனக்கு வேணாம்டியம்மா. எங்க காலம் வேற , உனக்கு வாழ வேண்டிய வயசு உன் புள்ளைய நா வளத்து ஆளக்குறேன், நீயும் என்ன மாதிரி நரக வாழ்க்க வாழாத. ஊரும் வுலகமும் பேசும், ஆனா ஒதவாது நா சொல்றத கேளும்மா” என்றார்.

மரகதத்தீவில் மக்கள் திலகம்

நீண்டகாலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி எனச் சிக்கித் தவிக்கிறது இலங்கை திரைப்படத்துறை. அதனால், இந்தியாவில் இருந்து வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களே இலங்கைத் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.